கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Saturday, August 18, 2012
ஆசிரியர் நியமனம், மாறுதல் மற்றும் துறை தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, வழக்குகள் குறித்த தகவல்களை தினசரி அறிய, தனி அலுவலர்கள் பள்ளிக் கல்வித் துறையால் நியமிக்கப்பட்டுள்ளனர்
பணி நியமனம், மாறுதல் குறித்து,தொடுக்கப்படும் வழக்குகள், அதிகளவில் சேர்ந்துள்ளதால், அவற்றை உடனுக் குடன் முடிக்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. வழக்குகள் குறித்த தகவல்கள், அதற்கென உள்ள அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தாலும், தினசரி கோர்ட்டில் வழக்காடப்படும் வழக்குகள், அவற்றின் அடுத்த நிலை ஆகியவை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. தற்போது, தகவல்களை அறியவும், வழக்குகளை விரைவாக முடிக்க உதவி செய்யும் வகையிலும், அலுவலர்களை பள்ளிக் கல்வித் துறை நியமித்துள்ளது. இதன்படி, பிரிவு அலுவலர் அல்லது உதவிப் பிரிவு அலுவலர் நிலையில் உள்ள ஒரு அலுவலர், தினசரி மாலை 4 மணிக்கு ஐகோர்ட் சென்று, அரசு வழக்கறிஞர்களிடம் வழக்கு குறித்த நிலவரங்களை அறிந்து, துறை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். இதற்கான அலுவலர் பட்டியலையும், துறை வெளியிட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment