Pages

Saturday, January 11, 2014

0-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை (Genuinity) ஆன்-லைனிலேயே உடனுக்குடன் சரிபார்க்கும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது தமிழகஅரசு தேர்வுத் துறை.

படித்த இளைஞர்கள் அரசுப் பணிகளில் சேரும் போதும் அல்லது மேல் படிப்பிற்காக கல்லூரிகளில் சேரும்போது அவர்களின் அடிப்படை கல்வித் தகுதியான 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை பரிசோதிக்கப்படும். சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது துறைகள் மூலமாக பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பி வைக்கப்படும். அவை அரசுத் தேர்வுத் துறைக்கு அனுப்பப்பட்டு சரிபார்க்கப்பட்டு சம்பந்தப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உரிய தகவல் தெரிவிக்கப்படும்.

No comments:

Post a Comment