"சார்புகள்' பகுதியில் இருந்து மட்டும் இடம்பெற்றன. அதிலும் ஒன்று, "கிரியேட்டிவ்' கேள்வியாக அமைந்திருந்தது. இக்கேள்வி அமைப்பால், கிராமப்புற மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிப்பது மட்டுமின்றி, பல மாணவர்களின், நூற்றுக்கு நூறு கனவும் தகரும் என, கருத்து எழுந்தது.
இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் அனைத்து மைய கண்காணிப்பாளர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை அனுப்பிய உத்தரவு: பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு பிரிவு, 3ல் உள்ள, அணிகள், முக்கோணவியல் பாடப்பகுதியில், ஒரு வினாவிற்கு பதில் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டதால், பிரிவு 3ல் உள்ள அனைத்து வினாக்களையும் மதிப்பீடு செய்து, அதில், மிகக் குறைவாக மதிப்பெண் பெற்ற, இரு வினாக்களை தேர்வு செய்து, அந்த வினாக்களுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க, மாநில பொதுச்செயலர் சாமி சத்தியமூர்த்தி, பட்டதாரி ஆசிரியர் கழக, மதுரை மாவட்ட செயலர் முருகன் கூறியதாவது: கணிதத் தேர்வு முடிந்ததும், இப்பிரச்னை குறித்து பள்ளிக் கல்வித் துறை கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் பாதிப்படைவர் என்ற கோரிக்கையை முன்வைத்தோம். இதற்கு மதிப்பளித்து, அரசு எடுத்த நடவடிக்கையை வரவேற்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment