Pages

Monday, March 31, 2014

தேர்தல் பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை : அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை

தேர்தல் பணிக்கு, தேர்வு செய்யப்பட்டுள்ள ஊழியர்கள், பணிக்கு வராவிட்டால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் தெரிவித்தார்.


ஒருங்கிணைந்த பி.எஸ்சி., பி.எட். படிப்பு: விண்ணப்பிக்க மே 2 கடைசி தேதி

மத்திய அரசு கல்வி நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எஸ்சி.,பி.எட். படிப்பு மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு (சி.இ.இ.-2014) அறிவிக்கப்பட்டுள்ளது. 


பத்தே நிமிடங்களில் லேப்டாப் கம்ப்யூட்டர்களை பிரித்து, பின்னர் மீண்டும் பொருத்தி சாதனை: கோவையை சேர்ந்த 9 வயது சிறுமிக்கு கவுரவ டாக்டர் பட்டம்

 
பத்தே நிமிடங்களில் லேப்டாப் கம்ப்யூட்டர்களை பிரித்து, பின்னர் மீண்டும் பொருத்தி சாதனை படைத்த கோவையை சேர்ந்த 9 வயது சிறுமிக்கு பிரிட்டைன் நாட்டிலுள்ள உலக சாதனைகளை அங்கீகரிக்கும் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி கவுரவித்துள்ளது.

ஓட்டுச்சாவடி அலுவலருக்கு பணி ஆணை "ரெடி"

ஓட்டுச்சாவடியில் பணிபுரியும் அலுவலர்களுக்கான பணி ஆணையை தேர்தல் கமிஷன் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கி உள்ளது. தாலுகா அளவில் அவை பிரித்து வழங்கும் பணி நடக்கிறது.


மின் பயனீட்டாளர்கள் செல்போன் எண்ணை பதிவு செய்ய அலுவலகம் செல்ல தேவையில்லை வீட்டிலிருந்தே ஆன்லைன் முலம் பதிவு செய்யலாம்.

மின் பயனீட்டாளர்கள் செல்போன் எண்ணை பதிவு செய்ய அலுவலகம் செல்ல தேவையில்லை வீட்டிலிருந்தே ஆன்லைன் முலம் பதிவு செய்யலாம்

இதற்கு முதலில் இந்த >>>>>>>CLICK HERE <<<<<<<  கிளிக் செய்யவும்

பின்னர் தங்களது மண்டலத்தை தேர்வு செய்யவும்

அடுத்து தங்களுடைய  9 அல்லது 10 இலக்க  மின்இணைப்பு எண்ணை கொடுத்து   Validate  என்பதை கிளிக் செய்யவும்









தங்கள் மின்இணைப்பு எண்ணில் ஏற்கெணவே செல் எண் பதிவு செய்திருப்பின் கீழே உள்ளது போன்று தோன்றும்  செல் எண் தவறாக இருந்தாலோ அல்லது செல் எண்ணை மாற்ற விரும்பினாலோ To change the already registered mobile number.Click Here   என்பதை கிளிக்செய்து  புதிய செல் எண்ணை பதிவு செய்து கொள்ளலாம்



Sunday, March 30, 2014

10% அகவிலைப்படி உயர்வு எப்போது? மத்திய அரசு ஆணை வெளியிட்ட பிறகும் தமிழக அரசு மவுனம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

மத்திய அரசு ஊழியர்களை போல் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும என்று தமிழக அரசுஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதியை கணக்கிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது.


தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கான ஏப்ரல் 2014 மாத நாட்காட்டி

05.04.2014~பள்ளி வேலை நாள் & குறைத்தீர் முகாம்
12.04.2014~பள்ளி வேலை நாள்
14.04.2014~தமிழ் வருடப் பிறப்பு விடுமுறை
17.04.2014~வரையறுக்கப்பட்ட விடுப்பு / பெரிய வியாழன்
18.04.2014~புனித வெள்ளி விடுமுறை
19.04.2014~சனி விடுமுறை

21.04.2014~மூன்றாம் பருவத் தேர்வு தமிழ்
22.04.2014~மூன்றாம் பருவத் தேர்வு ஆங்கிலம்
23.04.2014~தேர்தலுக்கான விடுமுறை நாள்
24.04.2014~தேர்தலுக்கான விடுமுறை நாள்
25.04.2014~தேர்தலுக்கான விடுமுறை நாள்
26.04.2014~பள்ளி வேலை நாள் / மூன்றாம் பருவத் தேர்வு கணிதம்
28.04.2014~மூன்றாம் பருவத் தேர்வு அறிவியல
29.04.2014~மூன்றாம் பருவத் தேர்வு சமூக அறிவியல்
30.04.2014~பள்ளி இறுதி வேலை நாள்
மே 1 முதல் ஜூன் 1 வரை கோடை விடுமுறை (32நாட்கள்) 


THANKS - TESTF

2014- ஆம் ஆண்டு ‘மே’ மாதம் நடைபெறவிருக்கும் துறை தேர்வுகள் கடைசி தேதி நீடிப்பு

2014- ஆம் ஆண்டு ‘மே’ மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மு்லமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வாணையத்தால் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட மாட்டாது.

அறிவிக்கை நாள் : 01.03.2014


விண்ணபிக்க கடைசி தேதி : 15.04.2014 5,45 பி.ப.


தேர்வு தேதிகள்: 24.05.2014 முதல் 31.05.2014 வரை.

துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

இடைநிலை ஆசிரியர்கள்
1. 004 - Deputy Inspectors Test-First Paper(Relating to Secondary and Special Schools) (without books
2. 017 - Deputy Inspector’s Test--Second Paper(Relating to Elementary Schools) (Without Books)
3. 119 - Deputy Inspector’s TestEducational Statistics (With Books).
4 . 176 - Account Test for Subordinate Officers - Part I .(or)114 The Account Test for Executive Officers (With Books).
5 . 208 - The Tamil Nadu Government Office Manual Test(Previously the District Office Manual--Two Parts) (With Books). 


பட்டதாரி ஆசிரியர்கள்
1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .(or)114 The Account Test for Executive Officers (With Books). 



மத்திய அரசு ஊழியர்களுக்கு 10%அகவிலைப்படி உயர்வுக்கான மத்திய அரசின் ஆணை வெளியீடு

Finmin Orders on DA - Payment of Dearness Allowance to Central Government employees - Revised Rates effective from 1.1.2014
No.1/1/2014-F-II (B)
Government of India
Ministry of Finance
Department of Expenditure
North BlockNew Delhi
Dated: 27th March. 2014
OFFICE MEMORANDUM
Subject: Payment of Dearness Allowance to Central Government employees - Revised Rates effective from 1.1.2014.
The undersigned is directed to refer to this Ministry’s Office Memorandum No.I-8/2013-E-II (B) dated 25th September, 2013 on the subject mentioned above and to say that the President is pleased to decide that the Dearness Allowance payable to Central Government employees shall be enhanced from the existing rate of 90% to 100% with effect from January, 2014.

2. The provisions contained in paras 3, 4 and 5 of this Ministry’s O.M. No.1(3)/2008-E-11(B) dated 29th August, 2008 shall continue to be applicable while regulating Dearness Allowance under these orders.
3. The additional installment of Dearness Allowance payable under these orders shall be paid in cash to all Central Government employees.
4. The payment of arrears of Dearness Allowance shall not he made before the date of disbursement of salary of March. 2014.
5. These orders shall also apply to the civilian employees paid from the Defence Services Estimates and the expenditure will be chargeable to the relevant head of the Defence Services Estimates. In regard to Armed Forces personnel and Railway employees, separate orders will he issued by the Ministry of Defence and Ministry of Railways, respectively.
6. In so far as the employees working in the Indian Audit and Accounts Department are concerned, these orders are issued with the concurrence of the Comptroller and Auditor General of India.
sd/-
(A.Bhattacharya)
Under Secretary to the Government of India
Source: www.finmin.nic.in
[http://finmin.nic.in/the_ministry/dept_expenditure/notification/da/da01012014.pdf]

பி.ஏ, எம்.ஏ. படிப்பில் வெவ்வேறு பாடத்தை எடுத்து படித்தவருக்கு பதவி உயர்வில் முன்னுரிமை வழங்கியதை எதிர்த்து வழக்கு பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

பி.ஏ, எம்.ஏ படிப்பில் வெவ்வேறு பாடத்தை எடுத்து படித்தவர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் முன்னுரிமை வழங்கியதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


Tuesday, March 25, 2014

அரசு ஊழியர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட விவரங்களைப் பெற இனி அரசுதகவல் தொகுப்பு மையத்தையே தொடர்பு கொள்ள வேண்டும் என மாநில முதன்மை கணக்காயர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, துணை மாநில கணக்காயர் (நிதி) வர்ஷினி அருண் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:தமிழக அரசு கடந்த 2013 டிசம்பர் 27-ஆம் தேதி வெளியிட்ட அரசாணையின்படி(எண் 463), மாநில முதன்மை கணக்காயர் அலுவலகத்தால் இதுவரை 


ஆதார் அட்டை உத்தரவை வாபஸ் பெற வேண்டும்: உச்ச நீதிமன்றம் ஆணை

அரசு சேவைகளைப் பெற ஆதார் அடையாள அட்டையை கட்டாயமாக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தால் அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.


44 நிகர்நிலை பல்கலைகள் விவகாரம்: டில்லியில் இன்று கூடுகிறது யு.ஜி.சி

நாடு முழுவதும், 44 நிகர்நிலை பல்கலைகள் தொடர்ந்து செயல்படுவதற்கு அனுமதிப்பது தொடர்பான கூட்டம், டில்லியில் உள்ள பல்கலை மானிய குழுவின் (யு.ஜி.சி.,) தலைமை அலுவலகத்தில், இன்று முதல், மூன்று நாட்கள் நடக்கிறது.


தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படியை ஏப்ரல் முதல் வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்ப்பு

தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் 10 சதவீத அகவிலைப்படியை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஏப்ரல் முதல் வாரத்தில் தமிழக அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


March 29 (சனிக்கிழமை), 30 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 31 (திங்கள்கிழமை) ஆகிய தேதிகளில் அனைத்து வங்கிகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டுக்கான வரிகளை செலுத்துவதற்கு வசதியாக இம்மாத இறுதியில் 29 (சனிக்கிழமை), 30 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 31 (திங்கள்கிழமை) ஆகிய தேதிகளில் அனைத்து வங்கிகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


பட்டப் படிப்பு, முதுகலை படிப்பு முடித்த பின், பிளஸ் 2 முடித்த பெண்ணுக்கு, ஆசிரியை பணி வழங்க, பரிசீலிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர் பணிக்கு, கனிமொழி என்பவர், விண்ணப்பித்தார். கடந்த ஆண்டு, ஜூலையில், எழுத்து தேர்வு நடந்தது. சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின், கனிமொழியின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 'முறையான வரிசைப்படி, கல்வி பயிலவில்லை' என, காரணம் கூறப்பட்டது.


யாருக்கு எங்கு தேர்தல் பணி? குலுக்கல் முறையில் தேர்வு

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திரு வாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், மன்னார்குடி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத் தம் உள்ள 1080 வாக்குசாவடி மையங்களிலும் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களின் பெயர், 


பிளஸ் 2, கணித தேர்வில், தவறாக கேட்கப்பட்ட, 47வது கேள்வியை, மாணவர்கள், 'தொட்டிருந்தால்' அதற்குரிய, ஆறு மதிப்பெண், முழுமையாக வழங்கப்படும்,'' என, தேர்வுத்துறை அறிவிப்பு

பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த 14ல், மிகவும் முக்கியமான கணித தேர்வு நடந்தது. இதில், ஆறு மதிப்பெண் பகுதியில், 47வது கேள்வி, தவறாக கேட்கப்பட்டிருந்தது. 'இதற்குரிய ஆறு மதிப்பெண்ணை, முழுமையாக தேர்வுத்துறை வழங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

15 வயது பூர்த்தியாகாத மாணவன் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத அனுமதிக்க ஐகோர்ட்டு உத்தரவு

15 வயது பூர்த்தியாகவில்லை என்று கூறி மாணவரை, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத அனுமதி மறுப்பதாக தொடர்ந்த வழக்கில் அந்த மாணவரை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

TNPSC - VILLAGE ADMINISTRATIVE OFFICER (2013-2014) IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE

1
7/2014 17.03.2014
VILLAGE ADMINISTRATIVE OFFICER (2013-2014) IN THE TAMIL NADU MINISTERIAL SERVICE

17.03.2014

15.03.2014

14.06.2014

Apply Online

வரும் கல்வியாண்டில் (2014-15) பத்தாம் வகுப்பில் முப்பருவ முறை அறிமுகம் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டு முழுவதுக்கும் ஒரே புத்தகம், பொதுத்தேர்வு ஆகியவை அடுத்த கல்வியாண்டிலும் தொடரும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதையடுத்து, பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு முறை நீடிக்குமா, இல்லையா என்ற குழப்பம் தாற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைப்பதற்காக, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை முப்பருவ முறை 2012-13-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பெண் ஊழியர்களுக்கு, அவர்களது வீட்டில் இருந்து 2 மணி நேரம் பயணம் செய்யும் தூரத்தில்தான் தேர்தல் பணி வழங்கப்படும்.

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் பெண் ஊழியர்கள், இரண்டு மணி நேர பயண தூரத்திற்குள் உள்ள, ஓட்டுச்சாவடிகளில் பணி அமர்த்தப்பட வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.

