இதுகுறித்து அறநிலையத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் தேதிகள் இரண்டு விதமாக உள்ளது. ஆனால்
செப்டம்பர் 8ந் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா அறநிலையத்துறை
கட்டுப்பாட்டிலுள்ள பெருமாள் கோவில்களில் கொண்டாடப்படுகிறது. இதே
தேதியைத்தான் அரசு விடுமுறைப்பட்டியல் மற்றும் அரசு நாள் காட்டியிலும்
குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தேதியில் தான் ஸ்ரீரங்கம், சென்னை
பார்த்தசாரதி கோவில், மதுரை திருமோக்கூர் பெருமாள் கோவில் உட்பட அனைத்து
பெருமாள் கோவில்களிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா எடுக்கப்படுகிறது.
No comments:
Post a Comment