Pages

Monday, December 31, 2012

பொங்கலுக்கு முன் தொடங்குகிறது அடுத்த கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள் அச்சடிப்பு

அடுத்த கல்வியாண்டான 2013 2014க்கு 1 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியருக்காக 8.36 கோடி பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணியை பொங்கலுக்கு முன்னதாக துவக்கி ஏப்ரலில் முடிக்க தமிழ்நாடு பாட நூல் கழகம் திட்டமிட்டுள்ளது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு:கல்வித்துறை ஏற்பாடு

அரசு பள்ளிகளில், தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.தமிழகத்தில், அரசு பள்ளிக்கும், தனியார் பள்ளிக்கும் ஒரே மாதிரியான கல்வி திட்டம் அமையும் நோக்கில், சமச்சீர் கல்வித்திட்டம் அமல்படுத்தப்பட்டது.

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புகான பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு


பிளஸ் 2 அட்டவணை :-

மார்ச் 1 - மொழித்தாள் ஒன்று,

மார்ச் 4 - மொழித்தாள் இரண்டு,

மார்ச் 6 - ஆங்கிலம் முதல் தாள்,

மார்ச் 7 - ஆங்கிலம் இரண்டாம் தாள்,

மார்ச் 11 - இயற்பியல், பொருளியல்

மார்ச் 14 - கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல

மார்ச் 15 - வணிகவியல், வீட்டு அறிவியல்

மார்ச் 16 - வேதியியல், கணக்கியல்

மார்ச் 21 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்.
பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை:-

மார்ச் 27 - மொழித்தாள் ஒன்று

மார்ச் 28 - மொழித்தாள் இரண்டு

ஏப்ரல் 1 - ஆங்கிலம் முதல் தாள்

ஏப்ரல் 2 - ஆங்கிலம் இரண்டாம் தாள்

ஏப்ரல் 5 - கணிதம்

ஏப்ரல் 8 - அறிவியல்

ஏப்ரல் 12 - சமூக அறிவியல்

திருப்பூர் - 72 பள்ளிகளில் ரூ.2.58 கோடியில் அடிப்படை வசதி

திருப்பூரில், 2.58 கோடி ரூபாய் செலவில், 72 மாநகராட்சி பள்ளிகளில், அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து, சீரமைக்க மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நேர்முக தேர்வு நடத்தியவர்களின் பெயர்களை தகவல் உரிமை சட்டப்படி வெளியிட முடியாது

அரசுப் பணிகளுக்கு ஆட்களை தேர்ந்தெடுக்கும் போது, நேர்முகத் தேர்வு நடத்தும் குழுவில் இடம் பெறும் நபர்களின் பெயர்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியிட முடியாது' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. பீகார் மாநிலத்தில், போலீஸ் துறையின்,..

Saturday, December 29, 2012

10ம் வகுப்பு மாணவர்கள் விவரம்: இணையதளத்தில் பதிய காலக்கெடு நீட்டிப்பு

: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் குறித்த விவரங்களை, இணையதளம் வழியாகப் பதிவு செய்வதற்கான காலக்கெடு, வரும், 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

P.G (முதுகலை ஆசிரியர் ) நியமனம் 31ம் தேதி கலந்தாய்வு

முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கான கலந்தாய்வு, நாளை நடக்கிறது. முதுகலை ஆசிரியர்கள், 2,895 பேரை நியமனம் செய்வதற்கான போட்டி தேர்வு, சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது. இது தொடர்பான வழக்கு, கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால், 500 பணியிடங்கள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தற்போது, 2,300 பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான கலந்தாய்வு, நாளை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடக்கிறது. மாவட்டத்துக்குள், பணி நியமனம் வேண்டுபவர்களுக்கு, காலையிலும், வேறு மாவட்டங்களில், நியமனம் வேண்டுபவர்களுக்கு, பிற்பகலிலும் கலந்தாய்வு நடக்கிறது. தேர்வுச் செய்யப்பட்டவர்களுக்கு, அழைப்பாணை கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. தேர்வு பட்டியலில் இருந்து தகுதியில்லாத, 50க்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகார பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

கூட்டுறவு உதவியாளர் பணி நியமனத்துக்கு தடை: 4 வாரத்துக்குள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

தமிழக கூட்டுறவு துறையில் உதவியாளர் பணிக்கான நேரடி நியமனத்துக்கு, தடை விதித்தும், இது தொடர்பாக, நான்கு வாரத்துக்குள் பதிலளிக்க அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Friday, December 28, 2012

