Pages

Wednesday, April 30, 2014

8-ம் வகுப்பு மாணவர் திறனாய்வுத் தேர்வு முடிவு ஒரு வாரத்தில் வெளியீடு

அரசு பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ‘என்.எம்.எம்.எஸ்.’ (நேஷனல் மீன்ஸ் கம் மெரிட் ஸ்காலர்ஷிப்) என்ற சிறப்பு திறனாய்வுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.


இதில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பிளஸ் 2 முடிக்கும் வரை கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.500 வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான திறனாய் வுத் தேர்வு கடந்த பிப்ரவரியில் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 47 ஆயிரம் பேர் தேர் வெழுதினர். தேர்வுமுடிவை ஒரு வாரத்தில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அரசு தேர்வுத்துறையினர் தெரிவித்த னர். தேர்வுத்துறை இணையதளத் தில் (www.tndge.in) தேர்வு முடிவை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment