Pages

Wednesday, September 26, 2012

எட்டு மாவட்ட A.E.E.O.,வுக்கு வரும் 29ல் ஆய்வுக்கூட்டம்

மத்திய மண்டலத்தைச் சேர்ந்த, உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம், வரும், 29ம் தேதி, அமைச்சர் சிவபதி தலைமையில் நடக்கிறது.திருச்சி மத்திய மண்டலத்தைச் சேர்ந்த, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுகை, கரூர், தஞ்சை, நாகை,

 
திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த, உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான (ஏ.இ.இ.ஓ.,) ஆய்வுக்கூட்டம், வரும், 29ம் தேதி, திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.அமைச்சர் சிவபதி, பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் சபீதா, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தேவராஜன், தொடக்கக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வரன் முருகன் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். எட்டு மாவட்டங்களை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட ஏ.இ.இ.ஓ.,க்கள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.கூட்டத்தில், தொடக்கக்கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் முப்பருவக்கல்விமுறை குறித்தும், தமிழக அரசால் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும், 14 வகையான இலவசப் பொருட்கள் விநியோகம் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படவிருக்கிறது.

No comments:

Post a Comment