Pages

Friday, February 28, 2014

தேர்தல் பணி: அரசு பெண் ஊழியர்களுக்கு அருகில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் பணி ஒதுக்கீடு

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு பெண் ஊழியர்களுக்கு தேர்தல் கமிஷன் வழங்கியுள்ள சில சலுகைகள் பெண் போலீசாருக்கும் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தேர்தல் பணியில் அரசு பெண் ஊழியர்கள், ஆசிரியர்கள்,பெண் போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். 


அரசு ஊழியர் சம்பள விகிதம் நிர்ணயிப்பதில் பிரச்னை : ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தலைமையில் குழு

அரசு ஊழியர்களில், 20 துறைகளில் உள்ள, 52 பிரிவினருக்கான சம்பளம் குறித்து, பரிந்துரை செய்ய, ஓய்வு பெற்ற, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் குழுவை அமைக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


உயர் பதவியில் குறைந்த நாட்கள் இருந்தாலும் தகுந்த பென்ஷன் உண்டு

உயர் பதவியில் குறைந்த நாட்கள் இருந்தாலும், அதற்குரிய பென்ஷனை தான் வழங்க வேண்டும்' என, ராணுவ தீர்ப்பாயம் உத்தரவிட்டது செகந்தராபாத், பிருந்தாவன் காலனியை சேர்ந்த கிருஷ்ணாராவ், சென்னையிலுள்ள ராணுவ தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனு..


Wednesday, February 26, 2014

நாளை 27.02.2014 மத்திய அமைச்சரவைக் கூட்டம்: 50% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைப்பு, 10% அகவிலைப்படி உயர்வு, ஓய்வு பெறும் வயது 62 ஆக அதிகரிப்பு

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62ஆக உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில்
வெளியாகும் என தெரிகிறது. மார்ச் 1ந் தேதியிலிருந்து இந்தஉயர்வு அமலுக்கு வரும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



தொடக்க கல்வி – பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு: இவ்வார இறுதியில் நடைபெற வாய்ப்பு

தொடக்க கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு குறித்தான தற்போதிய நிலவரம்

தொடக்க கல்வி இயக்குநர் அவர்கள் அனைத்து உதவி தொடக்க கல்வி அலுவலர்களிடமிருந்தும், பட்டதாரி ஆசிரியர் பாடவாரியான காலிப்பணியிட விபரம் மற்றும் பாட வாரியான தேர்ந்தோர் பட்டியல் விபரமும் தொகுக்கப்பட்டு வருவதாகவும், அப்பணி வெள்ளிகிழமை நிறைவடையும் என்றும் தெரிவித்தார். எனவே அதன் பின், ஓரிரு தினங்களில் (சனி அல்லது ஞாயிறு) பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tuesday, February 25, 2014

8-ம் வகுப்பு திறனாய்வுத் தேர்வு மூன்று வாரத்தில் ரிசல்ட்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய்வழி திறன்தேர்வு என்ற சிறப்பு திறனாய்வுத்தேர்வு நடத்தப்படுகிறது. 


மாணவர்கள் முன்பு வினாத்தாள் கவர் பிரிக்க உத்தரவு

பிளஸ் 2 வினாத்தாள், ஒவ்வொரு வகுப்பறைக்கும் தேவையான அளவு, "கவர்" செய்யப்பட்டு உள்ளதால் தேர்வெழுதப்படும் மாணவர்கள் முன்னிலையில் பிரிக்க உத்தரவிட்டு உள்ளது. இதனால் முன்கூட்டியே வினாத்தாள், "அவுட்" ஆவதற்கு வாய்ப்பில்லை என கல்வித்துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.


தகவல் அறியும் உரிமை சட்டம்விழிப்புணர்வுக்கு புது ஏற்பாடு

தகவல் உரிமைச் சட்டத்தை, அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ள ஏதுவாக, ரேடியோ, சினிமா தியேட்டர்களில், விளம்பரங்களை வெளியிட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 


டி.இ.டி., தேர்வில் சிறப்பு தேர்ச்சியா?மார்ச் 12 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), முதல்வர், 5 சதவீத சலுகை அளித்ததால் தேர்ச்சி பெற்ற, 47 ஆயிரம் பேருக்கு, மார்ச், 12 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.


ஆசிரியர் தகுதித்தேர்வு: மார்ச் 12ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு துவக்கம்

ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் மார்ச் 12ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்க்கும் பணி துவங்கவுள்ளது. தளர்வுக்கு முன்பாக 20 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், தற்போது 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் முதல்தாளைத் தொடர்ந்து 2-ம் தாளுக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Monday, February 24, 2014

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மட்டும் இல்லாமல், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும், சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,) எழுதலாம்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மட்டும் இல்லாமல், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும், சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,) எழுதலாம்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. 


மத்திய அரசு ஊழியர்களுக்கான 50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்குவதற்கான அறிவிப்பு, இந்த வாரத்தில் வெளியாகலாம்?

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஒய்வூதியதாரர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது சார்பான அறிவிப்பு கடந்த வாரமே எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் கடந்த வாரத்தில் கூடிய மத்திய அமைச்சரவையில் இதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனினும் மத்திய நிதியமைச்சர் தற்பொழுது வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு வருகிற 26ம் தேதி இந்தியா வருகிறார்.



Tuesday, February 18, 2014

பார்வையற்ற பட்டதாரிகளுக்கு ஏப்., 28ல் சிறப்பு டி.இ.டி., தேர்வு

'பார்வையற்ற பட்டதாரிகளுக்கு, ஏப்ரல், 28ல், சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும்' என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவித்து உள்ளது.


ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய விளக்கங்கள்

* தகுதிகாண் பருவத்தில் உள்ளவர்கள் EL எடுத்தால் probation period தள்ளிப்போகும்.
* பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்ததும் ஈட்டிய
விடுப்பினை ஒப்படைத்து பணமாகப் பெறலாம். ஆண், பெண் இருவரும்.



இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/2013 விசாரணை தள்ளிவைப்பு-3.3.2014 அன்று விசாரணைக்கு வரும் .TATA KIPSON

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/2013 விசாரணை தள்ளிவைப்பு-3.3.2014 அன்று விசாரணைக்கு வரும் .TATA இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு சார்பான வழக்கு ...


Friday, February 14, 2014

பொதுத்தேர்வுக்கு வழிகாட்டும் கையேடு- பள்ளி கல்வித்துறை வெளியீடு - 12 STD -2014


How To Use Guidelines
          



Tamil 1&2
          



English 1
          



English 2
          



Maths
          



Physics
          



Chemistry
          



Biology
          



Botany
          



Zoology
          



Commerce
          



Economics
          



History
          



Accountancy

பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்

1.ஆசிரியர் வருகைப் பதிவேடு
2.மாணவர் வருகைப் பதிவேடு
3.மாணவர் சேர்க்கை நீக்கல் பதிவேடு
4.சேர்க்கை விண்ணப்பங்கள் தொகுப்பு
5.பதிவுத்தாட்கள் உண்மை நகல்
6.அளவைப் பதிவேட
7.நிறுவனப்பதிவேடு
8.பள்ளி தளவாடச் சாமான்கள் பதிவேடு
9.தணிக்கைப் பதிவேடு



பிளஸ் 2 'தத்கால்' திட்டம் அறிவிப்பு

பிளஸ் 2 பொதுத் தேர்வை, தனி தேர்வாக எழுத விண்ணப்பிக்க தவறிய மாணவ, மாணவியர், 'தத்கால்' திட்டத்தின் கீழ், இம்மாதம், 17 முதல் 19 வரை, தேர்வுத் துறை அமைத்துள்ள சிறப்பு மையங்கள் மூலம், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.


பத்தாம் வகுப்பு பொது தேர்வு: 10.42 லட்சம் பேர் பங்கேற்பு

மார்ச், 26ல் இருந்து, ஏப்ரல், 9 வரை நடக்க உள்ள, 10ம் வகுப்பு பொது தேர்வை, 10.42 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். பொது தேர்வை எழுத உள்ள மாணவ, மாணவியர் விவரங்களை தொகுக்கும் பணி, மும்முரமாக நடந்து வருகிறது. 


