கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Wednesday, November 20, 2013

    தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 2014- ம் ஆண்டு வரும் பண்டிகைகள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால் அரசு விடுமுறை நாட்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

    தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 2014-ம் ஆண்டு 21 நாட்கள் விடுமுறை நாட்களாகஅரசு அறிவித்து உள்ளது. அரசு விடுமுறை நாட்கள் ஒரு சில
    ஞாயிற்றுக்கிழமைகளிலும் வருவதால் அரசு விடுமுறை நாட்களின்
    எண்ணிக்கை குறைந்துள்ளன.

     நடப்பாண்டு 24 நாட்கள்அரசு விடுமுறை நாட்களாகும்.2014-ம் ஆண்டு ஜனவரி 14-ந்தேதி செவ்வாய்க்கிழமை பொங்கல், மிலாது நபி ஒரே நாளில் வருகிறது.இதுதவிர ஜனவரி 26 ந்தேதி குடியரசு தினம், ஏப்ரல் 13-ந்தேதி மகாவீர் ஜெயந்தி, ஆகஸ்டு 17 ந்தேதி கிருஷ்ண ஜெயந்தி, அக்டோபர் 5-ந்தேதி பக்ரீத் ஆகிய 4
    பண்டிகை நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது. அதேபோல் அரசு ஊழியர்கள் வாரத்தின் இறுதியில் தொடர்ச்சியாக அரசு விடுமுறை நாட்கள் வருவதை விரும்புகின்றனர். அந்தவகையில் 2014-ம்
    ஆண்டு அக்டோபர் மாதம் 2- ந்தேதி வியாழக்கிழமை காந்தி ஜெயந்தி மற்றும் ஆயுதபூஜை, 3- ந்தேதி வெள்ளிக்கிழமை விஜயதசமி, 4- ந்தேதி சனிக்கிழமை, 5-ந்தேதி பக்ரீத் ஆகிய முக்கிய நாட்கள் தொடர்ச்சியாக
    வருகின்றன. காந்தி ஜெயந்தியும், ஆயுத பூஜையும் ஒரே நாளில்
    வருவதுடன், பக்ரீத் பண்டிகையும் ஞாயிற்றுக்கிழமை வருவதால் 2
    அரசு விடுமுறைகள் குறைகின்றன. அதிகபட்சமாக 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1- ந்தேதி புதன்கிழமை ஆங்கில புத்தாண்டு, 14- ந்தேதி செவ்வாய்க்கிழமை பொங்கல் மற்றும் மிலாது நபி, 15- ந்தேதி புதன்கிழமை திருவள்ளுவர் தினம், 16- ந்தேதி வியாழக்கிழமை உழவர் தினம், 26- ந்தேதி ஞாயிற்றுக்கிழமை குடியரசு தினம் ஆகிய 5 நாட்கள்
    அரசு விடுமுறை நாட்களாக வருகின்றன. தொடர்ந்து ஏப்ரல் மற்றும்
    ஆகஸ்டு மாதங்களில் 3அரசு விடுமுறை நாட்கள்வருகின்றன. 4 ஞாயிற்றுக்கிழமை, 2 திங்கட்கிழமை, 4 செவ்வாய்கிழமை, 3
    புதன் கிழமை, 4 வியாழக்கிழமை, 4 வெள்ளிக்கிழமை உட்பட 21 நாட்கள்
    விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன. சனிக்கிழமை எந்த அரசு விடுமுறையும் வரவில்லை.இதுகுறித்து தமிழகத்தில் 2014-ம்
    ஆண்டு 21 நாட்கள் அரசு விடுமுறை அளித்து, அதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும்
    அரசு அலுவலகங்கள், கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கு 2014- ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை அரசு அறிவித்துள்ளது. இதன்படி அடுத்த ஆண்டு சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் கீழ் வரும் 21 நாட்கள் பொது விடுமுறை நாட்களில்,
    மூடப்பட வேண்டும்என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அரசு வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறப்பட்டு உள்ளது

    No comments:

    Post a Comment