பிளஸ் 2: முதல்வரின் தகுதி பரிசுத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் முதல்வரின் தகுதி பரிசுத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தலைமைச்செயலாளராக ஷீலா பாலகிருஷ்ணன் நியமனம்

தமிழக தலைமைச்செயலாளராக ஷீலா பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தலைமைச்செயலாளராக இருக்கும் தேவேந்திரநாத் சாரங்கி ஓய்வு பெறுவதை முன்னிட்டு, புதிய தலைமைச்செயலாளராக ஷீலாபாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Thursday, December 27, 2012

புதிய முதுகலை ஆசிரியர் பணி நியமனம் எப்போது?

"புதிய முதுகலை ஆசிரியர்கள், ஜன., 10க்குள், பணி நியமனம் செய்யப்படுவர்' என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட, 2,308 முதுகலை ஆசிரியர்களின் சான்றிதழ்கள்,

பள்ளி நேரத்தை மாற்றியமைப்பது குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆலோசனை

சென்னை உட்பட மாநிலத்தின் மற்ற நகரங்களில், பள்ளி, கல்லூரி நேரங்களை மாற்றி அமைப்பது குறித்து, கல்வித்துறை மற்றும் கல்லூரி கல்வித்துறையிடம், நேற்று முதற்கட்ட ஆலோசனையை, போக்குவரத்துதுறை நடத்தியது.

பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக தகுதியானவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 6 பேர் மட்டுமே உரிய தகுதிகள் பெறவில்லை.

பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக தகுதியானவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 21 ஆயிரம் பேரில் வெறும் 6 பேர் மட்டுமே உரிய தகுதிகள் பெறாதது கண்டறியப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.


Wednesday, December 26, 2012

பள்ளி மாணவர்களுக்காக நடமாடும் ஆலோசனை மையம்

தமிழகத்தில், பள்ளி மாணவர்களின் உளவியல் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், மூன்று கோடி ரூபாய் செலவில், நடமாடும் ஆலோசனை மையம், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் ஏற்படுத்தப்பட உள்ளது.

"ஆன்-லைன்' வழியாக சான்றிதழ் சரிபார்ப்பு திட்டம் : அடுத்த கல்வி ஆண்டில் அமலுக்கு வருகிறது

"ஆன்-லைன்' வழியாக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்க்கும் திட்டம், அடுத்த ஆண்டில் அமலுக்கு வருகிறது. இந்த புதிய திட்டத்தால், உயர்கல்வி நிறுவனங்கள், தங்களிடம் சேரும் மாணவர்களின் சான்றிதழ்களை, உடனுக்குடன் சரிபார்க்க முடியும். மேலும், போலி சான்றிதழ்கள் ஊடுருவலையும், எளிதில் தடுத்து நிறுத்த முடியும்.

அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 13 நாட்கள் "விடுமுறை'

வருடந்தோறும் ஜனவரி மாதம் என்றாலே, "ஜாலி' மாதம் தான். இம்மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை மட்டும், 13 நாட்கள் கிடைக்கிறது. இதிலும், தொடர்ந்து, ஒன்பது நாட்கள் விடுமுறை கிடைக்கும் இன்னொரு வாய்ப்பும் ஒளிந்திருக்கிறது.

3ம் பருவ பாடப்புத்தகங்கள் விடுமுறைக்கு பின் வழங்கப்படும்

ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்தபின், மூன்றாம் பருவ பாடப்புத்தகம் வினியோகம் செய்யப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாகவே பி.எட்., தேர்வு: டி.இ.டி.,யில் பங்கேற்க வாய்ப்பு

இந்தாண்டு பி.எட்., படிப்புகளுக்கான தேர்வுகளை, முன்னதாகவே நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்கள், வரும் ஜூனில் நடக்கும் டி.இ.டி., தகுதித்தேர்வில், வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்கான சூழல் உருவாகியுள்ளது.

