Pages

Saturday, March 23, 2013

கல்லூரிகள் 25ம் தேதி திறப்பு: உயர் கல்வித்துறை அறிவிப்பு

இலங்கையில், தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிக்காத மத்திய அரசு மற்றும் அரசியல் கட்சிகளை எதிர்த்து, தமிழகத்தில்,கல்லூரி மாணவர்கள், தொடர் போராட்டத்தில், ஈடுபட்டுள்ளனர். சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க, அனைத்து கல்லூரிகளுக்கும், விடுமுறை அறிவிக்கப்பட்டது. நிலைமை சீராகி உள்ளதை அடுத்து, நாளை (25ம் தேதி), கல்லூரிகள் திறக்கப்படும் என, உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. பொறியியல் கல்லூரிகள் திறப்பு தேதி குறித்து, பின்னர் அறிவிக்கப்படும் என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில், தேர்வு தேதிகளும், விரைவில் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment