கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Tuesday, August 20, 2013

    நடந்து முடிந்துள்ள ஆசிரியர் தகுதி தேர்வு முடிவினை வெளியிடுவதற்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்து விட்டது. வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 17–ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது

    சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் எம்.பழனிமுத்து தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–மத்திய அரசு இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தை 2009–ம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


    இந்த சட்டத்தின் அடிப்படையில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், 11–2–2011 அன்று ஒரு அறிவிக்கை வெளியிட்டது.

    அந்த அறிவிக்கையில், தகுதி தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்களே தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் ஆகியோருக்கு அந்தந்த மாநில அரசுகள் சலுகைகளை வழங்கலாம் என்றும் கூறியுள்ளது.

    மதிப்பெண் சலுகை

    இதன் அடிப்படையில், ஆந்திரா, அசாம், கேரளா உள்ளிட்ட 11 மாநில அரசுகள், ஆசிரியர் தகுதி தேர்வுகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 2 முதல் 20 சதவீதம் வரை தேர்ச்சி மதிப்பெண்ணில் சலுகை வழங்கியுள்ளது.

    ஆனால், தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம், இடஒதுக்கீட்டு அடிப்படையில் சலுகைகள் எதுவும் வழங்கவில்லை. தேசிய கல்வி கவுன்சில் சலுகை வழங்கலாம் என்று பிறப்பித்த அறிவிக்கையை பின்பற்றாமல், தேர்வு எழுதுபவர்கள் 60 சதவீதம், அதாவது 90 மதிப்பெண் பெற்றால் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளது.

    தடை விதிக்க வேண்டும்

    பிற மாநிலங்கள் போல், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வில் சலுகைகள் வழங்கவில்லை என்றால், அரசு பணி நியமன இடஒதுக்கீட்டு முறையில் மிகப்பெரிய குளறுபடி ஏற்படும்.

    எனவே சலுகைகள் வழங்காமல், நடத்தப்பட்டுள்ள ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்யவேண்டும். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவிக்கையின் அடிப்படையில், இடஒதுக்கீடு சலுகைகளை அறிவித்து, ஆசிரியர் தகுதி தேர்வினை புதிதாக நடத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். தற்போது நடந்து முடிந்துள்ள தகுதி தேர்வுகளின் முடிவினை வெளியிட தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    ஐகோர்ட்டு மறுப்பு

    இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர், அவரே ஆஜராகி வாதம் செய்தார். தமிழக அரசு சார்பில் வக்கீல் கிருஷ்ணகுமார், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வக்கீல் சஞ்சய்காந்தி ஆகியோர் ஆஜராகி வாதம் செய்தார்.

    இதையடுத்து நீதிபதிகள், ‘ஆசிரியர் தகுதி தேர்வு முடிவினை வெளியிட தடை விதிக்க மறுத்து, இந்த வழக்கை வரும் செப்டம்பர் 17–ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

    No comments:

    Post a Comment