Tuesday, December 25, 2012

இரண்டாயிரம் முதுகலை ஆசிரியர்கள் தேர்வில் குளறுபடி: தகுதியில்லாதவர்களுக்கு பணி வழங்கியது அம்பலம் - தினமலர்

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் தேர்வில் நடந்த, குளறுபடிகளை தொடர்ந்து, முதுகலை ஆசிரியர் தேர்விலும், பெரும் குளறுபடி நடந்திருப்பது, வெளிச்சத்திற்கு வந்துள்ளது.உடல்தகுதி நன்றாக இருப்பவர்கள் பலர், ஊனமுற்றோர் பிரிவில் தேர்வாகி உள்ளனர். மேலும், சரியான கல்வித்தகுதி இல்லாதவர்களும், இறுதி பட்டியலில் தேர்வாகி உள்ளனர். இவர்களை, தேர்வுப் பட்டியலில் இருந்து நீக்கும் பணிகள் நடந்து வருவதால், ஓரிரு நாளில், புதிய தேர்வுப் பட்டியல் வெளியாக உள்ளது.

பள்ளி நீச்சல் குளத்தில், "டைவ்' வசதி கூடாது: புதிய விதிமுறையில் அரசு உத்தரவு

பள்ளி நீச்சல் குள பராமரிப்பு தொடர்பாக, தமிழக அரசு, பல்வேறு கிடுக்கிப்பிடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

பள்ளி பாட புத்தகங்கள் "சிடி' முறையில் மாற்ற திட்டம்

தமிழகத்தில், அடுத்த கல்வியாண்டில், பாட புத்தகங்களை "சிடி' வடிவில் கொண்டு வருவதற்கான, முயற்சியில், கல்வி துறையினர் இறங்கியுள்ளனர். இதற்காக, பள்ளிகள்தோறும், 6 முதல், 8 வகுப்பு வரையிலான, பாடத்தினை "இ-கன்டன்ட்' என்ற மின்னனு பாடப்பொருள் தயாரிக்க போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளனர். அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம்,,,,

கல்வித்துறை அதிகாரிகள் மாற்றம் : புத்தாண்டில் வருகிறது அறிவிப்பு

பள்ளி கல்வித் துறையில், இயக்குனர் நிலையில், ஏற்கனவே ஒரு பணியிடம் காலியாக உள்ள நிலையில், இம்மாத இறுதியில், மேலும் ஒரு பணியிடம் காலியாகிறது. இதனால், புத்தாண்டு பிறந்ததும், அதிகாரிகள் மட்டத்தில் மாற்றம் வரும் என, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Monday, December 24, 2012

கண்ணியமாக நடந்து கொள்ள உடற்கல்வி ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங்

கடந்த சில மாதங்களாக ஆசிரியர்கள், பள்ளி மாணவியரிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொள்வது தொடர்வதால், மாணவியரின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. இதையடுத்து, உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, கவுன்சிலிங் நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை இனி அரசு செலுத்தும்

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர் மரபின மாணவர்களின் கல்லூரி கட்டணம் முழுவதையும் அரசே ஏற்கும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அரசு நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

Saturday, December 22, 2012

புது ஆசிரியர்களுக்கு நெருக்கடி:தகுதியில்லாதவர்கள் ஆப்பு

சமீபத்தில், பணி நியமன ஆணை பெற்ற, ஆசிரியர்களின் சான்றிதழ்கள், மீண்டும் ஒரு முறை சரிபார்க்கும் பணி, டி.ஆர்.பி.,யில் நடந்து வருகிறது. இதில், தகுதியில்லாதவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களின் தேர்வை உடனடியாக ரத்து செய்ய, டி.ஆர்.பி.,யும், அவர்களை வேலையில் இருந்து, "டிஸ்மிஸ்' செய்வதற்கு, கல்வித் துறையும் முடிவு செய்துள்ளன.

Friday, December 21, 2012

அரசு ஊழியர்களுக்கு அறிமுகமாகிறது இணையதள கல்வி

அரசு ஊழியர்களுக்கு, இணையதளம் மூலமாக, கணினி பயிற்சி வழங்குவதற்கான பாடத் திட்டத்தை அரசு தயார் செய்துள்ளது.
கணினி தொடர்பான, அடிப்படை பயிற்சி மற்றும் அரசு அலுவலகங்களை கணினி மயமாக்கல் குறித்த பயிற்சி, அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படுகிறது. இப்பயிற்சிகளை அன்றாட அலுவலக பணியில், பயன்படுத்த வேண்டும்.

 

கட்டாயக்கல்வி சட்டம், நேரடி தனி தேர்வுக்கு பொருந்தாது : தேர்வுத்துறை அறிவிப்பு

இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டம், நேரடி தனி தேர்வுக்கு பொருந்தாது' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இந்த சட்டத்தில், எட்டாம் வகுப்பு வரை, எந்த மாணவரையும் தோல்வி அடைய செய்யக்கூடாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம், நேரடி தனி தேர்வுக்கு பொருந்துமா என்ற கேள்வி எழுந்தது. 8ம் வகுப்பு தேர்வு, நேரடியாக, தனி தேர்வாக ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.


அரசு உதவிபெறும் பள்ளிகளில் 7,000 பணியிடங்கள் காலி

மாநிலம் முழுவதும் உள்ள, அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் அல்லாத, 7,000 பணியிடங்கள், காலியாக உள்ளன. இந்த விவகாரத்தில், முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு, காலி பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப, உத்தரவிட வேண்டும் என, பள்ளி நிர்வாகங்கள் எதிர்பார்க்கின்றன.

1,000 இளநிலை உதவியாளர்கள் கல்வி துறையில் விரைவில் நியமனம்

பள்ளி கல்வித் துறையில், 1,000 இளநிலை உதவியாளர்கள் மற்றும், 120 தட்டச்சர்கள், விரைவில், "ஆன்-லைன்' கலந்தாய்வு வழியில், நியமிக்கப்பட உள்ளனர். டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வில், பள்ளி கல்வித் துறைக்கு, சுருக்கெழுத்தர்கள், 35 பணியிடங்கள், இளநிலை

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரே மாதிரி சீருடை

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரே மாதிரியான சீருடை வழங்கப்படும், என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். தொடக்கக் கல்வி பாடத் திட்டத்தில், ஜாதியற்ற சமூகம் தொடர்பான பாடமும், பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், சைபர் கிரைம் குறித்த பாடமும் சேர்க்கப்படும் என்றார்.

பத்தாம் வகுப்பிற்கு (SSLC) பின் மூன்றாண்டு பட்டயப்படிப்பு அல்லது இரண்டாண்டு தொழில் நுட்ப பயிற்சி (I.T.I) படித்த பிறகு மூன்றாண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள், பத்தாம் வகுப்பிற்கு (S.S.L.C) பின் மூன்றாண்டு பட்டயப்படிப்பு படித்த பிறகு இரண்டாண்டு பட்டப்படிப்பினை (Lateral Entry) படித்தவர்கள் மற்றும் பதினோராம் வகுப்பிற்கு (old SSLC) பின் இரண்டாண்டு ஆசிரியப் பட்டயப்படிப்பு படித்த பிறகு மூன்றாண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள் ஆகியோர் - பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பிற்கு (Plus 2) பின் மூன்றாண்டு பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு இணையாக கருதி பொதுப் பணிகளில் வேலைவாய்ப்பு / பதவி உயர்விற்கு அங்கீகரித்து - ஆணைகள் வெளியிடப்படுகிறது.


click here download - தழிழக அரசாணை - 242

ஆட்டோக்களில் அதிக மாணவர்களை ஏற்றினால் நடவடிக்கை"

ஆட்டோக்களில் அதிகளவு பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும், டிரைவர்கள் உரிமம் மீது, கோர்ட் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்க, வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டி.இ.ஓ. காலிப்பணியிடம்: நேர்மையான முறையில் நிரப்ப கல்வித்துறை உறுதி

தமிழகத்தில் காலியாக உள்ளமாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிடங்கள்,நேர்மையான முறையில் நிரப்பப்படும்" என,பள்ளி கல்வி துறை இயக்குனர் தேவராஜன்தெரிவித்தார்.

புதிதாக தேர்வான, 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, ஜனவரியில் ஐந்து நாள் பயிற்சி அளிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

புதிதாக தேர்வான, 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, ஜனவரியில் ஐந்து நாள் பயிற்சி அளிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சியை, மத்திய இடைநிலைக்கல்வி திட்ட இயக்ககம் வழங்குகிறது. தொடக்க கல்வித்துறையில் சேர்ந்துள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் சார்பில், பயிற்சி வழங்கப்பட உள்ளது.

Tuesday, December 18, 2012

+2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: ஒரு வாரத்திற்குள் தேர்வு அட்டவணை வெளியீடு

பிளஸ் 2 பொதுத்தேர்வு ஆண்டுதோறும் மார்ச் முதல் வாரத்தில் துவங்கும். கடந்த ஆண்டு 8ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை தேர்வுகள் நடந்தது.இந்தாண்டு பொதுத் தேர்வுகள் தொடங்குவது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி கூறியது,

9.5 கோடி பாடப்புத்தகம் தயாரிப்பு பணி மும்முரம்

அடுத்த கல்வியாண்டுக்கு, 1 முதல், பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியருக்காக, 9.5 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணியை, பொங்கலுக்கு முன்னதாக துவக்கி, ஏப்ரலில் முடிக்க தமிழ்நாடு பாட நூல் கழகம் திட்டமிட்டுள்ளது.

வி.ஏ.ஓ. நியமன கலந்தாய்வு விரைவில் துவங்கும்

வி.ஏ.ஓ., பணி நியமன கலந்தாய்வு, இம்மாத இறுதிக்குள் நடக்கும்,' என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர், நடராஜ் தெரிவித்தார். அடுத்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை, ஜனவரியில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

IGNOU Recruitment 2013 – Walk in for Research Assistant Vacancies:

Click here for IGNOU Recruitment Advt

Indira Gandhi National Open University has issued notification for the filling up of 15 Research Associates on temporary basis for a project on Library Automation and Networking. Eligible candidates can walk in for interview on 22-12-2012 at 10.00am.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஒய்வூதியதாரர் களுக்கான ஜனவரி 2013-க்கான அகவிலைப்படி உயர்வு 8 முதல் 9 சதவீதமாக உயர்த்தலாம் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

அக்டோபர் 2012 மாதத்தில் மத்திய தொழிலாளர் துறை மூலம் வெளியிட்ட இந்திய நுகர்வோர் குறியீட்டு எண் (AICPIN) அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தின் காரணமாக ஜூலை 2012 மாதத்திலிருந்து அக்டோபர் 2012 வரை 5 புள்ளிகள் அதிகரித்து செங்குத்தாக சென்றது.

Sunday, December 16, 2012

மார்ச் 1–ந் தேதி முதல் மார்ச் 8–ந் தேதிக்குள் பிளஸ்–2 தேர்வை தொடங்கவும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ஏப்ரல் 16–ந் தேதிக்குள் முடிக்கவும் அரசு தேர்வுகள் துறை முடிவு செய்துள்ளது.

இந்த வருடம் பிளஸ்–2 தேர்வு எப்போது தொடங்கும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எப்போது தொடங்கும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவியிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:–அரசு பொதுத்தேர்வுகளானபிளஸ்–2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை,,,

Saturday, December 15, 2012

ஆசிரியர்கள் பற்றாக்குறையால் தனியார் பள்ளிகளுக்கு நெருக்கடி

தமிழகத்தில், ஒட்டுமொத்தமாக, ஒரே நேரத்தில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, அரசு பள்ளிகளில் பணி கிடைத்துள்ளதால், அவர்கள் ஏற்கனவே வேலைபார்த்த தனியார் பள்ளிகளில் இருந்து பாதியிலேயே வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Friday, December 14, 2012

பணி நியமன உத்தரவு வழங்கிய பின் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு

எப்போதும் இல்லாத வகையில், டி.இ.டி., தேர்வு மற்றும் முதுகலை ஆசிரியர்தேர்வு முடிவுகளை வெளியிடுவதில், அரசு வட்டாரத்தில் இருந்து, தொடர்நெருக்கடி வந்ததால், முழு திருப்தியில்லாமல், அரைகுறை மனதுடன், இறுதிதேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டு உள்ளது.

6 மாதங்களில் 1,200 முதுகலை ஆசிரியர்கள் நியமனம்: ஜனவரியில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

அடுத்த ஆண்டு, மே மாதத்திற்குள், மேலும், 1,200 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, அடுத்த மாதம் வெளியாகவுள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிளஸ் 2 தற்காலிக அட்டவணை தயார்: 8 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்

பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கையை, தேர்வுத்துறை இயக்குனரகம், இறுதி செய்தது. 8 லட்சம் மாணவ, மாணவியர், பொதுத்தேர்வில் பங்கேற்கின்றனர். மார்ச் 1 அல்லது 4ம் தேதியில், தேர்வை துவக்கும் வகையில்,

10ம் வகுப்பு மாணவ, மாணவியர் விவரம்: தேர்வுத்துறை உத்தரவு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் மாணவ, மாணவியரின் விவரங்கள், பள்ளிகள் தோறும் சேகரிக்கப்பட்டு, கல்வி மாவட்ட அளவில் பொறுப்பில் உள்ள பள்ளிகளிடம், "சிடி" க்களாக வழங்க, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது...

Wednesday, December 12, 2012

டி.என்.பி.எஸ்.சி., பணி நியமனத்தில், பெண்கள் பிரிவில் ஒரு இடத்தை காலியாக வைக்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

டி.என்.பி.எஸ்.சி., பணி நியமனத்தில், பெண்கள் பிரிவில் ஒரு இடத்தை காலியாக வைக்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சுஜாதா,38, தாக்கல் செய்த மனு: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு, ஜூலை 7 ல், நடந்தது.

பிளஸ் 2 தேர்வுக்கு இப்போதே ஏற்பாடுகள் : மார்ச் 1ல் துவங்க வாய்ப்பு

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல்வாரத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்கி மூன்றாம் வாரம் வரை நடைபெறும். 2013ம் ஆண்டில் நடைபெற உள்ள பிளஸ் 2 தேர்வுக்கு, இப்போதே தேர்வுத்துறை அதிகாரிகள், இயக்குனர் வசுந்தராதேவி தலைமையில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

பஸ் படிக்கட்டில் தொடர்ந்து பயணிக்கும் மாணவரை பள்ளி, கல்லூரிகளில் இருந்து நீக்கலாம்: உயர் நீதிமன்றம் பரிந்துரை

பஸ் படிக்கட்டுகளில் தொடர்ந்து பயணம் செய்யும் மாணவர்களை பள்ளி, கல்லூரிகளில் இருந்து நீக்கலாம் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

கல்வி உரிமை சட்டத்தின்படி மாணவர்களை பள்ளியில் சேர்க்க வயது, மாற்று சான்றிதழ் வேண்டாம்

கல்வி உரிமை சட்டத்தின்படி, வயது, பள்ளி மாற்றுச் சான்றிதழ் இல்லாமலே, மாணவர்களை பள்ளியில் சேர்க்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், 13 வயதுக்கு உட்பட்டோர், 8ம் வகுப்பு வரை படிக்க வேண்டும்.

பி.ஏ.,தொடர்பியல் ஆங்கிலத்தால் ஆசிரியர் நியமன நிராகரிப்பு : ஐகோர்ட் நோட்டீஸ்

அரசு அங்கீகரித்தும், பி.ஏ., தொடர்பியல் ஆங்கிலம் படித்தவர்களுக்கு, ஆசிரியர் பணி மறுக்கப்பட்டதாக தாக்கலான வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

Tuesday, December 11, 2012

பள்ளி ஆசிரியர்கள் விபரம்: இணையதளத்தில் பதிவு : கணக்கெடுப்பு தீவிரம்

 தமிழக அரசு பள்ளிகளில், ஆசிரியர்களின் விபரம், கல்வி துறை இயக்குனரகம் மூலம், சேகரித்து இணையதளத்தில் பதிவு செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் அரசு பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்கள்,..

2,308 முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு : சென்னையில் இன்று ஆஜராக உத்தரவு

முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, ஒருவழியாக, நேற்றிரவு, டி.ஆர்.பி., வெளியிட்டது. ஒதுக்கப்பட்ட 2,895 பணியிடங்களில், 2,308 பணியிடங்களுக்கான பட்டியல் மட்டும், வெளியாகி உள்ளது.
பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்கள்,..

Saturday, December 8, 2012

வீட்டு கதவை தட்டி ஆசிரியர் வேலைக்கு அழைப்பு : 18 ஆயிரம் ஆசிரியர் நியமனத்தில் ருசிகரம்

டி.இ.டி., தேர்வு முடிவு வெளியான ஒரு வாரத்தில், 13ம் தேதி, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட இருப்பதால், கலந்தாய்வு குறித்த தகவல்களை, பல்வேறு வகைகளில் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். பல மாவட்டங்களில், ஆசிரியர் வேலைக்கு தேர்வு பெற்றவர்களின் வீடுகளுக்கு சென்று,..

