Pages

Wednesday, April 30, 2014

TNTET - வெயிட்டேஜ் கணக்கிடும் CALCULATOR Excel Worksheet, மதிப்பெண் % கொடுத்தால் போதும்..

புதிய முறையில் வெயிட்டேஜ் கணக்கிடும் Excel Worksheet ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

Click Here For Excel File Download


     இதில் முதல் தாளுக்கு மதிப்பெண் கணக்கிட ( Enter your 12th Std %  Here & Enter your DTED Overall % Here) என்றபகுதியில்   +2, மற்றும் பட்டயபடிப்பின் மதிப்பெண் சதவீதத்தையும் உள்ளீடு செய்யுங்கள்...



கல்வித் தகுதியை தமிழ் வழியில் படித்திருந்தால் பணியில் சலுகை: ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டப்படி, ஒரு பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை, தமிழ் வழியில் படித்திருந்தால் போதுமானது.


கல்வித் தகுதியை தமிழ் வழியில் படித்திருந்தால் பணியில் சலுகை: ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டப்படி, ஒரு பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை, தமிழ் வழியில் படித்திருந்தால் போதுமானது.


8-ம் வகுப்பு மாணவர் திறனாய்வுத் தேர்வு முடிவு ஒரு வாரத்தில் வெளியீடு

அரசு பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ‘என்.எம்.எம்.எஸ்.’ (நேஷனல் மீன்ஸ் கம் மெரிட் ஸ்காலர்ஷிப்) என்ற சிறப்பு திறனாய்வுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.


ஆசிரியர் தகுதித் தேர்வு: 73 ஆயிரம் பேருக்கு புதிய ‘கட் ஆப்’

உயர் நீதிமன்ற உத்தரவால், ஆசிரியர் நியமனத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட உள்ளது. இதனால், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 73 ஆயிரம் பேருக்கு புதிய கட் ஆப் மார்க் வருகிறது.


இரட்டைப் பட்டம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுதாரராக ஆஜராக போவதில்லை என மூன்று வருட பட்டப்படிப்பு ஒருங்கிணைப்பாளர்கள் அதிரடியாக அறிவிப்பு

உச்ச நீதிமன்றத்தில் மனுதாரராக ஆஜராக போவதில்லை என மூன்று வருட பட்டப்படிப்பு ஒருங்கணைபாளர் தெரிவித்துள்ளனர். மூன்று வருட பட்டப்படிப்பு படித்தவர்கள் போதுமான அளவிற்கு ஒத்துழைப்பு கொடுக்காததால் உடனடியாக விலகுகிறோம் என தெரிவித்து உள்ளனர்.

ALAGAPPA UNIVERSITY-B.ED PROGRAMME IN DISTANCE EDUCATION

CLICK HERE-B.Ed Programme in Distance Education - Application Form and Prospectus

 Important Dates
Application Forms are issued from 
 07 – 04 - 2014
Last date for the issue and receipt of filled in Application Forms
09 – 05 - 2014
Date of Entrance Examination
17 – 05 - 2014

பள்ளிகளில் மாணவர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்வதில் இழிவு ஒன்றும் இல்லை': உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, "பள்ளிகளில் மாணவர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்வதில் இழிவு ஒன்றும் இல்லை' என நல்லதொரு தீர்ப்பை அளித்துள்ளது. 


TET - பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் மே 12 தேதி வரை தமிழகம் முழுவதும் 29 மையங்களில் நடைபெற உள்ளது.

இதில் 25333 நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க உள்ளனர்.

TET LATEST NEWS | பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் மே 12 தேதி வரை தமிழகம் முழுவதும் 29 மையங்களில் நடைபெற உள்ளது


இதில் 25333 நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க உள்ளனர்.

1.KANYAKUMARI SLB Govt Hr Sec School Nagercoil -629 001 



Saturday, April 19, 2014

ஒடிசாவில் தேர்தல் பணிக்கு வராத 54 அரசு ஊழியர்களுக்கு வாரன்ட் பிறப்பிப்பு

ஒடிசாவில் தேர்தல் பணிக்கு வராத 54 அரசு ஊழியர்களுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் மக்களவை தேர்தலோடு சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. 


லஞ்ச வழக்கில் சிக்கினால் முக்கியத்துவம் இல்லாத பதவி: ஐகோர்ட் உத்தரவு

லஞ்ச வழக்கில், "சஸ்பெண்ட்' செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்கி, வீணாக வீட்டில் ஓய்வெடுக்க அனுமதிப்பதற்கு பதில், வெகுதூரத்திற்கு இடமாறுதல் செய்து, முக்கியத்துவம் அல்லாத பணி வழங்க வேண்டும்' என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.


தொடக்கக்கல்வித்துறை பள்ளிகளுக்கு ஏப்ரல்-30 கடைசி வேலைநாள்:220 நாட்களுக்கு குறைவு படும் நாட்கள் பற்றி கவலைப்பட வேண்டாம்; தொடக்கக்கல்வி இயக்குனர்

நேற்று(17.04.2014)அன்று மதியம் 1.00 மணியளவில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் பொதுச்செயலர் திருமிகு. செ.முத்துசாமி.Ex.MLCதலைமையில் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுடன் சந்திப்பு-உடன் மாநிலதுணைத்தலைவர் திரு கே.பி.ரக்‌ஷித்,தலைமை நிலைய செயலர் திரு க.சாந்தகுமார் மற்றும் போளூர் வட்டார பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Thursday, April 17, 2014

தேர்தல் பயிற்சி வகுப்பு: பங்கேற்காத 778 பேருக்கு நோட்டீஸ்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2-ம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத 778 அலுவலர்களுக்கு 2 நாள்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கா.பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.


Wednesday, April 16, 2014

பத்தாம் வகுப்பு - அறிவியலில் தவறான கேள்வி : 3 மதிப்பெண் வழங்க உத்தரவு

பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில், இரு கேள்விகள், தவறாக கேட்கப்பட்டதற்காக, அதற்குரிய மூன்று மதிப்பெண் வழங்க, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது..


குழந்தைகளை பராமரிக்க அரசு பெண் ஊழியர்களுக்கு 2 ஆண்டு விடுப்பு: உச்ச நீதிமன்றம் அனுமதி

குழந்தைகளை பராமரிப்பதற்காக அரசு பெண் ஊழியர்கள் தொடர்ந்து 2 ஆண்டுகள் விடுப்பு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியது.


Saturday, April 12, 2014

எம்.எட்., சேர்ந்த மாணவர்களுக்கு ஒப்புதல் வழங்க ஐகோர்ட் உத்தரவு

ஏழு தனியார் கல்லூரிகளில், எம்.எட்., படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு, ஆசிரியர் கல்வி பல்கலை, ஒப்புதல் வழங்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மத்தியில் ஆட்சி மாற்றம் நடந்தால் கல்வி திட்டங்களின் கதி என்னவாகும்? தமிழக கல்வித்துறை கவலை

மத்தியில் ஆட்சி மாற்றம் நடந்தால், ஆசிரியர்களுக்கு சம்பளத்தில் துவங்கி, பள்ளிகள் உட்கட்டமைப்பு, புதிய பள்ளிகள் அமைப்பு என, பல தொடர் திட்டங்களுக்கான நிதி, தொடர்ந்து கிடைக்குமா என, தெரியாமல், கல்வித்துறை தவித்து வருகிறது.


Friday, April 11, 2014

இணையதளத்தில் ஓய்வூதிய விபரங்களை அறியும் வசதி

ஓய்வூதிய விபரங்களை இணையதளத்தில் அறியும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஓய்வூதியர்கள், www.tn.gov.in/karuvoolam என்ற முகவரியில் விபரம் பெறலாம். கம்ப்யூட்டரில் மேற்கண்ட முகவரியை டைப் செய்தவுடன், பென்ஷனர் 'ஹோம் பேஜ்' என்ற விபரம் திரையில் 


உங்கள் கணினியின் வேகத்தை அதிகரிக்க வேண்டுமா? இதை செய்யுங்கள்

1.)NOTEPADஐ open செய்யுங்கள்..,
2.)Notepadல் இதை type செய்யுங்கள்
FREEMEM=SPACE(64000000)
3.)அதை ram.vbs என்று save செய்யுங்கள்,, 



Wednesday, April 9, 2014

பள்ளி திறக்கும் நாளில் இலவச பஸ் பாஸ்

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 2014-15 ல் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் நாளான ஜூன் 2ல் இலவச பஸ் பாஸ் பெற்று தர பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஓட்டுப்பதிவு சதவீதம் தெரிவிக்க ஏற்பாடு

ஓட்டுப்பதிவு நாளில், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை, ஓட்டுப்பதிவு சதவீதத்தை ஓட்டுச்சாவடி அலுவலர்கள், எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.


தேர்தல் பணி மாணவர்களுக்கு ரூ.900 சம்பளம்

லோக்சபா தேர்தல் நாளில் பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், 'லேப்--டாப்' கையாளும் பணியில், அரசு கல்லூரி மாணவர்கள் ஈடுபடுகின்றனர். இந்த பணிக்காக மாணவர்களுக்கு, 900 ரூபாய் ஊதியம் வழங்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.


