கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Friday, April 26, 2013

    தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில திறன் வளர்க்க ‘ரேடியோ இங்கிலீஷ்’ திட்டம் - இது சார்பாக ஜூலை 5ல் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

    சென்னை லயோலா கல்லூரியின் ஆங்கிலத் துறை தலைவர் பிரான்சிஸ் தலைமையிலான குழு இப்பயிற்சியை வடிவமைத்துள்ளது. தொடக்கப்பள்ளிக் குழந்தைகளுக்கு ரேடியோ ஆங்கில பயிற்சி அளிக்கும் திட்டத்தின் முதல் கட்டமாக, வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

    பயிற்சி பெற்ற ஆசிரியர் பயிற்றுனர்கள், ஜூலை 5ல் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கருத்தாய்வு மையங்களில் (சி.ஆர்.சி.) தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். இத்திட்டத்துக்காக அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் ரேடியோ வழங்கப்பட உள்ளது. ரேடியோ வழங்குவதற்கு முன் இப்பயிற்சிக்காக குழந்தைகள் தயார்ப்படுத்தப்பட உள்ளனர்.



    இது குறித்து அனைவருக்கும் கல்வி இயக்கத்தின், கோவை மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் காளியப்பன் கூறுகையில், “தொடக்கப்பள்ளிகளில் கடந்த ஓராண்டாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஏ.பி.எல்., பயிற்சி முறை வாயிலாக, ஏற்கனவே மாணவர்கள் சிறந்த ஆங்கிலத் திறனும் படைப்பாற்றலும் பெற்று வளர்கின்றனர்.

    தற்போது அமல்படுத்தப்பட உள்ள ‘ரேடியோ இங்கிலீஷ்’ பயிற்சித் திட்டமும் வழங்கப்பட்டால் தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக அரசுப் பள்ளி மாணவர்களும் ஆங்கில அறிவை பெற்று விடுவர்,” என்றார்.

    No comments:

    Post a Comment