Pages

Sunday, March 31, 2013

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் வரும் 3-ம் தேதி திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது

இலங்கை தமிழர் பிரச்னைக்காக பல்வேறு கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதனால் அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டன. இதில் பொறியியல் கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர். கல்லூரிகள் திறப்பதில் குழப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அண்ணா பல்கலை.யில் கீ்ழ் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளும் வரும் 3-ம் தேதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, March 30, 2013

தமிழகம் முழுவதும் (SSA)அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், செயல்பட்டு வந்த சிறப்பு உண்டு, உறைவிட பள்ளிகளில் பயிலும் மாணவர்களை வீட்டின் அருகில் உள்ள பள்ளியில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது

தமிழகம் முழுவதும், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மாணவர்கள் படிக்கும் வகையில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், 25 சிறப்பு உண்டு, உறைவிட பள்ளிகள், கடந்த 7 ஆண்டுக்கும் மேலாக, இயங்கி வருகின்றன. அவற்றில் தங்கி, 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்ற...

பள்ளி கல்வித் துறையில் இளநிலை உதவியாளர்கள் 176 பேருக்கு பதவி உயர்வு

பள்ளி கல்வித் துறையில், 176 இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்களாக, நேற்று பதவி உயர்வு செய்யப்பட்டனர். நேரடி தேர்வு மூலம், உதவியாளர் பணியிடம் தேர்வு செய்யப்படுவது இல்லை. இளநிலை உதவியாளர்களில் இருந்து, பணிமூப்பு அடிப்படையில், உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது.



விடைத்தாள் சேதம்: மறுதேர்வு கிடையாது என தேர்வுத்துறை அறிவிப்பு

விருத்தாசலத்தில், 10ம் வகுப்பு விடைத்தாள்கள் சேதம் அடைந்த விவகாரத்தில், மறுதேர்வு நடத்தப்பட மாட்டாது. தமிழ் முதற்தாளில், மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெறுகிறார்களோ, அதே மதிப்பெண்கள், இரண்டாம் தாளுக்கும் வழங்கப்படும்,'' என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.


விருத்தாசலம் ரயில் பாதையில் 10ம் வகுப்பு விடைத்தாள் சிதறி கிடந்த அவலம்


பார்சலில் அனுப்பப்பட்ட, 10ம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் விடைத் தாள்கள், ரயில் பாதையில் சிதறிக் கிடந்ததால், விருத்தாசலம் ரயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்ற மார்ச் 31 வரை கெடு

கல்வி உரிமை சட்டத்தை (ஆர்.டி.இ.,) மார்ச் 31ம் தேதிக்குள் அனைத்து மாநிலங்களிலும் நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசு பிறப்பித்திருந்த உத்தரவு இன்னும் பெரும்பாலான மாநிலங்களில் அமல்படுத்தப்பட படாமல் உள்ளது..


தகுதி தேர்வை காரணமாக கொண்டு பட்டதாரி ஆசிரியரை வெளியேற்ற தடை - மதுரை ஐகோர்ட் கிளை

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனக்கூறி, தேனி பட்டதாரி ஆசிரியரை வெளியேற்றும் உத்தரவிற்கு, மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்தது. தேனியைச் சேர்ந்த ராதிகா என்பவர் தாக்கல் செய்த மனு: நான் தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிகிறேன்..


சிவில் சர்வீஸ் தேர்வில் மாற்றம்: வாபஸ் பெற்றது யு.பி.எஸ்.சி

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான, யு.பி.எஸ்.சி., முதன்மைத் தேர்வில் செய்யப்பட இருந்த மாற்றங்களை, யு.பி.எஸ்.சி.,வாபஸ் பெற்றது. ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் முடிவுக்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இந்த முடிவை எடுத்தது.

10ம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் தேர்வில் கேள்வித்தாளில் குளறுபடி ஏற்பட்டது எப்படி? கேள்வியை தொட்ட மாணவர்களுக்கு ஐந்து மதிப்பெண் உறுதி

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று நடந்த தமிழ் இரண்டாம் தாள் தேர்வில், ஐந்து மதிப்பெண்களுக்கான, வங்கி மாதிரி படிவம் வழங்காததால், தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும், பெரும் குளறுபடி ஏற்பட்டது. வழக்கம்போல், சாக்குபோக்கு கூறி மழுப்பாமல், தவறை ஒப்புக்கொண்ட தேர்வுத்துறை இயக்குனர், மாணவர்கள், கேள்வியை "தொட்டிருந்தாலே', கேள்விக்குரிய ஐந்து மதிப்பெண்கள், சுளையாக வழங்கப்படும் என, அறிவித்துள்ளார்.

2 லட்சம் பேருக்கு அரசு வேலை: புள்ளி விபரங்களுடன் அரசு தகவல்

அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில், 47 ஆயிரத்து 273 பேர் நியமிக்கப்பட உள்ளனர்" என, அமைச்சர் முனுசாமி தெரிவித்தார். அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்புவது குறித்து, சட்டசபையில் நேற்று, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது, எம்.எல்.ஏ.,க்கள் பேசியதாவது:

கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மாதாந்திர கட்டணம் வரும், ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்படுகின்றன.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மாதாந்திர கட்டணங்கள், வரும், ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்படுகின்றன. 1ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை, கட்டணங்கள் மாற்றப்பட்டுள்ளன. எனினும், டியூஷன் கட்டணங்களில், எவ்வித மாற்றமும் இல்லை. ஒன்று முதல், 8ம் வகுப்பு

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்தார்

அரசுப் பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்தார்.சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற 2013-14ம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய மார்க்சிஸ்ட்

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வர்கள் மார்ச் 30க்குள் சான்றிதழ்களை பெறலாம்

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு, எழுதிய மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை அந்தந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பெற்று கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. ஜூன் 2012 ஆண்டுக்கான தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு இரண்டாமாண்டு

TNPSC- Departmental Test Bulletin MAY 2011 /2012

Bulletin No.View/Download
Bulletin No. 15 dated 7th August 2012(contains results of Departmental Examinations, May 2012)View/Download
Bulletin No. 16 dated 16th August 2012(contains results of Departmental Examinations, May 2012)View/Download
Bulletin No. 17 dated 7th August 2011(contains results of Departmental Examinations, May 2011)View/Download
Bulletin 18 dated 16th August 2011
(contains results of Departmental Examinations, May 2011)
View/Download

பிளஸ் 2 கணிதம், இயற்பியல் தேர்வுகளுக்கு போனஸ் மதிப்பெண்?

பிளஸ் 2 கணிதம் மற்றும் இயற்பியல் தேர்வுகளுக்கு, போனஸ் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என, சட்டசபையில் நேற்று வலியுறுத்தப்பட்டது. இதனால், கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்குமா என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த 11ம் தேதி இயற்பியல் தேர்வும், 14ம் தேதி கணிதத் தேர்வும் நடந்தன.

வெண்புள்ளி உள்ள மாணவர்களை புறக்கணிக்கக் கூடாது

உடம்பில் வெண்புள்ளிகள் உள்ளதை காரணங்காட்டி, மாணவர்களை பள்ளி நிர்வாகம் பாரபட்சமாக நடத்தக்கூடாது' என, பள்ளிக் கல்வி துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.தோலில், ஆங்காங்கே வெள்ளையாக தோன்றும் புள்ளிகள், வெண்புள்ளிகள் எனப்படுகிறது.

Monday, March 25, 2013

செய்முறைத் தேர்விற்கு பதிவு செய்யாத 10 ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு அனுமதி : ஐகோர்ட் உத்தரவு

பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்விற்கு, பதிவு செய்யாத தனித் தேர்வர்களை, அறிவியலைத் தவிர, பிற பாடங்களில் தேர்வு எழுத அனுமதிக்குமாறு அரசுக்கு, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. தேனி, பூதிப்புரம், ராஜேந்திரன் தாக்கல் செய்த மனு:

கல்வித் துறைகளில், ஆசிரியர் பணி, ஆராய்ச்சிப் பணிகள் உள்ளிட்ட, பல்வேறு வேலைவாய்ப்புகளை, இணையதளம் வழியாக பெறுவதற்கு, யு.ஜி.சி., ஏற்பாடு செய்துள்ளது.

இதில், வேலை எதிர்பார்ப்போர், வேலை தரும் கல்வி நிறுவனங்கள் என, இரு பிரிவினரும், பதிவு செய்து கொள்ள வேண்டும் என, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது. "நெட், செட்" மற்றும் பி.எச்டி., முடித்தவர்கள், கல்லூரி மற்றும் பல்கலைகளில், வேலைவாய்ப்புகளை பெறுவதற்காக, பதிவு செய்ய click here என்ற தனி இணையதளம் வழியாக, புது இணையதள வசதியை, யு.ஜி.சி., ஏற்படுத்தி உள்ளது.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை துவக்கம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை அனைத்து மாவட்டங்களிலும் தொடங்குகிறது. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழித்தாள்கள் முதலில் திருத்தப்பட உள்ளன. ஏப்ரல் 15ம் தேதிக்குள் விடைத்தாள்களை திருத்தி முடிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. வரும் 27ம் தேதியுடன் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவடைகிறது.

Saturday, March 23, 2013

கல்லூரிகள் 25ம் தேதி திறப்பு: உயர் கல்வித்துறை அறிவிப்பு

இலங்கையில், தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிக்காத மத்திய அரசு மற்றும் அரசியல் கட்சிகளை எதிர்த்து, தமிழகத்தில்,கல்லூரி மாணவர்கள், தொடர் போராட்டத்தில், ஈடுபட்டுள்ளனர். சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க, அனைத்து கல்லூரிகளுக்கும், விடுமுறை அறிவிக்கப்பட்டது. நிலைமை சீராகி உள்ளதை அடுத்து, நாளை (25ம் தேதி),

தேர்வு முறைகேடுகள் வட மாவட்டங்களில் அதிகம்: கல்வி தரத்தில் பின்தங்கிய நிலை காரணமா?

பிளஸ் 2 தேர்வில், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, 18 மாவட்டங்களில் இருந்து, 289 மாணவர்கள், பறக்கும் படை குழுவினரிடம் பிடிபட்டுள்ளனர். கல்வியில் மிகவும் பின் தங்கியுள்ள, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் போன்ற, வட மாவட்டங்களில், தேர்வு முறைகேடுகள் அதிகம் நடந்துள்ளன.கடந்த 1ம் தேதியில் இருந்து, பிளஸ் 2 தேர்வுகள்

பள்ளி கல்வித் துறையில், இருக்கை கண்காணிப்பாளர்கள், 100 பேர், கண்காணிப்பாளர்களாக, நேற்று பதவி உயர்வு செய்யப்பட்டனர்

மாவட்ட கல்வி அலுவலகங்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில், இருக்கை கண்காணிப்பாளர்களாக, பணியாற்றி வருபவர்களில், பணிமூப்பு அடிப்படையில், 100 பேர், கண்காணிப்பாளர்களாக, நேற்று பதவி உயர்வு செய்யப்பட்டனர்.இதற்கான கலந்தாய்வு, "ஆன்-லைன்' முறையில், நடந்தது.

ஆசிரியர்கள் இடமாறுதல் தொடர்பான ஆணையை செயல்படுத்த மறுத்ததாக பள்ளிக் கல்வித் துறை மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், நாட்டாமங்கலம் கள்ளர் சீரமைப்பு அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் சிவக்குமார் உள்பட 12 பேர் தாக்கல் செய்துள்ள மனு விவரம்:

வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தையைப் பராமரிப்பதற்காக மகப்பேறுக்கு பிந்தைய விடுமுறை எடுத்துக் கொள்ளும் உரிமை அரசு ஊழியரான தாய்க்கு உண்டு -சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

குழந்தையைப் பராமரிப்பதற்காக மகப்பேறுக்கு பிந்தைய விடுமுறை எனக்கு தர வேண்டும் என்றும், குடும்ப இன்சூரன்ஸ் திட்டத்தில் எனது குழந்தையின் பெயரையும் சேர்க்க வேண்டும் என்றும் கோரி சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் அதிகாரியாகப் பணியாற்றும் பெண் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

Friday, March 22, 2013

தொடக்கக்கல்வி துறையின் கீழ் உள்ள தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 20.03.2013 அன்றைய நிலவரப்படி காலிப்பணியிட விவரம் கோரி உத்தரவு.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் உத்தரவில் கூறியிருப்பதாவது : 20.03.2013 அன்றுள்ளபடி ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்

2002-03ஆம் கல்வியாண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் பயிற்றுனராக நியமிக்கப்பட்டு 2006-07ஆம் கல்வியாண்டு பள்ளிக்கல்விதுறைக்கு பணி மாறுதல் விருப்பமின்மை தெரிவித்து தற்போது 2013-14ஆம் கல்வியாண்டில் பணி மாறுதல் செல்ல விருப்பமுள்ள ஆசிரிய பயிற்றுநர்களின் விவரம் கோரி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.

2002-03ஆம் கல்வியாண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் பயிற்றுனராக நியமிக்கப்பட்டு 2006-07ஆம் கல்வியாண்டு பள்ளிக்கல்விதுறைக்கு பணி மாறுதல் விருப்பமின்மை தெரிவித்து தற்போது 2013-14ஆம் கல்வியாண்டில் பணி மாறுதல் செல்ல விருப்பமுள்ள ஆசிரிய பயிற்றுநர்களின் விவரம் கோரி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு. மேற்காணும் விவரங்களை உரிய படிவத்தில் 22.03.2013க்குள் இயக்ககத்திற்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோடை விடுமுறைக்குப் பின் மீண்டும் 03.06.2013 அன்று பள்ளிகள் திறக்க உத்தரவு

இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது : தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் கோடை விடுமுறை முடிந்து 2013-14ஆம்

Wednesday, March 20, 2013

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - 2013 DDE - May 2013 Examinations Time Table(தேர்வு அட்டவணை) வெளீயீடு

DISTANCE EDUCATION (REGULAR / OPEN UNIVERSITY STREAM)-DEGREE EXAMINATIONS - may - 2013

Instructions for May -  2013
INSTRUCTIONS TO CANDIDATES download
Examination Time Table for May -  2013
All B.A. (including Lateral Entry, Double Degree) download
All B.Sc. (including Lateral Entry, Double Degree) download
All B.Com. ,All B.B.A.,B.B.S. and B.M.M (including Lateral Entry, Double Degree) download
B.Music, B.Dance, B.Lit., B.B.L., B.A.L., B.G.L., B.C.A., B.M.C., B.L.I.S. & B.F.T.T. (including Lateral Entry, Double Degree) download
All M.A. download
All M. Sc. download
All M.Com. and  All M.B.A. download
M.C.A., M.H.R.M., M.F.M., M.M.M., M.L./LL.M., M.L.M., M.S.W., M.L.I.S.,
All M.H.Sc., Master of Dance & Master of Music (Vocal / Veena / Violin / Flute)
download
All P.G. Diploma and Advanced Diploma download
All Diploma and Post Diploma download
All Certificate Courses, Foundation Courses and Pre-Foundation Course download
B. Ed. download
Dual Degree System. download
Examination Application Form for May -  2013
B.Ed. Programme download
Certificate Programmes
Diploma/Post Diploma Programmes
Pre-Foundation/ Foundation Programmes
B.A./B.Sc./ B.Com./B.B.A./B.B.S./ B.M.M. / B.Lit./B.B.L./B.A.L./ B.G.L./ B.C.A./ B.M.C./ B.L.I.S./B.F.T.T./ B.Music/ B.Dance (including Lateral Entry, Double and Dual)
M.A./M.Sc./M.Com./M.B.A./ M.C.A./ M.H.R.M./ M.F.M./ M.M.M./ M.L./LL.M./ M.L.M./ M.S.W./ M.L.I.S./ M.H.Sc./ M.Dance / M.Music (Vocal / Veena / Violin / Flute) (including Lateral Entryl)
Post Graduate Diploma / Advanced Diploma Programmes

Tuesday, March 19, 2013

கல்வித்துறையில் 500 இளநிலை உதவியாளர் நியமனம்

பள்ளி கல்வித்துறையில், விரைவில், 500 இளநிலை உதவியாளர்கள், பணி நியமனம் செய்யப்படுவர் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, குரூப்-4 தேர்வில் இருந்து, இளநிலை உதவியாளர்கள், 500 பேர், பள்ளி கல்வித்துறைக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பெயர் பட்டியல், பள்ளி கல்வித் துறையிடம் வழங்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து, அரசின் அனுமதியை பெற்று, மிக விரைவில், "ஆன்-லைன்' கலந்தாய்வு வழியில், 500 பேரும், பணி நியமனம் செய்யப்படுவர் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் மாற்றம் :பள்ளிகளுக்கு சுற்றறிக்கையில் விளக்கம்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, கணித வினாத்தாளில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் குறித்த சுற்றறிக்கை, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், கடந்த கல்வியாண்டில், 10ம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. இதில், அறிவியல் பாடத் தேர்வில் செய்முறை அமல்படுத்தியதோடு,..

