கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Tuesday, June 11, 2013

    ஆரம்ப பள்ளி இடை நிற்றலை தடுக்க ரூ.14 கோடி ஒதுக்கீடு

    பெண் குழந்தைகளின், பள்ளி இடை நிற்றலை தடுக்கும் விதமாக, 14 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட, இந்தாண்டு ஒதுக்கீடு அதிகம்.கிராமங்களில் நிலவும் வறுமை காரணமாக, பெண் குழந்தைகள் பலரும், படிப்பை பாதியில் நிறுத்தி விடுகின்றனர். குறிப்பாக, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த குழந்தைகள், ஆரம்பப் பள்ளி அளவிலேயே, படிப்பை நிறுத்தி வந்தனர்.


    இப்பிரச்னையை தவிர்க்கும் விதமாகவும், பெண் குழந்தைகளிடையே கல்வியறிவு அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும், 3ம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை பயிலும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சேர்ந்த, மாணவியர் ஒவ்வொருவருக்கும், ஆண்டுக்கு, 500 ரூபாயும், 6ம் வகுப்பில் பயிலும் மாணவியர் ஒவ்வொருவருக்கும், ஆண்டுக்கு, 1,000 ரூபாயும், ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும், 7 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. இருப்பினும், அதிக எண்ணிக்கையிலான மாணவியர் பயன் பெற வேண்டும் என்பதற்காக, 2012 -13ம் நிதியாண்டில், திட்டத்துக்கான ஒதுக்கீடு, இரண்டு மடங்குக்கும் மேலாக உயர்த்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 2012 -13ம் நிதியாண்டில், 2,32,986 மாணவியர் பயனடைந்தனர். இந்தாண்டு, இத்திட்டத்துக்கென, 14.34 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    No comments:

    Post a Comment