கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Sunday, August 18, 2013

    ஆசிரியர் பல்கலை கழகத்திற்கு தேர்வு கட்டுப்பாடு அதிகாரி நியமனம்

    தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின், தேர்வு கட்டுப்பாடு அதிகாரியாக, பேராசிரியர், மணிவண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில், ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 600க்கும் மேற்பட்ட, தனியார் கல்வியியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.


    இப்பல்கலையில், பதிவாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பணியிடங்கள், கடந்தாண்டு, செப்டம்பர் முதல் காலியாக இருந்தது. இதனால், நிர்வாக பணிகளில் தேக்கம் ஏற்பட்டது.இதுகுறித்து, "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியை தேர்வு செய்யும் பணி நடந்தது. இப்பணி முடிந்து, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், இணை பேராசிரியராக பணியாற்றிய, மணிவண்ணன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.


    இதுகுறித்து, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர், விஸ்வநாதன் கூறுகையில், ""பதிவாளர் நியமனத்திற்கு, ஆட்சிமன்ற குழு அனுமதியளித்துள்ளது. இரு மாதங்களில் பதிவாளர் தேர்வு பணிகள் முடிந்து விடும்,'' என்றார்.

    No comments:

    Post a Comment