கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Saturday, August 17, 2013

    அரசு ஊழியர்கள், அனைத்து கோப்புகளிலும் தமிழில் எழுதுங்கள்,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் வைகை செல்வன் வலியுறுத்தினார்.

    தமிழில் தொடர்ந்து எழுதி, பேச வேண்டும் என்பதை வலியுறுத்தவே, இதுபோன்ற கருத்தரங்குகள் நடத்த வேண்டியுள்ளது. தமிழ், நமக்கு கண் போன்றது. பிற மொழிகள் நாம் கண்ணுக்கு அணியும் கண்ணாடி போன்றது. கண்ணாடியை தான் மாற்ற வேண்டுமே தவிர, கண்களை அல்ல. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால்,..


    அந்த இனத்தின் மொழியை அழித்து விட்டால் போதும் என்பர். மொழி அவ்வளவு முக்கியத்தும் வாய்ந்தது. செம்மொழி அந்தஸ்து பெற்ற 6 மொழிகளில், தமிழ் மட்டுமே 2 ஆயிரம் ஆண்டுகளை கடந்தும், பேச்சு மற்றும் எழுத்து வழக்கில் சிறந்த இடம் வகிக்கிறது. இதை, தொடர்ந்து காப்பாற்ற, அரசு கோப்புகளிலும், அரசு அதிகாரிகளும் தமிழிலேயே எழுதுங்கள். குழந்தைகளிடமும் தமிழில் பேசுங்கள், என்றார்.துறை செயலர் ராஜாராம், இயக்குனர் சேகர், கலெக்டர் சுப்ரமணியன், மதுரை காமராஜ் பல்கலை தமிழியற்புலத் தலைவர் சாரதாம்பாள் உட்பட பலர் பேசினர். துறை உதவி இயக்குனர் பசும்பொன் வரவேற்றார். சந்திரா நன்றி கூறினார்.அமைச்சர் அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு தமிழாசிரியராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    No comments:

    Post a Comment