இது குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் கூறியதாவது: தமிழகத்தில், தேர்தல் பணியில், மூன்று லட்சம் மத்திய, மாநில, அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பெரும்பாலும் அரசு ஊழியர்கள், பணி அமர்த்தப்படுகின்றனர். போதிய அரசு ஊழியர் இல்லாத மாவட்டங்களில், தனியார் பள்ளி மற்றும் கல்லூரி ஊழியர்களை பணியமர்த்த, தேர்தல் கமிஷன், அனுமதி வழங்கி உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் பெண் ஊழியர்களை, அவர்கள் வசிப்பிடத்தில் இருந்து, இரண்டு மணி நேர பயண தொலைவிற்குள் உள்ள, ஓட்டுச்சாவடிகளில், பணி அமர்த்த வேண்டும் என்றும், தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. எனவே, பெண்கள், இரவே, ஓட்டுச் சாவடிக்கு வந்து, தங்க வேண்டியதில்லை. பகலில் வந்தால் போதும். தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஊழியர்கள், பணிக்கு வர முடியாத நிலையில் இருந்தால், மாவட்ட தேர்தல் அலுவலருக்கு, விண்ணப்பிக்க வேண்டும். அவர் இறுதி முடிவெடுப்பார். தேர்தல் பணிக்கு வராத ஊழியர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

கர்ப்பிணி, மாற்றுத்திறனாளிகள் தவிர ஊழியர்கள் கண்டிப்பாக தேர்தல் பணியாற்ற வேண்டும்: பிரவீன்குமார்

நாடாளுமன்ற தேர்தலில் 3 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கர்ப்பிணி பெண்கள், மாற்றுத் திறனாளிகள் தவிர மற்ற அரசு ஊழியர்கள் அனைவரும் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று  தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறினார்.

Friday, March 14, 2014

அதிரடி திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது தேர்வு துறை: முறைகேடுகளுக்கு இனி வாய்ப்பில்லை

பொதுத் தேர்வு திட்டங்களில், முறைகேடுகளுக்கு வழிவிட்ட ஒரு சில ஓட்டைகளையும், பல புதிய திட்டங்கள் மூலம், முழுமையாக அடைத்து, தேர்வுத் துறை சாதனை படைத்துள்ளது. துறையின் நடவடிக்கைக்கு, மாணவர் மட்டும் அல்லாமல், ஆசிரியர் அமைப்புகளும், வரவேற்பு தெரிவித்துள்ளன. 


பெண் வாக்குப்பதிவு அலுவலர்கள், வீடுகளில் இருந்து 2 மணி நேரத்தில் வாக்குச்சாவடிக்கு செல்லும் வகையில் அவர்களுக்கு வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்படும்: தேர்தல் ஆணையம்

மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நேரம் இரண்டு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. வழக்கமாக காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலின் போது வாக்குப்பதிவு நேரம் 2 மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிக்கலாம். 


பிளஸ் 2 கணிதத் தேர்வில் "சதமடிக்கும்' மாணவர்களின் எண்ணிக்கை சரியும்

கணித வினாத்தாளில் 47-வது கேள்வியில் இடம் மாறி பிழையுடன் இடம் பெற்றுள்ள கேள்வி (வட்டமிட்டுள்ள பகுதி). (வலது) பாடப்புத்தகத்தில் சரியாக இடம் பெற்றுள்ள அதே கேள்வி. இந்த இடமாற்றத்தால் அந்த எழுத்துக்களின் மதிப்பும் மாறியதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.கணித வினாத்தாளில் 47-வது கேள்வியில் இடம் மாறி பிழையுடன் இடம் பெற்றுள்ள கேள்வி (வட்டமிட்டுள்ள பகுதி). (வலது) பாடப்புத்தகத்தில் சரியாக இடம் பெற்றுள்ள அதே கேள்வி. இந்த இடமாற்றத்தால் அந்த எழுத்துக்களின் மதிப்பும் மாறியதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். 


ஏப்ரல் 10-ம் தேதிக்கு பிறகு 2-ம் தாளில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு

தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணி சென்னை உள்பட 5 மையங்களில் புதன்கிழமை தொடங்கியது.


7அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்த கொண்ட ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ஊதியப் பிடித்தம் செய்ய பிறப்பித்த உத்தரவு வாபஸ்

போராட்டத்தில் கலந்த கொண்ட ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ஊதியப் பிடித்தம் செய்ய பிறப்பித்த உத்தரவு வாபஸ்

தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல் மற்றும் 7அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டனர்.

