கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Sunday, September 8, 2013

    பகுதிநேர ஆசிரியர்களுக்கு "இ.சி.எஸ்.,' முறையில் சம்பளம்

    முறைகேட்டை தவிர்க்க, அரசுப் பள்ளி பகுதிநேர ஆசிரியர்களுக்கு, "இ.சி.எஸ்.,' (எலக்ட்ரானிக் கிளியரன்ஸ் சிஸ்டம்) முறையில் சம்பளம் வழங்கப்பட உள்ளது.


    கடந்த, 2012ல், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், அரசு பள்ளிகளில் இசை, கைத்தொழில், உடற்கல்விப் பிரிவுக்கு, 16,549 பகுதிநேர சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு, 5,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப் படுகிறது.இத்தொகை, கிராமக் கல்விக்குழு மூலம் வழங்கப்பட்டது. இதனால், 10ம் தேதிக்கு பிறகே, சம்பளம் கிடைத்தது. இப்பணத்தை, சில பள்ளிகளில் முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும், புகார் எழுந்தது.


    இதையடுத்து, "செப்டம்பர் மாதத்தில் இருந்து, பகுதிநேர ஆசிரியர்களுக்கு, வங்கிகள் மூலம், "இ.சி.எஸ்.,' முறையில் சம்பளம் வழங்க வேண்டும்' என, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது. ஆசிரியர் களுக்கு, வங்கிக் கணக்குகள் துவங்கப்பட உள்ளன.

    No comments:

    Post a Comment