கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Sunday, September 8, 2013

    மாணவர் சேர்க்கைக்கு நன்கொடை வசூலிப்பது சட்ட விரோதம்: தனியார் கல்லூரிகளுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

    தனியார் இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ கல்லூரிகள், நிதி நிறுவனங்கள் போல் செயல்படுகின்றன. மாணவர் சேர்க்கைக்காக, மாணவர்களிடமிருந்து, நன்கொடை என்ற பெயரில், பல கோடி ரூபாயை, வசூலிக்கின்றன. இது, சட்ட விரோதமான செயல். இதை தடுத்து நிறுத்துவதற்கு, மத்திய அரசு, தகுந்த சட்டம் இயற்ற வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


    கோர்ட்டில் மனு:


    உ.பி.,யில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஒன்று, மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க, இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி மறுத்ததை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு, நீதிபதிகள், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய, "பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.

    அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:நம் நாட்டில், இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ கல்லூரிகள், காளான்கள் போல் அதிகரித்து விட்டன. இதனால், கல்வியின் தரம் குறைந்து விட்டது. தனியார், இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ கல்லூரிகள், மாணவர்களை சேர்ப்பதற்காக, பல கோடி ரூபாயை, நன்கொடையாக, அவர்களிடமிருந்து வசூலிக்கின்றன.தகுதியும், திறமையும் வாய்ந்த ஏழை மாணவர்களுக்கு, சேர்க்கை மறுக்கப்படுகிறது. போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாவிட்டாலும், பல தனியார் இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ கல்லூரிகள், ஆண்டு தோறும், தங்களின் சீட்டுகளை அதிகரிப்பதற்கு விண்ணப்பிக்கின்றன.இந்த தனியார் கல்லூரிகள், மாணவர் நலனுக்காக செயல்படாமல், தங்கள் சொந்த நலனுக்காக செயல்படுகின்றன. கல்லூரிகள் நிதி நிறுவனங்கள் போல் செயல்படுவதால், கல்வியின் தரம் குறைந்து வருகிறது.நன்கொடை என்ற பெயரில், மாணவர்களிடம் நிதி வசூலிப்பது, சட்ட விரோதமான நடவடிக்கை. கல்லூரிகளின் இந்த நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு, மத்திய அரசு, தகுந்த சட்டமியற்ற வேண்டும்.



    சட்ட விரோத செயல்:

    மத்திய சுகாதார அமைச்சகம், சி.பி.ஐ., மற்றும் புலனாய்வு அமைப்புகள் ஆகியவை, இந்த சட்ட விரோத செயல் குறித்து விசாரித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தனியார் சுயநிதி கல்லூரிகள், மாணவர் நிதி நிறுவனங்களாக மாறுவதை தடுக்க முடியாது.இவ்வாறு, நீதிபதிகள், தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

    No comments:

    Post a Comment