Tuesday, April 8, 2014

பென்ஷன் பெற 58 வயதானதும் தகவல் தர ஏற்பாடு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சந்தாதாரர்களாக உள்ளவர்கள், தொழிலாளர் பென்ஷன் திட்டம் 1995ன் கீழ், 58 வயது பூர்த்தியானதும் பென்ஷன் பெற முடியும். 


தபாலில் அனுப்பிய சான்றுகள் மாயம்: இழப்பீடு வழங்க அஞ்சல் துறைக்கு உத்தரவு

அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிய சான்றிதழ்கள் சென்று சேரவில்லை என, தொடரப்பட்ட வழக்கில், 'அஞ்சல் துறை, 8,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, மாநில நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.


ஆசிரியர் பயிற்சி தனித்தேர்வு: நாளை (10-4-14) விண்ணப்பம்

'ஜூன் மாதம் நடக்க உள்ள, ஆசிரியர் பயிற்சி தனி தேர்வுக்கு, நாளை முதல் 17 வரை, தேர்வுத் துறை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் அறிவித்து உள்ளார்.


சிறப்பு டி.இ.டி., தேர்வு: 22க்குள் 'ஹால் டிக்கெட்'

சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (டி.இ.டி.,), 'ஹால் டிக்கெட்' 22ம் தேதிக்குள், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) இணையதளத்தில் வெளியிடப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.


அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளுக்கான பள்ளி மின் கட்டணம் : இயக்குனரகம் முடிவு

அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை செலுத்துவதில், குளறுபடி ஏற்பட்டு உள்ளது. இதை சரி செய்ய, இயக்குனரகம் மூலம் நேரடியாக கட்டணத்தை செலுத்த, முடிவு செய்யப்பட்டு உள்ளது.


Monday, April 7, 2014

வருமான வரியை சேமிப்பது எப்படி?

வருமான வரிப்பிரிவில் 80C பிரிவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த பிரிவில், நாம் ஒரு லட்சம் ரூபாய்வரை சேமிக்க முடியும். நாம் சேமிக்க எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் ஒரு நிதியாண்டில் ஏப்ரல் 1 முதல் அடுத்த வருடம் 31 மார்ச் வரை. ஆனால் நம்மில் பலர் 10 அல்லது 11 மாதம் எந்தவித முயற்சியும் எடுக்காமல், கடைசி இரண்டு மாதங்களில் அந்த சமயம் கண்ணில் யார் படுகிறாரோ அவரிடம் எதையாவது வாங்கி அலுவலகத்தில் ரசீது கொடுப்பதையே பெரிய விஷயமாக நினைக்கிறார்கள்.


மாலை 3 மணிக்கு மேல், முகவர்களை வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது: அலுவலர்களுக்கு எச்சரிக்கை

வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி பணியில் ஈடுபடும் முகவர்களை மாலை 3 மணிக்கு மேல் வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு ஆணையாளர் கே.ஆர்.செல்வராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். 


Sunday, April 6, 2014

'நம்ம பள்ளி, நம்ம குழந்தை': துவக்கப் பள்ளிகளுக்கு கையேடு தர முடிவு

அரசு துவக்கப்பள்ளியில் வரும், கல்வியாண்டில் மாணவ, மாணவியரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு, அழகிய வண்ணப்படங்களுடன் கையேடு வழங்கப்பட உள்ளது.


வி.ஏ.ஓ., தேர்வு எழுதுபவர்களுக்கு, தற்போது நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பை தளர்த்த வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) மூலம், குரூப் 4 தேர்வு எழுத 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு, முன்பு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 


Saturday, April 5, 2014

PAYROLL 9.1 - 100% DA SOFTWARE FOR PAYROLL DESIGNED BY NIC

PAYROLL 9.1 - 100% DA SOFTWARE FOR PAYROLL DESIGNED BY NIC CLICK HERE...

NOTE : DOWNLOAD THE DBF FILE AND PASTE IT TO YOUR PAYROLL SOFTWARE...

அரசாணை எண்.96 நாள்.03.04.2014 மூலம் அகவிலைப்படி 100% உயர்த்தியுள்ளதால் ஏற்கனவே உள்ள SOFTWAREல் 2DIGIT வரை தான் உள்ளீடு செய்ய முடியும். ஆகையால் தற்பொழுது சென்னையில் உள்ள NIC மூலம் இப்புதிய FILE மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
இதை பதிவிறக்கம் செய்து PAYROLL FOLDER ஐ OPEN செய்து ஏற்கனவே DA.DBF FILE உள்ள இடத்தில் PASTE செய்யவும். பின்பு PAYROLL RUN செய்து பார்த்தால் அகவிலைப்படி (DA) 100% மாறிருக்கும்.

