Pages

Friday, August 31, 2012

கல்வி உதவித்தொகை பெற ஆதிதிராவிடர் வருமான உச்ச வரம்பு உயர்வு

நரிக்குறவர் என்கிற குருவிக்காரர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவ , மாணவிகள் 10ம் வகுப்பிற்கு மேற்பட்ட படிப்புக்கான கல்வி உதவித்தொகை பெற பெற்றோர், பாதுகாவலர் ஆண்டு வருமான வரம்பு 1 லட்சத்தில் இருந்து 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டி லேயே இந்த உயர்வு நடைமுறைக்கு வரும்.

இதனால் அரசுக்கு ஆண்டுக்கு 34 லட்சத்து 83 ஆயிரத்து 750 கூடுதல் செலவு ஏற்படும். இதேபோன்று, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள நரிக்குறவர் என்கிற குருவிக்காரர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார்.

No comments:

Post a Comment