கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Thursday, May 30, 2013

    ஓய்வு நாளிலேயேய ஓய்வூதிய பலன் ; பேராசிரியர்களுக்கு புது திட்டம்

    பேராசிரியர்கள் ஓய்வு பெறும் நாளிலேயே, ஓய்வூதிய பலன்கள் வழங்கும் புதிய திட்டத்தை, அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றபேராசிரியர்களுக்கான, ஓய்வூதிய பலன்கள் வழங்கும் விழா, சென்னை, புது கல்லூரியில்நேற்று நடந்தது. சென்னை மண்டலத்தில் உள்ள, 25 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணிபுரிந்த, 62பேராசிரியர்கள் இன்றுடன் ஓய்வு பெற உள்ளனர். 


    இப்பராசிரியர்களுக்கு,சேமநல நிதி, ஓய்வூதியம் உள்ளிட்ட ஓய்வூதிய பலன்கள், ஓய்வு நாளிலேயே வழங்கும் புதிய திட்டத்தை, உயர்கல்வி துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டம் முதல் முறையாக சென்னை மண்டலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம், ஓய்வு பெற்றபேராசிரியர்கள், தங்களின் ஓய்வூதிய பலன்களை பெறுவதற்காக அலைவது தவிர்க்கப்படுகிறது. விழாவில், உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன், ஓய்வூதிய பலன்களை வழங்கினார்.

    No comments:

    Post a Comment