கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Friday, August 17, 2012
டி.என்.பி.எஸ்.சி.குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிட ஐகோர்ட் இடைக்காலத்தடை
சென்னை : கடந்த 7ம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தர்மபுரியை சேர்ந்த சின்னச்சாமி என்பவர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டது சின்னச்சாமி தனது மனுவில், தனது வினாத்தாளில் 200 கேள்விகள் இடம்பெற்றிருப்பதற்கு பதிலாக 195 கேள்விகள் மட்டுமே இடம்பெற்றிருந்ததாக குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக, டி.என்.பி. எஸ்.சி. நிர்வாகத்திற்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக, கடந்த 12ம் தேதி நடைபெற்ற குரூப் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment