Pages

Wednesday, September 24, 2014

பள்ளிகளில் 'அனிமேஷன்' வடிவில் பாடம்; விரைவில் வருகிறது புதிய திட்டம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், கடினமான பாடங்களை, 'அனிமேஷன்' வடிவில் திரையிட்டு நடத்த, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

ஆசிரியர் நியமனம் - இடைக்கால உத்தரவு ரத்து

இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையயை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தொடரப்பட்ட மனுவை விசாரித்த தனிநீதிபதி, ஆசிரியர்கள் நியமனத்திற்கு இடைக்காலத்தடை விதித்தார். தனிநீதிபதியின் உத்தரவிற்கு எதிராக, சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில், தமிழக அரசு சார்பி்ல், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இம்மனுவை விசாரித்த நீதிபதி, இடைக்காலத்தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்

Tuesday, September 23, 2014

மத்திய அரசு ஊழியர்களுக்கு 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவு முறை அமல்

மத்திய ஊழியர்களுக்கு, இந்த மாத இறுதிக்குள், 'பயோ மெட்ரிக்'வருகைப் பதிவு முறை, முழு அளவில் அமலாகும்,'' என, மத்தியதகவல் தொழில்நுட்பத் துறை செயலர் ராம் சேவக் சர்மா கூறினார்.

RTI யில் தகவல் கோர காரணம் தெரிவிக்க வேண்டாம் - சென்னை உயர் நீதிமன்றம்

தகவல் கோருபவர், காரணத்தை தெரிவிக்க வேண்டும்' என, ஏற்கனவே தெரிவித்த கருத்தை, சென்னை உயர் நீதிமன்றம், தானாக முன்வந்து, நீக்கி உள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் மின்னணு முறையில் பட்டுவாடா இந்த மாதம் முதல் அமலாகிறது

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் மின்னணு முறையில் பட்டுவாடா செய்யப்பட்டாலும், சம்பள பட்டியல் தயாரிப்பது, பணம் பெற்று வழங்கும் அதிகாரிகள் அனுமதி வழங்குவது, கருவூலங்களில் சமர்ப்பிப்பது உள் ளிட்ட நடைமுறைகள் இன்னும் காகித வடிவில்தான் நடக்கிறது. இதை நவீனப் படுத்தும் வகையில், வலைதள பட்டியல் மென்பொருள் (Centralised Employees Data Base) முறையில் சம்பளம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு ரூ.167.45 கோடி ஒதுக்கியது.

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
தகுதித்தேர்வு மூலம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டுள்ளது.

Thursday, September 18, 2014

CTET: 21ம் தேதி நடைபெற உள்ள மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கு ஆன்லைனில் ஹால்டிக்கெட்

வரும் 21ம் தேதி நடைபெறுகின்ற மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கு ஆன்லைனில் ஹால்டிக்கெட் விநியோகம் தொடங்கியுள்ளது. மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு ஒன்றை சிபிஎஸ்இ வரும் 21ம் தேதி நடத்துகிறது. காலை 9.30 மணி முதல் 12 மணி வரை 2.30 மணி நேரம் தாள் 2 தேர்வும், அன்று மதியம் 2 மணி முதல் 4.30 மணி வரை 2.30 மணி நேரம் தாள் 1 க்கான தேர்வும் நடைபெறுகிறது.

முக்கிய பல்கலைக்கழகங்களை தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்

IGNOU-04522370733
Annamalali-04144238796
Alagappa-04565226001
TNOU-04424306600
Barathiyar-04222422222
Barathithasan-04312407092
Madras-04425399422
MKU- 04522458471
Mano maniyam- 9487999732
Periyar- 04272345766
Thiruvalluvar -04162274755

Wednesday, September 17, 2014

ஆசிரியர்கள் புரிதலுடன் கூடிய கல்வி கற்பிக்க வேண்டும் - இயக்குனர் வலியுறுத்தல்

புரிதலுடன் கூடிய கல்வி அறிவை மாணவர்களுக்கு ஆசிரியர்கள்கற்பிக்க வேண்டும்," என தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன்வலியுறுத்தினார். மதுரையில் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கற்றல் அடைவுதிறன் மேம்படுத்துதல் பயிற்சி முகாமை நேற்று துவக்கி வைத்து அவர் பேசியதாவது: 


அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுப்பதற் கான விதிகளைப் பற்றி தெரிந்து கொள்ளு ங்கள் தற்செயல் விடுப்பு

