பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதி, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவியரின் முடிவுகள், வியாழக்கிழமை, தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது
தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா வெளியிட்ட அறிவிப்பு:கடந்த ஆண்டு, அக்டோபரில் நடந்த தனித்தேர்வை எழுதி, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த தேர்வர்களின் முடிவுகள்,www.dge.tn.nic.inஎன்ற இணையதளத்தில், வியாழன் வெளியிடப்படும். மதிப்பெண்களில் மாற்றம் உள்ள தேர்வர்களுக்கு, புதிய மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்குவது குறித்து, விரைவில், தபால் வழியாக தெரிவிக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment