மழலையர் பள்ளிகளுக்கு அங்கீகாரம்: கோர்ட் அதிரடி தீர்ப்பு
மழலையர் பள்ளிகளுக்கு அங்கீகாம் தேவை என கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கோவையைச் சேர்ந்த தனியார் பள்ளிநிர்வாகம் தொடர்ந்த வழக்கில், மழலையர் பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரம் வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இந்தவழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் ஆஜரான வக்கீல், மழலையர் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் தர தேவையில்லை என வாதிட்டார். இதனையடுத்து சென்னை ஐகோர்ட், பிறப்பித்த உத்தரவில், மழலையர் பள்ளிகளுக்கு அங்கீகாரம் தேவையில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது என்றும், தனியார் பள்ளி ஒழுங்குமுறை சட்டப்படிதான் மழலையர் பள்ளிகள் இயங்க வேண்டும் எனவும், எனவே அரசின் அங்கீகாரம் கட்டாயம் தேவை என்றும் , சம்பந்த பள்ளி அரசின் அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
No comments:
Post a Comment