இந்தியாவில் பள்ளியில் பயிலும் பிள்ளைகள் 8ம் வகுப்பு வரை தடையற்ற தேர்ச்சி பெற வைக்கும் திட்டத்தை மறு பரிசீலனை செய்யுமாறு நாடாளுமன்றக் குழு கோரியுள்ளது.அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், அனைத்து மாணவர்களும் 8ம் வகுப்பு வரை தடையற்ற தேர்ச்சி பெற வைக்கும் திட்டத்தை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை முடிவு செய்துள்ளது.
படித்தாலும் படிக்காவிட்டாலும் தேர்ச்சி பெற்று விடுவோம் என்ற நிலைமை இருந்தால், அது மாணவர்களின் கல்வித் தரத்தை பாதிக்கும் என்றும், கல்வியை கற்க கடின உழைப்பை மாணவர்கள் வெளிப்படுத்த மாட்டார்கள் என்றும் நாடாளுமன்றக் குழு கூறியுள்ளது. எனவே, இத்திட்டத்தை மத்திய அமைச்சரவை மீண்டு ஒரு முறை பரிசீலிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.
No comments:
Post a Comment