புதிய இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடக்கும் இடங்கள் அறிவிப்பு

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடக்கும் இடங்கள் விவரம்:
மாவட்டம் கலந்தாய்வு நடக்கும் இடம்
--------------------------------------------------------------
1. சென்னை எம்.சி.சி., மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு
2. கோவை பாரதி மெட்ரிக் மே.நி.பள்ளி, ஆர்.எஸ்.புரம், தடாகம் ரோடு, கோவை
3. கடலூர் சி.இ.ஓ., அலுவலகம், மஞ்சகுப்பம், கடலூர்
4. தர்மபுரி சி.இ.ஓ., அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம்
5. திண்டுக்கல் அவர்லேடி மே.நி.பள்ளி, மதுரை ரோடு, திண்டுக்கல்
6. ஈரோடு வெள்ளாளர் கலைக் கல்லூரி, திண்டல், ஈரோடு
7. காஞ்சிபுரம் பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மே.நி.பள்ளி, காஞ்சிபுரம்
8. கன்னியாகுமரி எஸ்.எல்.பி., மே.நி.பள்ளி, நாகர்கோவில்
9. கரூர் பசுபதி ஈஸ்வரா நகராட்சி பெண்கள் மே.நி.பள்ளி, கரூர்
10. கிருஷ்ணகிரி அரசு ஆ.மே.நி.பள்ளி, கிருஷ்ணகிரி
11. மதுரை இளங்கோ மாநகராட்சி மே.நி.பள்ளி, செனாய் நகர், மதுரை
12. நாகை கிரசன்ட் மெட்ரிக் மே.நி.பள்ளி, நாகூர்
13. நாமக்கல் நாமக்கல் தெற்கு அரசு மே.நி.பள்ளி
14. பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மே.நி.பள்ளி, பெரம்பலூர்
15. புதுக்கோட்டை பிரகதாம்பாள் தேர்வுக்கூடம், சி.இ.ஓ., அலுவலகம் அருகில், புதுக்கோட்டை
16. ராமநாதபுரம் சையது அம்மாள் மே.நி.பள்ளி, ராமநாதபுரம்
17. சேலம் சிறுமலர் மே.நி.பள்ளி, நான்கு ரோடு
18. சிவகங்கை சி.இ.ஓ., அலுவலகம்
19. தஞ்சாவூர் எஸ்.எஸ்.ஏ., கூடுதல் சி.இ.ஓ., அலுவலகம்
20. நீலகிரி சி.இ.ஓ., அலுவலகம்
21. தேனி சி.இ.ஓ., அலுவலகம்
22. திருவண்ணாமலை சி.இ.ஓ., அலுவலகம், தியாகி அண்ணாமலைப்பிள்ளை அரசு மே.நி.பள்ளி வளாகம்
23. திருவாரூர் கஸ்தூரிபாய் காந்தி மெட்ரிக் மே.நி.பள்ளி, திருவாரூர்
24. திருவள்ளூர் ஸ்ரீலட்சுமி மே.நி.பள்ளி, திருவள்ளூர்
25. திருப்பூர் ஜெய்வாபாய் மகளிர் மாநகராட்சி மே.நி.பள்ளி, திருப்பூர்
26. திருச்சி அரசு சையத் முதுசா மே.நி.பள்ளி, திருச்சி-8
27. நெல்லை சேப்டர் மே.நி.பள்ளி, நெல்லை மாநகரம்
28. தூத்துக்குடி சி.இ.ஓ., சீ.வா.அரசு மே.நி.பள்ளி வளாகம், தூத்துக்குடி
29. வேலூர் சி.இ.ஓ., அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம்
30. விழுப்புரம் சி.இ.ஓ., அலுவலகம்
31. விருதுநகர் கே.வி.எஸ்.மெட்ரிக் பள்ளி, விருதுநகர்
32. அரியலூர் அரசு மே.நி.பள்ளி, அரியலூர்

புதிய பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம்: ஆன்-லைன் கலந்தாய்வு

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 8,627 பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை அன்று ஆன்-லைன் மூலம் பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார்.அதேபோல், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 9,600 இடைநிலை ஆசிரியர்களுக்கு வரும் செவ்வாய்க்கிழமை (டிச.11) ஆன்-லைன் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தொடக்கக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார்.

கல்விக்கு அதிக நிதி:தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்

கல்வித்துறைக்கு முதல்வர் ஜெயலலிதா அதிக நிதி ஒதுக்கியுள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்...

18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவு

பள்ளிக்கல்வி, தொடக்க கல்வித்துறையில், 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, பணி நியமனம், மாணவர்களுக்கு இலவச புத்தகப் பை, இலவச காலணிகள், கலர் பென்சில்கள், கணித உபகரணப்பெட்டி ஆகியவை வழங்கும் விழா, 13ம் தேதி, சென்னை, நந்தனத்தில் உள்ள, ஒய்.எம்.சி.ஏ., திடலில் நடக்கிறது. முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று, புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவு மற்றும் மாணவர்களுக்கு, நலத்திட்டங்களை வழங்க இருப்பதாக, கல்வித்துறை...

தமிழக பள்ளிகளில் அட்சய பாத்திரம்: மாணவர்கள் பங்களிப்புடன் வைக்க உத்தரவு

மாணவர்களிடம் உள்ள சமுதாய ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் வகையில், பள்ளிக்கூட சத்துணவு மையங்களில், அட்சய பாத்திரம் வைக்க, அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, மாணவர்கள் தினமும், ஒரு காய் வீதம் அதில் போடவும், மறுநாள் அதை சமையலுக்கு பயன்படுத்தவும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது.....

பள்ளி விளையாட்டு போட்டி: அரசாணைக்கு தடை நீக்கம் - சென்னை ஐகோர்ட்

சி.பி.எஸ்.இ., பள்ளிகள் நடத்தும், விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்ள, தமிழக அரசுப் பள்ளி மாணவர்களை அனுமதித்தால், பள்ளி கல்வித்துறை நடத்தும் போட்டிகளில், சி.பி.எஸ்.இ., மாணவர்களும் பங்கு கொள்ள வாய்ப்பு தரப்படும்" என்கிற அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடையை, சென்னை ஐகோர்ட் நீக்கியது.

Wednesday, December 5, 2012

அரையாண்டு தேர்வில் பொது வினாக்களாக மாறும் கட்டாய வினாக்கள்?

கடந்தாண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், கணிதப் பாடத்தில் கேட்கப்பட்ட கட்டாயமாக்கப்பட்ட இரு வினாக்கள், பொது வினாக்களாக மாற்ற உள்ளதாகவும், வரும் அரையாண்டு தேர்விலேயே இது நடைமுறைப் படுத்தப்படும் எனவும், கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tuesday, December 4, 2012

டி.இ.டி.இறுதி தேர்வு பட்டியல் வெளியீடு

 Tamil Nadu Teachers Eligiblity Test 2012 - Results - Candidates - Secondary Grade Teachers (PAPER 1) - Individual Query  



Tamil Nadu Teachers Eligiblity Test Supplementary 2012 - Results - Candidates - Graduate Assistants (PAPER 2) - Individual Query  

கடந்த, ஜூலை மற்றும் அக்டோபரில் நடந்த, இரண்டு, டி.இ.டி., தேர்வுகளின், இறுதி தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டது.

சட்ட அங்கீகாரம் இல்லாத வாரிசுகளுக்கும் அரசு ஊழியரின் பண பலன்களை வழங்கலாம்-தினமலர்

ஏற்கனவே திருமணமான மத்திய அரசு ஊழியர், மற்றொரு பெண்ணை மணந்து, அதன் மூலம் பிறந்த குழந்தைகளுக்கும், ஓய்வூதியம் மற்றும் பணப் பலன்கள் வழங்கப்பட வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இனி ஒரு நாளுக்கு 200 எஸ்.எம்.எஸ்., மட்டுமே

இனி ஒரு நாளில் 200 எஸ்.எம்.எஸ்., மட்டுமே அனுப்ப முடியும். இதற்கான உத்தரவை சுப்ரீம் கோர்ட் இன்று பிறப்பித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு ஒரு நாளில் ஒரு மொபைலில் இருந்து 200 எஸ்.எம்.எஸ்., மட்டுமே அனுப்ப முடியும் என்ற கட்டுப்பாட்டை...

Saturday, December 1, 2012

முகவரி சான்று இல்லாத வங்கி கணக்குகள் ரத்து : ரிசர்வ் வங்கி உத்தரவு

கூலிப்படை மற்றும் பயங்கரவாதிகளுக்கு பணம் பரிமாறுவதை தடுக்க, கணக்கு வைத்துள்ளோரின் முகவரி சான்றுகளை சரிபார்க்க, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது.வங்கிகளில், வாடிக்கையாளர்களை அதிகரிக்க, உரிய ஆவணங்கள் இல்லாமல் கணக்குகள் துவக்கப்பட்டன. அத்தகைய வாடிக்கையாளர்களின் விவரங்கள், சரி பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், ""சரியான ஆவணங்கள் இல்லாத வங்கி கணக்குகள், ரத்து செய்யப்படும்,'' என்றார்.

குரூப்-1 தேர்வு தள்ளிவைப்பு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு, ஜனவரி, 27ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.