இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் பிரவீண்குமார் செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் பேசியதாவது: 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்களது பெயர்களை சேர்ப்பது தொடர்பாக அக்டோபர் மாதம் 2, 14, 25 ஆகிய தேதிகளில் அந்தந்த வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளது.
இதில் பெயரினை சேர்த்துக்கொள்ள விண்ணபிக்கலாம். அதே போன்று வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள அக்டோபர் 1 முதல் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் . இவ்வாறு பிரவீண்குமார் தெரிவித்தார். மேலும் ஆன்லைன் வாயிலாகவும் வாக்காளர் பட்டியலில் பிழைதிருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம் எனவும் கூறினார்.
No comments:
Post a Comment