கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Tuesday, October 8, 2013

    மத்திய-மாநில அரசுப் பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% ஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

    மத்திய-மாநில அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


    இவ்வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு முன்னிலையில் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்புக் கூறியது. அதில், ""பல்வேறு காரணங்களினால் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது. அது வருத்தத்துக்குரியது. இந்நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவேண்டியது அரசின் கடமை. எனவே,மத்திய-மாநில அரசுப் பணிகளில் (அனைத்து துறைகள் மற்றும் நிறுவனங்களில்) மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்.

    அனைத்துப் பிரிவினருக்கான மொத்த இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மேல் போகக் கூடாது என்ற விதிமுறை மாற்றுத்திறனாளிகளுக்குப் பொருந்தாது. மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய-மாநில அரசுகள் வரும் 3 மாதத்திற்குள் நிரப்ப வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    No comments:

    Post a Comment