கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Saturday, July 27, 2013

    தலைமை ஆசிரியர் பணி நியமனம்: ஆதிதிராவிடர் துறை 15 நாளில் முடிவு

    தலைமை ஆசிரியர் பணியிடங்கள், காலியாக உள்ள பள்ளிகளில், தலைமை ஆசிரியர்களை நியமிக்க, ஆதிதிராவிடர் நலத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பணி நியமனம், 15 நாளில் நிறைவு பெறும்.தமிழகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், 75 ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன. 


    இவற்றில், 32,708 மாணவர்; 29,618 மாணவியர் என, மொத்தம், 62,326 பேர் படித்து வருகின்றனர். இதில், 26 மேல்நிலைப் பள்ளிகளில், ஓராண்டாக, தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இப்பிரச்னை குறித்து, "தினமலர்' நாளிதழில், கடந்த, 21ம் தேதி செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள, பள்ளிகளில் விரைவில் தலைமை ஆசிரியர்களை நியமிக்க, ஆதிதிராவிடர் நலத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இது குறித்து, ஆதிதிராவிடர் நலத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "காலியாக உள்ள பணியிடம் குறித்தும், ஆசிரியர்களின் பணி மூப்பு குறித்தும், தகவல் பெற்றுள்ளோம். அடுத்த மாத துவக்கத்தில், அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர்கள் பணியாற்றுவர்' என்றார்.

    No comments:

    Post a Comment