தமிழகத்தில் நேற்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி தேர்வாணைய தலைவர் நட்ராஜ் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 144 மையங்களில் 6.4 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர்.தேர்வுதாள் ஈரோடு
மற்றும் தருமபுரி மாவட்டங்களில் வெளியானது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்வாணைய உறுப்பினர்களுடன் நட்ராஜ் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்திற்கு பின் நேற்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தார்.
தேர்வு எப்போது?
ரத்து செய்யப்பட்ட குரூப் 2 தேர்வை மீண்டும் நடத்துவது குறித்து 10 நாட்களில் முடிவெடுக்கப்படும் என்று நட்ராஜ் கூறியுள்ளார். ஆணைய உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, புதிய தேர்வு தேதி அறிவிக்கப்படும் என்றும் நட்ராஜ் கூறினார். நகராட்சி ஆணையர், சார்பதிவாளர் உட்பட 3631 பணியிடங்களுக்கு தேர்வு நடந்தது.
No comments:
Post a Comment