தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 12 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டப் பேரவையில் விதியெண் 110யின் கீழ், அறிக்கை ஒன்றை வாசித்தபோது, அவர் இதனை தெரிவித்தார்.
கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Monday, April 8, 2013
Saturday, April 6, 2013
பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், இம்மாதம், 22ம் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளன - அண்ணா பல்கலை
வரும் கல்வி ஆண்டில், பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், இம்மாதம், 22ம் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளன. இதற்காக, 2.5 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.
200 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை, "நோட்டீஸ்'
போதிய ஆசிரியர் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத, 200 பொறியியல் கல்லூரிகளிடம் விளக்கம் கேட்டு, அண்ணா பல்கலை, "நோட்டீஸ்' அனுப்பி உள்ளது. பொறியியல் கல்லூரிகளில், போதிய மற்றும் தகுதியான ஆசிரியர்கள் உள்ளனரா, நல்ல உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளனவா என்பதை கண்டறிய, அண்ணா பல்கலை, ஒரு குழுவை....
ஆன்லைனில் "அப்ஜெக்டிவ் டைப்' தேர்வு : T.N.P.S.C.செயலர் தகவல்
""அப்ஜெக்டிவ் டைப்' தேர்வுகளை ஆன்லைனில் நடத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக,'' டி.என்.பி. எஸ்.சி., செயலர் விஜயகுமார் கூறினார். உதவி புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு "ஆன்லைன்' மூலம் இன்று நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு மையங்களை ஆய்வு செய்ய, அருப்புக்கோட்டை சவுடாம்பிகா இன்ஜி., கல்லூரி வந்த அவர் கூறியதாவது:
தொடக்க, நடுநிலைப்பள்ளி "செஸ்' விளையாட்டு : தயார் நிலையில் சதுரங்க பலகைகள்
தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில், சதுரங்கம் (செஸ்) பலகைகள் விரைவில் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. தமிழக அரசு மற்றும் உதவி பெறும் துவக்க, நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியரின் அறிவுத்திறன், சிந்தனைத்திறன் தூண்டும் வகையில் மாணவர்களுக்கு "செஸ்' விளையாட்டு கற்றுத்தர முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தொடக்க கல்வி இணை இயக்குனர் கருப்புசாமியிடம், தேர்வுத்துறை இணை இயக்குனர் பணி, கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது
தேர்வுத்துறை இணை இயக்குனர் ஆரோக்கியசாமி (மேல்நிலை கல்வி), கடந்த மாதம், 31ம் தேதி, ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து, கருப்புசாமியிடம், தேர்வுத்துறை இணை இயக்குனர் பணி, கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர், ஏற்கனவே, தேர்வுத்துறையில் பணி புரிந்தவர் என்பதால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 11 புதிய பி.எட்., கல்லூரிகளுக்கு, அனுமதி வழங்க, என்.சி.டி.இ., மறுப்பு
ஆசிரியர் கல்விக்கான தேசிய குழுவின், தென் மண்டல அலுவலக குழு கூட்டம், சமீபத்தில், பெங்களூருவில் நடந்தது. அதில், தமிழகம், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில், புதிய ஆசிரியர் கல்லூரிகள் துவங்குவதற்கு அனுமதி கேட்ட கோப்புகள் குறித்து பரிசீலனை செய்து, முடிவு எடுக்கப்பட்டது.
Friday, April 5, 2013
மாயமான 10ம் வகுப்பு விடைத்தாள்: மறுதேர்வு நடக்குமா?
பள்ளி தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள் போக்குவரத்து முறை நவீனப்படுத்தப்படும்" என, கல்வி அமைச்சர் துறை அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்தார். சட்டசபையில், பள்ளி தேர்வு வினாத்தாள் வெளியானது மற்றும் விடைத்தாள் காணாமல் போனது குறித்து, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது, எம்.எல்.ஏ.,க்கள் பேசியதாவது:
அரசு கல்லூரி உட்பட தமிழகத்தில் 15 கல்லூரிகளுக்கு ஏ-கிரேடு
தமிழகத்தில் உள்ள, 15 கல்லூரிகளுக்கு, "ஏ" கிரேடு மற்றும், 30 கல்லூரிகளுக்கு, "பி" கிரேடு அந்தஸ்துகளை, தேசிய தர நிர்ணய குழு (நாக்) வழங்கியுள்ளது. இதில் கோவை அரசு கலைக் கல்லூரியும் இடம் பெற்றுள்ளது.
பத்தாம் வகுப்பு விடைத் தாள்கள் மாயம் மற்றும் சேதமான விவகாரங்களில் பள்ளிக் கல்வித்துறை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறையில் பல முக்கிய இயக்குனர்கள் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பிறகு மாற்றப்படலாம்
பள்ளிக் கல்வித் துறையில், பள்ளிக்கல்வி இயக்குனர், அரசு தேர்வுத்துறை இயக்குனர், தொடக்க கல்வி இயக்குனர் உள்ளிட்ட 8 இயக்குனர் பணியிடங்களும், 20 இணை இயக்குனர் பணியிடங்களும் உள்ளன
Thursday, April 4, 2013
திட்டமிட்டபடி செமஸ்டர் தேர்வு: மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது
கல்லூரிகள் மூடப்பட்டதால், செமஸ்டர் தேர்வுகள் தள்ளிப் போகாது. திட்டமிட்டபடி, தேர்வுகள் நடத்தப்படும்" என, உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கூறினார்
கல்லூரியில் கட்டாய நன்கொடை வசூலித்தால் கடும் நடவடிக்கை
கல்லூரிகளில், கட்டாய நன்கொடையை வசூலைத் தடுக்க, 1992ம் ஆண்டே சட்டம் கொண்டு வந்தோம். இதன்படி, மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. கட்டாய நன்கொடை வசூல் குறித்து, இக்குழுவிடம் புகார் செய்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில், வரும் கல்வியாண்டு, புதிதாக, 398 பாடப் பிரிவுகள்
தமிழகத்திலுள்ள, 51 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில், 398 பாடப் பிரிவுகள், வரும் கல்வியாண்டில் துவக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பாடப் பிரிவுகளுக்காக, 827 உதவி பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, காலியாக உள்ள, 530 பேராசிரியர் பணியிடங்களை நிரப்பவும், ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வி.ஏ.ஒ. தேர்வு : 5ம் கட்ட கவுன்சிலிங் தேதி அறிவிப்பு
click here download to call letter
இதுகுறித்த செய்தி குறிப்பு: வி.ஏ.ஒ. தேர்வுக்கு, தேர்வு செய்யப்பட்ட, 1,781 விண்ணப்பதாரர்களுக்கு, நான்கு கட்ட கவுன்சிலிங் மூலம் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 89 காலி பணியிடங்களை, நிரப்புவதற்கான, ஐந்தாம் கட்ட கவுன்சிலிங் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி, வரும், 16ம் தேதி, காலை, 8:30 மணி முதல், டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடக்க உள்ளது. கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டுள்ள,பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு: ஏப்., 10ல் துவக்கம்
தமிழகத்தில், இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி, பள்ளி செல்லா இடைநிற்றல் குழந்தைகளை கண்டறிய, வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி, ஏப்., 10ல் துவங்குகிறது.வரும் கல்வியாண்டில், ஆறு வயது முதல், 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளையும்,
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பி.எட்., படிப்பிற்கான விண்ணப்பங்கள், வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் கீழ், பி.எட்., படிப்பு வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள், இன்று (5ம் தேதி) துவங்கி, ஜூலை, 26ம் தேதி வரை வழங்கப்படுகிறது.விண்ணப்பங்களை, சென்னை அன்னை வேளாங்கண்ணி கலை கல்லூரி, கோவை எஸ்.என்.ஆர்.,
10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15ம் தேதி துவங்கி, 30க்குள் முடிகிறது
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள், 66 மையங்களில், வரும், 15ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரை நடக்கும்' என, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த மாதம், 27ம் தேதி, பத்தாம் வகுப்பு தேர்வுகள் துவங்கின. 3,012 மையங்களில், 10.68 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வு எழுதி வருகின்றனர்.