அகவிலைப்படியை அரசு ஊழியர், ஆசிரியர் வங்கிக் கணக்கில் வரும் புதன் மாலைக்குள் சேரும் வண்ணம் காலதாமதமின்றி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு?

சற்றுமுன் கிடைத்த நம்மத்தகுந்த தலைமைச்செயலக வட்டாரத்தகவலின்படி தற்போது தமிழக அரசால் அதன் ஊழியர் மற்றும் ஆசிரியர்கள்.பென்ஷன் தாரர்கள் போன்றவர்களுக்கு உயர்த்தப்பட்ட10 % அகவிலைப்படி உயர்வை ஜனவரி 1 முதல் கணக்கிட்டு மார்ச் முடிய உள்ள 3 மதங்களுக்குண்டான நிலுவைத்தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும் என உத்திரவிட்டது அறிந்ததே. அதிலும் சிறப்பாக இம்முறை காலதாமதமின்றி வழங்க அரசாணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Friday, April 4, 2014

காலை 6 மணிக்கு ஒத்திகை வாக்குபதிவு ஓட்டுபதிவுக்கு முந்தைய நாள் வாக்குசாவடிக்கு செல்லவேண்டும் தலைமை அலுவலர்களுக்கு உத்தரவு

வாக்குபதிவுக்கு முந்தைய நாள் பகல் 12 மணிக்கே வாக்குசாவடிக்கு செல்ல வேண்டும் என்று வாக்குசாவடி தலைமை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் ஈடுபடும் வாக்குசாவடி தலைமை அலுவலர், வாக்குபதிவு அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நேற்று மாவட்டம்தோறும் நடந்தது. பயிற்சி கூட்டத்தில் அதிகாரிகள் கூறியதாவது:


Thursday, April 3, 2014

எல்.கே.ஜி. முதல் பிளஸ்–2 வரை 5 பிரிவுக்கு மேல் இருக்கக்கூடாது-மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு

தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கு.பிச்சை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–சில பள்ளிகளில் எல்.கே.ஜி. முதல் பிளஸ்–2 வரை ஒவ்வொரு வகுப்பிலும் 10–க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன.


பொது தேர்தல் - 2014 கையேடு வெளியீடு

click here to DOWNLOAD ELECTION GUIDE 

மத்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில், "பொதுத் தேர்தல் - 2014' கையேடு வெளியிடப்பட்டது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், இந்த கை யேட்டை, மத்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலக, கூடுதல் இயக்குனர் ரவீந்திரன் வெளியிட்டார். தமிழக இணை தேர்தல் அதிகாரி சிவஞானம் பெற்றுக் கொண்டார். இதில், தேர்தல் மாதிரி நடத்தை கோட்பாடு, சமூக இணையதள ஊடக விதிமுறைகள், 2009 தேர்தல் புள்ளி விவரங்கள், 2004 மற்றும் 2009 தேர்தல் ஒப்பீடு போன்றவை இடம் பெற்றுள்ளன. இந்த கையேடு, சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின்  என்ற இணைய தளத்தில், தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு மற்றும் அரசாணை நாளை (04.04.2014) வெளியாகிறது

தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியாகிறது.அதற்குண்டான பூர்வாங்க நடவடிக்கைகள் முடிந்தன. தேர்தல் கமிஷன் அனுமதியுடன், முதல்வர் அனுமதியும் கிடைத்தாகி விட்டது. நிதித்துறை யில் அரசாணை தயாராக உள்ளது.
நிதித்துறை செயலரின் கையொப்பம் இன்று இரவு பெறப்பட்டு
அரசாணை நாளை காலை வெளியிடப்படுகிறது

பிளஸ் 2 உயிரியல் பாடத் தேர்வில் தவறான கேள்வி: முழு மதிப்பெண் வழங்கக் கோரியமனுவுக்கு பதில் அளிக்க அரசுக்கு நோட்டீஸ்.

பிளஸ் 2 உயிரியில் பாடத் தேர்வில் கேட்கப்பட்ட தவறான கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


ஓட்டுச்சாவடியில் மொபைலுக்கு அனுமதி இல்லை

ஓட்டுச் சாவடிகளுக்குள் மொபைல் போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி எடுத்துச் செல்பவர்களுககு ஓட்டளிக்க அனுமதி மறுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் போன், கேமிரா, வீடியோ ரெக்கார்டர் உள்ளிட்டவைகளை ஓட்டுச் சாவடிக்குள் எடுத்துச் செல்லக் கூடாது என தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.

