கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Saturday, October 12, 2013

    சி.பி.எஸ்.இ., பாணியில் பொதுத்தேர்வு கேள்வித்தாள்... மாற்றம்! : நிபுணர் குழுவின் அறிக்கை இந்த மாத இறுதியில் தயார்

    சி.பி.எஸ்.இ., பாணியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு கேள்வித்தாள் அமைப்பை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, தீவிர ஆய்வு செய்து வரும், சி.பி.எஸ்.இ., முன்னாள் தலைவர், பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழு, இம்மாத இறுதிக்குள், அறிக்கையை தயார் செய்துவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


    தற்போதைய கேள்வி அமைப்பு முறையில், மாணவர்கள், அதிகளவில் மதி"ப்பெண் எடுக்கின்றனர். ஆனால், உயர்கல்விக்கு சென்றதும், "அரியர்ஸ்' வைக்க துவங்கி விடுகின்றனர்.
    இதற்கு, சூபள்ளி பொதுத்தேர்வு கேள்வித்தாள் அமைப்பு சரியில்லை' என, பலரும் குற்றம் சாட்டுகின்றனர். பதிலை, அப்படியே, மனப்பாடம் செய்து எழுதுவது போன்ற முறையில் கேள்விகள் இருப்பதாக, ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
    பள்ளி அளவிலேயே, சிந்தித்து, விடையை எழுதும் வகையில், கேள்விகள் அமைந்தால், மாணவர்களின் திறமை வெளிப்படும் என்றும், இந்த முறையினால், உயர் கல்வியையும் சிறப்பாக எதிர்கொள்ள முடியும் என்றும், கல்வித்துறை கருதுகிறது.
    சி.பி.எஸ்.இ., முன்னாள் தலைவர், பாலசுப்பிரமணியன் தலைமையில், தமிழக அரசு அமைத்துள்ள நிபுணர் குழு, கேள்வித்தாள் அமைப்பை மாற்றி அமைக்கும் பணியில், மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
    சி.பி.எஸ்.இ., பாணியில், மாணவர்களின் அறிவுக்கூர்மையை வெளிப்படுத்தும் வகையிலான கேள்விகளை அமைக்க, நிபுணர் குழு திட்டமிட்டுள்ளது.
    மேலும், விடைத்தாள் கட்டுகளை கையாள்வதில் ஏற்படும் பிரச்னைகளை களைந்து, பாதுகாப்பான முறையில், தேர்வு மையங்களில் இருந்து, விடைத்தாள்களை எடுத்துச்செல்வதற்கான வழிமுறைகள் குறித்தும், இந்த குழு, பரிந்துரைகளை அளிக்க உள்ளது.
    இது குறித்து, கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், சூஇம்மாத இறுதிக்குள், அறிக்கை தயாராகிவிடும் என, எதிர்பார்க்கிறோம். முதல்வர் அனுமதி அளித்ததும், கேள்வித்தாள் அமைப்பு முறை, வெளியிடப்படும். புதிய திட்டத்தின்படி தயாரிக்கப்படும் கேள்வித்தாள், 2015 16ம் கல்வி ஆண்டில் அமலுக்கு வரும்' என்றார்.

    No comments:

    Post a Comment