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பொருட்கள் பள்ளி திறக்கும் நாளில் வழங்க நடவடிக்கை

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருட்களை, பள்ளி திறக்கும் நாளில் வழங்க, பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு, அரசால்,15 வகையான விலையில்லா பொருட்கள் வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு முதல்,

மத்திய அரசு ஆசிரியர் தகுதித் தேர்வு - CTET July 2013 – Apply Online for Central Teacher Eligibility Test

                            Important Dates:

Starting Date for Online Registration: 15-03-2013.

Closing Date for Online Registration: 16-04-2013.

Last Date for Receipt of Application: 22-04-2013.

Last Date for Receipt of Application (far flung areas): 29-04-2013.

Date of Written Examination: 28-07-2013.

For other details like place of posting, salary, nature of appointment, and other instructions and conditions, click on the link given below…

CTET July 2013More Information
CTET Advt (English)Get Details
CTET Advt (Hindi)Get Details
CTET Online ApplicationGet Details
CTET Complete DetailsGet Details
CTET EligibilityGet Details
CTET Exam PatternGet Details
CTET SyllabusGet Details

 

Sunday, March 17, 2013

குழந்தைகள் பிறப்பு வீதம் குறைவு: கேரளாவில் பள்ளிகள் மூடப்படும் அபாயம்

கடந்த சில ஆண்டுகளாக, கேரளாவில், குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், போதுமான குழந்தைகள் இல்லாமல், பல பள்ளிகள் மூடப்படும் நிலைமை உருவாகி உள்ளது.

நாகர்கோவில் ரயில்வே பிளாட்பாரத்தில் சிதறிய விடைத்தாள்கள் - தினமலர்

நாகர்கோவில் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் பிளஸ் 2 விடைத்தாள் சிதறிய சம்பவம் தொடர்பாக மாணவர்கள் பாதிக்காத வகையில் வீடியோ காட்சிகள் மூலம் துல்லியமாக ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எதிர்காலத்துக்கு கல்வியே அடிப்படை : தமிழக கவர்னர்

நாட்டின் எதிர்காலம், கல்வியை அடித்தளமாக கொண்டுள்ளது,'' என, தமிழக கவர்னர் ரோசய்யா பேசினார்.ஓசூரில், இன்டர்நேஷனல் பள்ளியை, கவர்னர் ரோசய்யா நேற்று துவக்கி வைத்து பேசியதாவது:

I.A.S (ஐ.ஏ.எஸ்)முதன்மை தேர்வில் - மெயின் எக்சாம் - தேர்வில் புதிய முறை :ஆங்கில திறனுக்கு அவசியம் இருக்காது

ஐ.ஏ.எஸ்., தேர்வில் புதிய முறையை பின்பற்ற, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, முதன்மை தேர்வில் - மெயின் எக்சாம் - ஆங்கிலத்திறன் அவசியம் இல்லை; அந்த மதிப்பெண், இறுதித் தேர்வில் சேர்க்கப்பட மாட்டாது என, எதிர்பார்க்கப்படுகிறது.ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., போன்ற, உயரதிகாரிகளை தேர்வு செய்யும் பணியை, யு.பி.எஸ்.சி., அமைப்பு மேற்கொள்கிறது. இம்மாதம், 5ம் தேதி, யு.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிவிப்பில், பல மாற்றங்கள் இடம்பெற்றிருந்தன.
அவையாவன:

இதுவரை தனியாக நடத்தப்பட்டு வந்த மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) தேர்வு மட்டும் குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) நடத்தும் குரூப் 2 மற்றும்VAO தேர்வில் இருந்து பொதுத் தமிழ் பகுதி நீக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வுகளிலும் தமிழ் பாடத்திற்கான மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன. அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–1, குரூப்–1–ஏ, குரூப்–1–பி,

6 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் முழு ஆண்டு தேர்வு - மாலைமலர்


அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரே நேரத்தில் தேர்வு தொடங்கி முடிக்க வேண்டும் என்ற புதிய நடைமுறை கடந்த ஆண்டு முதல் பின்பற்றப்படுகிறது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இயற்பியல் வினாத்தாள் அவுட்?: கல்வித்துறையினர் ரகசிய விசாரணை - தினமலர்

துறையூர் பள்ளியில், தேர்வு நேரத்துக்கு முன், வினாத்தாளை திறந்து பார்த்து, அதற்கான விடைகளை மாணவியருக்கு வழங்கிய தேர்வு கண்காணிப்பாளரிடம், கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக, தகவல் வெளியாகி உள்ளது.