இதையடுத்து இதில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ஊதியப் பிடித்தம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியது.
இதையடுத்து தொடக்கக் கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்ய வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைமை நிலைய செயலாளர் திரு. சாந்தகுமார் தெரிவித்தார்.

மேலும் இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.

Thursday, March 13, 2014

கல்வித் தகவல் மேலாண்மை முறை (EMIS) இணையதளங்களை ஆசிரியர்களும் ,மாணவர்களும் தொடர்ந்து பயன்படுத்த பள்ளிகல்வித்துறை உத்தரவு

பள்ளிகல்வித்துறை செயல்பாடுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும்,கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகளை உரிய தரத்தில் மேம்படுத்தி கொள்ளவும்

http://www.ecs.tnschools.gov.in/ 

மற்றும் 

http://www.tnschools.gov.in/ 

இணையதளங்களை ஆசிரியர்களும் ,மாணவர்களும் தொடர்ந்து பயன்படுத்த பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


Declaration of Holiday on 14th April, 2014 for Birthday of Dr.B.R. Ambedkar

F. No.12/4/2014-JCA-2
Government of India
Ministry of Personnel, Public Grievances & Pensions
(Department of Personnel & Training)

North Block, New Delhi

Dated the 12th March, 2014.

OFFICE MEMORANDUM

Subject: Declaration of Holiday on 14th April, 2014 – Birthday of Dr.B.R. Ambedkar.

It has been decided to declare Monday, the 14th April 2014, as a Closed Holiday on account of the birthday of Dr. B.R. Ambedkar, for all Central Government Offices including Industrial Establishments throughout India.

2. The above holiday is also being notified in exercise of the powers conferred by Section 25 of the Negotiable Instruments Act, 1881 (26 of 1881).

3. All Ministries/Departments of Government of India may bring the above decision to the notice of all concerned.

sd/-
(Ashok Kumar)
Deputy Secretary to the Government of India

ஓட்டுப்பதிவுக்கு கூடுதலாக 2 மணி நேரம், தேர்தல் கமிஷன் முடிவு: காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை ஓட்டுப்பதிவு

வரும் லோக்சபா தேர்தலில் வோட்டு போடும் நேரத்தை அதிகரிக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. வோட்டு போடுவதற்கு நாடு முழுவதற்கும் இரண்டு மணி நேரம் கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நேர அதி்கரிப்பு நக்சல் தாக்குதல் மாநிலங்களு்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 


தேர்தல் பணி: அரசு அதிகாரிகள் விடுப்பு எடுக்க கடும் கட்டுப்பாடு

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளதால், விடுமுறை எடுப்பதில் தமிழக அரசு அதிகாரிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவுறுத்தல் கடிதத்தை அண்மையில் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் அனுப்பியுள்ளார்.


தொடக்கக்கல்வித் துறை பள்ளிகளுக்கு ஏப்ரல் 21ம் தேதி முதல் தேர்வு தொடக்கம், மே 1 முதல் கோடை விடுமுறை

தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக இந்தப் பள்ளிகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் கடைசி வாரத்தில் நடைபெறும். ஆனால், மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் ஏப்ரல் 24 -ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுவதால், தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வுகள் விபரம்

1. 004 - Deputy Inspectors Test-First Paper

(Relating to Secondary and Special Schools)

(without books)

2. 017 - Deputy Inspector’s Test--Second Paper

(Relating to Elementary Schools) (Without

Books)

3. 119 - Deputy Inspector’s Test

Educational Statistics (With Books).

4 . 176 - Account Test for Subordinate Officers -

Part I .

(or)

114 The Account Test for Executive Officers

(With Books).

5 . 208 - The Tamil Nadu Government Office

Manual Test

(Previously the District Office Manual--Two

Parts) (With Books).

மாணவர்களின் ஆதார் எண்ணை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு

கல்வி தகவல் மேலாண்மை முறையில் மாணவர்களின் ஆதார் எண்ணை பெற்று இனி இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யவேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.


Saturday, March 8, 2014

நாடாளுமன்ற தேர்தல் - சி.பி.எஸ்.இ. தேர்வுகளின் 4 தேதிகள் மாற்றம்

நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் குறுக்கிடுவதால், சி.பி.எஸ்.இ., தனது 4 தேர்வுகளின் தேதிகளில் மாற்றம் செய்துள்ளது.


பள்ளிக்கல்விக்கு துறை. 6,7,8,9.வகுப்புகளுக்கு், ஏப்ரல் 3முதல் 16 வரை தேர்வு நடைபெறும் பள்ளிக்கல்வி அறிவிப்பு

 
தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேர்வுகள் தொடர்பாக வரும் திங்கள்கிழமை முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.