காலி பணியிடங்களை நிரப்பாமல், அதிகாரிகளுக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கும் போக்கு, கல்வித்துறையில், அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் கண்ணப்பன், நூலகத்துறை இணை இயக்குனர் பணியை, கூடுதலாக கவனித்து வருகிறார்.
மத்திய இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர் இளங்கோவன், ஆசிரியர் பயிற்சி இயக்குனர் பணியை, கூடுதலாக கவனித்து வருகிறார். இயக்குனர் நிலையில், பாடநூல் கழக செயலர் பணியில் உள்ள பிச்சை, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் பணியை, கூடுதலாக கவனித்து வருகிறார்.
புதிய கல்வி ஆண்டு துவங்குவதற்குள், காலி பணியிடங்களை நிரப்புவதற்கு, தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டு, பணிகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும்.
No comments:
Post a Comment