'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளிப்பதில் மாற்றம்: டி.இ.டி., முடிவில் புதிய உத்தரவு

ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அட்டவணையில், சிறிய மாற்றம் செய்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில், இட ஒதுக்கீடு பிரிவினர், டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெறுவதற்கான, 60 சதவீத மதிப்பெண்ணை, 55 சதவீதமாக குறைத்து, 


Thursday, February 13, 2014

தமிழகத்தில் வரும் 2016-17-ஆம் நிதியாண்டில் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் வரும் 2016-17-ஆம் நிதியாண்டில் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வியாழக்கிழமை தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அனைத்தும் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது: விரைவில் அறிவிப்பு

தமிழ்நாட்டில் மாநில கல்வி வாரியம், மெட்ரிகுலேஷன் கல்வி, ஆங்கிலோ இந்தியன் உள்பட 4 வகை கல்வி முறை இருந்தன. இந்த முறைகள் அனைத்தும் ஒன்று சேர்த்து சமச்சீர் கல்விமுறை அமல்படுத்தப்பட்டது.

ஆனால், அரசு பள்ளிகள் தவிர மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் அனைத்தும் அதே பெயரில்தான் உள்ளன. இந்த நிலையை மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இனிமேல் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பெயர் மாற்றப்படும். உதாரணமாக தற்போது செயிண்ட்மேரீஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, என்று அழைக்கப்படும் பள்ளி, இனிமேல் செயிண்ட்மேரீஸ் மேல்நிலைப்பள்ளி என்று அழைக்கப்படும்.

மேலும் தொடக்க கல்வித்துறையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் தவிர மற்ற சுயநிதி தொடக்க பள்ளிகள், சுயநிதி நடுநிலைப்பள்ளிகள் அனைத்தும் சுயநிதி பள்ளிகள் இயக்குனரகம் என்ற புதிய இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

அதுபோல மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகத்தில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அனைத்தும் சுயநிதி பள்ளிகள் இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும். மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் என்பது சுயநிதி பள்ளிகள் இயக்குனரகமாக மாறும் என்று கூறப்படுகிறது.

இதனால் ஏழை, பணக்கார மாணவர்கள் என்ற நிலை தவிர்க்கப்பட்டு அனைத்து மாணவர்களும் சமம் என்ற நிலை ஏற்படும். நாங்கள் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கிறோம் என்று யாரும் தற்பெருமையாக கூற இயலாத வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. இதை கல்வியாளர்கள் பலர் வரவேற்றுள்ளனர். இந்த மாற்றம் குறித்த அறிவிப்பு விரைவில் தமிழக அரசால் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

மாவட்ட கல்வி அலுவர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

NOTIFICATIONS - 2014
1
4/2014 14.02.2014
DISTRICT EDUCATIONAL OFFICER IN THE TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE
14.02.2014
12.03.2014
06.06.2014

Apply Online

NMMS அனுமதிச் சீட்டுகளை (Admission Card) இணையதளம் மூலம் 13.02.2014 முதல் 20.02.2014 வரை பதிவிறக்கம் செய்யலாம்

தேசிய  திறனாய்வுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான  நழைவுத் தேர்வு 13.02.2014 முதல் 20.02.2014 வரை  நமது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்..இன்னும் சில  நாட்களில் ....

பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.17,731.71 கோடி நிதி ஒதுக்கீடு

* 2014-2015ஆம் கல்வியாண்டில் பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்ப்படுத்த ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு மாநில அரசின் பங்காக ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 



Friday, February 7, 2014

Merger of 50 percent DA may soon be considered by Central Government –Sources

Sources close to the Central Government Employees Federations told that Merger of 50% DA will soon be considered by Central Government before the budget session of Parliament in February 2014. According to the sources, the central government is likely to consider the central government employees demand for merging of 50 % DA, for the reason that the DA will be crossing 100% level after January 2014.

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 65 ஆக்க பரிந்துரை

ஓய்வுபெறும் வயதை 60ல் இருந்து 65 ஆக உயர்த்த வேண்டும் என பார்லி., குழு பரிந்துரை செய்துள்ளது. இது குறித்த அறிக்கை நேற்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் மக்கள்தொகை பெருக்கத்திற்கு இது பல வகைகளிலும் உதவியாக இருக்கும் என பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.


ஆசிரியர்கள் ஆன்-லைன் பதிவை பள்ளிகளிடம் ஒப்படைக்கக்கூடாது: தொடக்க கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை

தொடக்க,நடுநிலைப்பள்ளி,ஆசிரியர்களின் விபரங்களை, ஆன்-லைனில் பதிவேற்றம் செய்வதை, அந்தந்த பள்ளிகளிடம் ஒப்படைக்கக் கூடாது, என தொடக்ககல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது."ஒன்றிய அளவில் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின், 25 வகையான விபரம், உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் செயல்படும்
கல்வி தகவல் மேலாண்மை முறை (இ.எம்.ஐ.எஸ்.,)மூலம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் தற்போதைய நிலையே தொடர வழக்கு.

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 3 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது.இதற்காக அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம்
ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தியது. 



இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு தள்ளுபடியை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல முடிவு

இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதியரசர் திரு.ராஜேஸ்குமார் அகர்வால் மற்றும் நீதியரசர் திரு.சத்தியநாரயணன் அடங்கிய முதன்மை அமர்வில் முதல் வழக்காக வந்த இரட்டைப்பட்டம் வழக்கு நீதியரசர்களின் தீர்ப்பால் முடிவுக்கு வந்தது. இந்த வழக்கின் ரிட் அப்பீல் தள்ளுபடி செய்யப்படுகிறது என்ற தீர்ப்பால் அதிர்ச்சியடைந்த ஒருங்கிணைப்பாளர்கள், அரசின் எதிர் மனு தாக்கலால் இந்த முடிவு ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என சமாதானம் அடைந்தனர்.
எனினும் வழக்கில் வெற்றியடைவதே நோக்கம் என்ற குறிக்கோளுடன் உடனடியாக உச்சநீதிமன்றத்தில் வரும் வாரத்தில் சிறப்பு விடுப்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

10, பிளஸ் 2 மாணவருக்கு இலவச கையேடு: அனைத்து பள்ளிகளுக்கும் வழங்க உத்தரவு

10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள், அதிக மதிப்பெண் பெறும் வகையில், பள்ளிக்கல்வித்துறை தயாரித்த இலவச கையேடு, அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட உள்ளது.

நிறுத்தி வைக்கப்பட்ட பதவி உயர்வு: அதிருப்தியில் கல்வி அலுவலர்கள்

தமிழக பள்ளிக் கல்வித் துறையில், இணை இயக்குனர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு, பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டதால், கல்வி அலுவலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷன் தலைவர் நியமனம்

ஏழாவது சம்பள கமிஷனின் தலைவராக, சுப்ரீம் கோர்ட், முன்னாள் நீதிபதி, மாத்தூர் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கு, பிரதமர் மன்மோகன் சிங், நேற்று ஒப்புதல் அளித்தார். பெட்ரோலியத் துறை செயலர் விவேக் ராய், ரத்தின் ராய், மீனா அகர்வால் ஆகியோர், உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த கமிஷன், நாடு முழுவதும் உள்ள, 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவது தொடர்பான பரிந்துரைகளை, இரண்டு ஆண்டுகளுக்குள் அறிக்கையாக தாக்கல் செய்யும். இந்த பரிந்துரைகள், 2016 ஆண்டு முதல், நடைமுறைப்படுத்தப்படும். இதற்கும், பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இரட்டைப்பட்ட வழக்கு இறுதி தீர்ப்பு: இரட்டைப்பட்டம் செல்லாது என உயர்நீதிமன்றம் உத்தரவு

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று காலை சற்று முன் வெளியாகியுள்ளது. இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்கள் மாண்புமிகு தலைமை நீதிபதி மற்றும் சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.

Monday, February 3, 2014

FLASH NEWS - ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை: ஜெ., அறிவிப்பு

கவர்னர் உரைக்கு பதில் அளித்து இன்று சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, 'எஸ்,.சி., எஸ்.டி., எம்.பி.சி., மற்றும் சிறுபான்மையின மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர். மேலும், ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீத சலுகை மதிப்பெண் வழங்கப்படும்,' என்று அறிவித்தார்.

Sunday, February 2, 2014

தகுதி தேர்வில் சலுகை காட்ட முடியாது: உயர்கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டம்

''தரமான ஆசிரியர்களை, தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காக, ஆசிரியர்களுக்கு, தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் மதிப்பெண்களுக்கு, இட ஒதுக்கீடு கேட்பது நியாயமாகாது,'' என, உயர்கல்வித் துறை அமைச்சர், பழனியப்பன் தெரிவித்தார்.