Wednesday, April 3, 2013
DEPARTMENTAL EXAMINATIONS-Online Registration
|
Current Online Registration for... (Click to Apply Online) |
Notification | Current Status |
CLICK HERE ONLINE REGISTRATION Departmental Examinations - May 2013 |
Tamil | English |
Online up to 15 Apr 2013 |
தேசிய திறனாய்வுத் தேர்வு நவம்பர் - 2012 - தேர்வு முடிவு வெளியீடு
ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள்; ஆசிரியை பணி வழங்க மறுத்தது சரி: உயர் நீதிமன்றம்
ஒரே நேரத்தில், இரண்டு வெவ்வேறு பட்டங்களைப் படித்த பெண்ணுக்கு, முதுகலை ஆசிரியர் பணி வழங்க மறுத்தது சரி தான்" என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
Tuesday, April 2, 2013
குரூப் 4ல் தேர்வானோர் கல்வித்துறை பணியில் சேர ஆர்வம்
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 ல் தேர்வானவர்கள் மற்ற துறைகளைவிட, கல்வித்துறை அலுவலக பணியில் சேர ஆர்வம் காட்டுகின்றனர்.சமீபத்தில் நடந்த குரூப் 4 போட்டி தேர்வில், பி.எட்.,ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் ஏராளமானோர் தேர்வு பெற்றனர்.
தேர்வுத்துறை இணை இயக்குனர் பணியிடம் காலி
தேர்வுத்துறை இணை இயக்குனர் (மேல்நிலைக்கல்வி) பணியிடத்தை நிரப்பாமல், வழக்கம்போல், கூடுதல் பொறுப்பில், பணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.தேர்வுத்துறை இணை இயக்குனர் ஆரோக்கியசாமி, கடந்த, 31ம் தேதி ஓய்வு பெற்றார்.
அரசு ஊழியர்கள் பணிப்பதிவேடுகளை மின்னணு குறிப்புகளாக மாற்ற உத்தரவு
சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கொள்கை விளக்க குறிப்பில் இடம் பெற்றுள்ள விவரம் வருமாறு: பணியாளர்கள் பெற்ற சலுகைகள் மற்றும் பயன்களை கண்காணிக்கும் வகையில் அனைத்து பணியாளர்களின் பணிப்பதிவேடுகளில்...
10ம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் : 221 விடைத்தாள்கள் காணவில்லை - நாளிதழ் செய்தி
விழுப்புரம் அருகே 221 மாணவர்களின் 10ம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் விடைத்தாள்களைக் காணவில்லை.10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், நடந்து முடிந்த ஆங்கிலம் முதல் தாள் தேர்வில், சத்தியமங்கலத்தில் ஒரு பள்ளியில்
அகவிலைப்படி உயர்வு -D.A : மத்திய அரசு
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 72 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் 50க்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் பென்சன்தாரர்களும் பயன்பெற உள்ளனர். இந்த அகவிலைப்படி உயர்விற்கு மத்திய அமைச்சகம் இன்று அனுமதி அளித்துள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 2013 ஜனவரி 1ம் தேதியிட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 இயற்பியல் தேர்வு: 62வது வினாவுக்கு முழு மதிபெண்
பிளஸ் 2 இயற்பியல் தேர்வில், மாணவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்திய, வினா எண், 62ற்கு, முழு மதிப்பெண் வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில், பிளஸ் 2 பொது தேர்வில், இயற்பியல் தேர்வு மார்ச், 11ம் தேதி நடந்தது.
அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் - மாண்புமிகு தொழிலாளர் நல அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பு - நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தொழிற்கல்வி பட்டப்படிப்பு, தொழிற்கல்வி பட்டமேற்படிப்பு மற்றும் இதர பட்டமேற்படிப்புகளுக்கு தற்போது ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையுடன் மேலும் 2000 ரூபாய் கூடுதலாக உயர்த்தி வழங்குதல் - அனுமதி அளித்து ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
Subscribe to:
Posts (Atom)