1. ஒரு ஆண்டிற்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும். ஒரே நேரத்தில் பத்து நாட்கள் தனியாகவோ , அரசு விடுமுறை அல்லது
ஈடுசெய்யும் விடுப்பு முதலியவற்றுடன் சேர்த்தோ அனுபவிக் கலாம்.
2. அவ்வாறு நாட்கள் தொடர்ந்து அனுபவிக் கும்போது, இயற்கை சீற்றம், தேசிய தலை வர் மரணம், பந்த், பண்டிகை, திடீர் விடுமு றை காரணமாக 11 வது நாள் அரசு விமுறை என அறிவிக்கப்பட்டால் ஊழியர் 10க்கு மேற் பட்ட அந்த நாளையும் விடுப்பாக அனுபவிக்க லாம். (அ.நி.எண். 309 ப.ம.நி.சி.(அவி.11) நாள் 16.08.93)



TNTET - மதுரை உயர்நீதிமன்ற கிளை - ஆசிரியர் பணிநியமன தடைஆணை தொடர்ந்து அமலில் இருக்கும்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று ஆசிரியர்பணிநியமன தடைக்கான மேல்முறையீட்டு மனு விசாரணைக்குவரவில்லை. மேலும் இது குறித்து தக்க பதிலை ஆசிரியர் தேர்வுவாரியம் அளிக்க வேண்டுமென நீதியரசர் சசிதரன் அவர்கள் கோரியிருந்தார்.அதற்கான பதிலை அரசுதரப்பு வழக்கறிஞர் சென்னை டிவிசன்பெஞ்சில் பதிலுரைத்தார். ஆகவே சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்குபிறகே பணிநியமண தடையாணை மேல்முறையீட்டு வழக்குமுடிவுக்கு வரும். அதுவரை ஆசிரியர் பணிநியமண தடைஆணைதொடர்ந்து அமலில் இருக்கும்..

TET வழக்கு விசாரணை முடிந்தது தீர்ப்பு விரைவில்

இருதரப்பு வாதமும் முடிந்தது.வழக்குரைஞர்கள் தங்களது வாதங்களை எழுத்துப்பூர்வமாக இந்த வாரத்திற்குள் வழங்க நீதிபதிகள் உத்தரவு. தீர்ப்பு இன்னும் 10 வேலை நாட்களுக்குள் வரலாம்.வெயிட்டேஜ் முறையில் மாற்றம் வருமா என்பது நீதிபதிகளின் தீர்பை பொருத்து அமையும்..

பி.எட் எம்.எட் படிப்பு இரண்டு ஆண்டு! விரைவில் வெளியாகிறது அரசாணை

தகுதி வாய்ந்த ஆசிரியர்களை உருவாக்க மத்திய அரசின் என்.சி.டி.இ முடிவெடுத்து பரிந்துரை செய்துள்ளது. அமைச்சர் ஸ்மிரிதி இரானி தலைமையில் நேற்று கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அடுத்த ஆண்டு 2015-16ல் அமுல்படித்த முடிவெடுக்கப்பட்டது. விரைவில் அரசாணை வெளியாகும் என தெரிகிறது 



Tuesday, September 9, 2014

கல்வி - ஊக்க ஊதியம் தொடர்பான அரசானை மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக பெறப்பட்ட பதில்கள்

Wednesday, September 3, 2014

பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கு தடை - தினமலர்

பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கு மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த தமிழரசன் மற்றும் 18 பேர் இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவில், கடந்த மே மாதம் 30ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இம்முறையை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, ஆசிரியர் தேர்வு வாரியம் கவுன்சிலிங் நடத்த தடையில்லை என்றும், பணி நியமனங்கள் வழங்கக்கூடாது என்றும் உத்தரவிட்டது.

பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை - தினகரன்

பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. தமிழரசன் உள்ளிட்ட 18 பேரின் மனுவை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க வகை செய்யும் அரசாணை எண் 71க்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டது.

தமிழரசன் உள்ளிட்ட 18 பேரின் மனுவை விசாரிக்க நீதிபதி சசிதரன் உத்தரவிட்டார். இதனையடுத்து வழக்கு விசாரணக்கு வந்தது. ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்கை நடத்தி கொள்ள அனுமதித்துள்ள நீதிமன்றம் ஆசிரியர் பணிநியமன உத்தரவை வழங்க கூடாது என்று ஆணையிட்டுள்ளது