மத்திய அரசின் பல துறைகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு, இடமாற்றம், பதவிகள் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும் - மத்திய அரசு

மத்திய அரசின் கீழ் செயல்படும், பல துறைகளில், பார்வை இழந்தோர், காது கேளாதோர், வாய் பேச முடியாதோர் என, 16 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் பணியாற்றுகின்றனர். இவர்கள், பல ஆண்டுகளாக, இட மாற்றம் மற்றும் பதவியமர்த்துதல் போன்ற விஷயங்களில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என, வலியுறுத்தி வந்தனர்.


சேமிப்புக் கணக்கில் குறைந்த பட்ச தொகையை (மினிமம் பேலன்ஸ்) வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கக் கூடாது என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச தொகையை வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கக் கூடாது என்ற உத்தரவை ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் பிறப்பித்தார். 


வருமானவரி விலக்கு உச்சவரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த மத்திய அரசு மறுப்பு

வருமானவரி விலக்கு உச்சவரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற பாராளுமன்ற நிலைக்குழுவின் சிபாரிசை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. அதே சமயத்தில், வருமானவரி விலக்கு பெறுவதற்கு மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பை 60 ஆக குறைத்துள்ளது.


ஆசிரியர்களை கல்வி ஆண்டு முடியும் வரை பணி செய்ய அனுமதிக்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

கல்வி ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெறும் ஆசிரியர்களை கல்வி ஆண்டு முடியும் வரை பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


பிளஸ் 2 கணித தேர்வில் வினாத்தாள் அச்சுப்பிழை காரணமாக தமிழ்வழி மாணவர்களுக்கு 8 மார்க்கும், ஆங்கிலவழி மாணவர்களுக்கு 7 மார்க்கும் போனஸ் - தமிழக அரசு உத்தரவு

பிளஸ் 2 கணித தேர்வில் வினாத்தாள் அச்சுப்பிழை காரணமாக தமிழ்வழி மாணவர்களுக்கு 8 மார்க்கும், ஆங்கிலவழி மாணவர்களுக்கு 7 மார்க்கும் போனஸாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே23ல் வெளியீடு; தேர்வுத்துறை அறிவிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகான முடிவுகள், மே மாதம் 23ஆம் தேதி வெளியிட உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் கடந்த மார்ச் 25-ம் தேதியுடன் முடிவடைந்த 12-ம் வகுப்புத் தேர்வை சுமார் 8 லட்சம் மாணவ, மாணவியர் எழுதியுள்ளனர். வரும் மே 9ம் தேதி இதற்கான முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு வழங்க முதல்வர் ஒப்புதல்; அரசாணை விரைவில் வெளியாக வாய்ப்பு

மத்திய அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் அறிவித்தாலும், அரசாணை கடந்த மார்ச் 27ம் தேதி தான் வெளியானது. இதையடுத்து தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10% அகவிலைப்படி உயர்வு வழங்க முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.


ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), இரண்டாம் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, இம்மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண் அளவை, இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, 60 சதவீதத்தில் இருந்து, 55 சதவீதமாக குறைத்து, முதல்வர் அறிவித்திருந்தார். 


தேர்தல் பணி என்னும் மரியாதை மிக்க தேசியப் பணியில் ஈடுபட இருக்கும் ஆசிரியர்களுக்கும் அலுவலர்களுக்கும் பணியாளர்களுக்கும் தங்கள் தேர்தல் பணி சிறக்க வாழ்த்துக்கள்

உங்களுக்காக சில குறிப்புகள்:

1. தபால் வாக்கை உரிய தேதிக்கு முன் போட்டு விடுங்கள். தபால் ஓட்டு சம்மந்தமான படிவங்கள் கடைசி தேர்தல் வகுப்பில் வழங்கப்படும். முதல் முறையாக தேர்தல் பணிக்குச் செல்பவர் என்றால் அஞ்சல் வாக்கைப் பதிவு செய்யும் முறை, உள்ளுறை, வெளியுறை, படிவம் நிரப்புதல் அத்தாட்சிக் கையொப்பம் பெறுதல் போன்ற விஷயங்களை மற்றவரிடம் கேட்டோ விதிமுறைகளை நன்றாகப் படித்துவிட்டோ செய்யுங்கள்.
அவசரப்பட்டு தவறு செய்துவிட்டால் மாற்றிக்கொள்ள முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் வாக்கை தவறாமல் செலுத்திவிடுங்கள்.