Saturday, March 16, 2013

பீகாரில், 10 லட்சம் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை- மெகாதிட்டம்

பீகாரில், பள்ளி மாணவியர், 10 லட்சம் பேருக்கு, தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்படும்,'' என, அம்மாநில, கல்வி திட்ட குழு இயக்குனர் ராகுல் சிங் கூறினார்.இது குறித்து, ராகுல் சிங் கூறியதாவது:

தமிழகத்தில், 14,130 பள்ளிகளில் வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் - 360 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில், 14,130 பள்ளிகளில், வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் கட்டுவதற்கு, 360 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.தமிழக அரசின் செய்திக்குறிப்பு:

பள்ளி கேன்டீன்களில் "பாஸ்ட் புட்' விற்பனைக்கு தடை: மத்திய அரசு ஆலோசனை

பீட்சா, பர்கர் போன்ற, "பாஸ்ட் புட்' அயிட்டங்களை, பள்ளி கேன்டீன்களில், இனி விற்பனை செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு பதிலாக, உடல் ஆரோக்கியத்துக்கு உதவும், பழங்கள், பால் பொருட்களை விற்பனை செய்யலாம்' என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு ஆலோசனை வழங்கியுள்ளது.

TNPSC - DEPARTMENTAL EXAMINATION MAY 2013 - NOTIFICATION RELEASED

   Instructions to Candidates



List of Current Notifications

S No. Advt. No./ Date of Notification Notification Online Registration Date of Examination Activity
From To
1
 
15.03.2013
Deptl.Exam May'2013
15.03.2013 15.04.2012 24.05.2013 to
31.05.2013
Apply Online

26 ஒன்றியங்களில் மாதிரி பள்ளிகள் துவக்கவும் பணியிடங்கள் உருவாக்கவும் முதல்வர் உத்தரவு

தமிழகத்தில் 26 ஒன்றியங்களில் புதிய மாதிரிப் பள்ளிகள் துவங்குவதற்கும் அதற்கான பணியிடங்கள் உருவாக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அரசு அறிவிப்பு:..

Friday, March 15, 2013

10 கோடி மக்கள் பேசப்படும் மொழிகள் எத்தனை தெரியுமா?

உலக அளவில் 6500க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இதில் சுமார் 2000 மொழிகள் 1000த்திற்கும் குறைவான மக்கள் தொகையினரால் மட்டுமே பேசப்படுகின்றன.

162 பி.எட்., கல்லூரிகள் துவக்க விண்ணப்பங்கள் : துணைவேந்தர் தகவல்

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில், 162 பி.எட்., கல்லூரிகள் துவக்க, விண்ணப்பங்கள் வந்துள்ளன,'' என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

ஜூன் மாதம், பள்ளி துவங்குவதற்குள் ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு : பள்ளி கல்வி துறை திட்டம்

ஜூன் மாதம், பள்ளிகள் திறந்தபின், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்தினால், ஆசிரியர்கள், பாடம் நடத்துவதில் கவனம் செலுத்தாமல், விரும்பும் இடங்களுக்கு, மாறுதல் வாங்குவதிலேயே, கவனம் செலுத்துகின்றனர். இதனால், கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு, கோடை விடுமுறையான, மே மாதத்திலேயே, பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்தி முடிக்க, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.


28ம் தேதி முதல்,பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை துவங்குவதற்கு, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.

வரும், 28ம் தேதி முதல், விடைத்தாள் திருத்தும் பணியை துவங்குவதற்கு, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. ஏப்., 14ம் தேதிக்குள், அனைத்துப் பணிகளையும் முடிக்க வேண்டும் என, அலுவலர்களுக்கு, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது

யுபிஎஸ்சி மத்திய அரசு பணியாளர் தேர்வு முறை மாற்றங்கள் நிறுத்தம்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வு முறையில் கொண்டுவரப்பட்ட பல்வேறு மாற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.மத்திய அரசு பணியாளர் தேர்வு முறையில் மாநில மொழிகளைப் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டது....

கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற கேட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆந்திரா முதலிடம் பிடித்துள்ளது. அந்த மாநிலத்தில் 22,476 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4,985 மாணவர்கள் தேர்ச்சியுடன் தமிழகம் 9வது இடத்தை பிடித்துள்ளது. தேர்வு முடிவுகளை இணையதளத்தில் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, March 14, 2013

"டெசோ' அமைப்பு, கடந்த, 12ம் தேதி நடத்திய, "பந்த்' நாளில் வேலைக்கு வராமல் "மட்டம்'அரசு ஊழியர், ஆசிரியர் மீது நடவடிக்கை?

"டெசோ' அமைப்பு, கடந்த, 12ம் தேதி நடத்திய, "பந்த்' நாளன்று, வேலைக்கு வராத அரசு ஊழியர், ஆசிரியர்களின் விவரங்கள், மாவட்ட வாரியாக சேகரிக்கப்பட்டு, அரசின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவர்கள் மீது, விரைவில், துறை ரீதியாக, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிகிறது.

மேல்நிலை வரைவு பாடத்திட்டம்: ஏப்ரலில் இணையத்தில் வெளியீடு

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான வரைவு பாடத்திட்டம், அடுத்த மாதம், இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. பிளஸ் 1க்கு, 2014-15ம் கல்வி ஆண்டிலும், பிளஸ் 2வுக்கு, 2015-16ம் கல்வி ஆண்டிலும், புதிய

தபால் மூலம் வாக்காளர் அட்டை: தேர்தல் கமிஷன் ஏற்பாடு

தபால் மூலம் அடையாள அட்டையை வாக்காளர்கள் பெற்றுக் கொள்ள, தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது.தமிழகத்தில், 1993 முதல், போட்டோவுடன் கூடிய வாக்காளர் பட்டியல், வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணியை,....

யு.பி.எஸ்.சி., - டி.என்.பி.எஸ்.சி., - டி.இ.டி., உள்ளிட்ட தேர்வுகளில், திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் படித்தோர் அதிகளவில் தேர்வாகி உள்ளனர்,'' என, உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் கூறினார்.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தின், 6வது பட்டமளிப்பு விழா, சென்னை பல்கலைக் கழக வளாகத்தில் நேற்று நடந்தது. துணைவேந்தர் சந்திர காந்தா, வரவேற்புரையாற்றினார். கவர்னர் ரோசய்யா, தலைமை தாங்கினார். விழாவில், 35,432 பேருக்கு இளங்கலை பட்டமும்; 6,176 பேருக்கு முதுகலை பட்டமும்; 377 பேருக்கு, எம்.பில்., பட்டமும்; 5,937 பேருக்கு...

ஓய்வு பெறும் நாளில் விழா: டி.என்.பி.எஸ்.சி., சீரமைப்பை பட்டியலிட்டார் நட்ராஜ்

டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பதவியிலிருந்து நேற்றுடன் ஓய்வு பெற்ற நட்ராஜ், தன் பணி காலத்தில் நடந்த, சீரமைப்புகள் பற்றி பட்டியலிட்டார்.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில், அவர் நேற்று பேசியதாவது: முதன் முறையாக பணியாளர் தேர்வாணையம்....

Tuesday, March 12, 2013

பட்டப்படிப்பில் தமிழ் வழியில் படித்தால் மட்டுமே I.A.S மற்றும் I.P.S தேர்வுகளை தமிழில் எழுத முடியும்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பாணையில் ஐ.ஏ.எஸ். முதன்மை (மெயின்) தேர்வில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதன்மை தேர்வு எழுதுவதிலும், விருப்பப் பாடங்களைக் குறைத்து பொது அறிவு மற்றும் பொதுப்பாடங்களுக்க...

பத்திரப் பதிவு எழுத்தர் பணிக்கு 10ம் வகுப்பில் தமிழ் கட்டாயம்

பத்திரப் பதிவு ஆவணங்கள் எழுதுவோர், தமிழ் மொழியை, முதல் பாடமாக அல்லது இரண்டாவது பாடமாக படித்து, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கூடங்கள் பற்றிய ஆய்வு விபரங்கள்

ஆர்.டி.இ., எனப்படும் 14 வயதுக்குட்பட்ட ‘அனைவருக்கும் கட்டாய மற்றும் இலவச கல்வி சட்டம்’, 2010 ஏப்.1ம் தேதி செயல்பாட்டுக்கு வந்த பின் , 2012 செப்., வரை இச்சட்டத்தின் கீழ், புதிதாக 3,34,340 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் சேர்ந்துள்ளன, என இது குறித்த ஆய்வு நடத்திய ‘எகனாமிக் சர்வே’ தெரிவித்துள்ளது.