பீகாரில் சுமார் 3 லட்சம் பள்ளி ஆசிரியர்கள் நாளை(ஜூலை 25) முதல் மதிய உணவு திட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்
பீகாரில் சுமார் 3 லட்சம் பள்ளி ஆசிரியர்கள் நாளை(ஜூலை 25) முதல் மதிய உணவு திட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். கடந்த வாரம் ரசாயன பொருட்கள் கலந்த மதிய உணவு சாப்பிட்ட 23 குழந்தைகள் உயிரிழந்ததை அடுத்து பீகார் அரசின் மதிய உணவு திட்டத்தின் மீது ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மாநில துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதன் தலைவர் பரஜ்நந்தன் சர்மா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment