Pages

Wednesday, May 29, 2013

2013-2014 ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் அரசாணை (டி1) எண்.129 பள்ளிக்கல்வித்துறை, நாள்.09.05.2013ல் விதியில் திருத்தம்


2013-2014 ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் விதியில் திருத்தம் - அரசு பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்களுக்கு பெண்ணாசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்.

திருத்தம்
2. அரசாணை (டி1) எண்.129 பள்ளிக்கல்வித்துறை, நாள்.09.05.2013ல் கீழ்கண்டவற்றை பத்தி 15 ஆக சேர்க்கப்படுகிறது.

15) 2013-2014 ஆம் கல்வியாண்டில் அரசு பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களில் பெண் ஆசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். அரசு ஆண்கள் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும்
காலிப்பணியிடங்களில் ஆண் ஆசிரியர் மற்றும் ஆண் தலைமை ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்
. இருபாலர் பயிலும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு பொது மாறுதல் விதிகளின் படி ஆண் மற்றும் பெண் ஆசிரியர்கள் / தலைமை ஆசிரியர்களுக்கு மாறுதல் அளிக்கலாம். தற்பொழுது பணிபுரியும் ஆசிரியர் / தலைமை ஆசிரியர்களுக்கு இவ்விதி பொருந்தாது.

No comments:

Post a Comment