கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Wednesday, August 14, 2013

    டி.இ.டி., தேர்வு பணிகள்: ஆசிரியர்கள் புறக்கணிப்பு

    ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) பணிகளை புறக்கணிப்பதாக, முதுகலை ஆசிரியர்கள் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.ஆக.,17ல், இடைநிலை ஆசிரியர் பணிக்கான தாள் 1 தேர்வு, 27 மையங்களிலும், ஆக.,18 ல், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள் 2 தேர்வுகளும் நடக்கின்றன. இத்தேர்வை, 6 லட்சத்து 85 ஆயிரத்து 416 பேர் எழுதுகின்றனர்.

    கல்வித்துறை இணை இயக்குனர்கள் பல மாவட்டங்களில் முகாமிட்டு, தேர்வுப் பணிகளை கண்காணித்து வருகின்றனர்.

    மதுரை உட்பட 5 மாவட்டங்களில், இணை இயக்குனர் உமா தலைமையில் தேர்வுப் பணிகள் நடக்கின்றன. 44 மையங்களில், 26 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். தேர்வு மையங்களில், ஆசிரியர்களுக்கான பணிகள் ஒதுக்கீடு தற்போது முடிந்துள்ளது.

    இதில், "முதுகலை ஆசிரியர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை" என்ற சர்ச்சை எழுந்ததால், தேர்வுப் பணிகளை புறக்கணிப்பதாக, தமிழ்நாடு மேல்நிலை முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவித்துள்ளது.

    இதையொட்டி, இக்கழக கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சரவணமுருகன் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் பிரபாகரன், மாவட்ட செயலாளர் ரவி முன்னிலை வகித்தனர்.

    இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து சரவண முருகன் கூறியதாவது:ஆசிரியர் தகுதி தேர்வையொட்டி, ஒரு தேர்வு மையத்தில் முதன்மை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள், அறைக் கண்காணிப்பாளர் பணிகள் ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

    இது, பணிமூப்பு அடிப்படையில் ஒதுக்கப்படவில்லை. கூடுதல் துறை அலுவலர் பணிகளை பட்டதாரி ஆசிரியர்களுக்கும், அவர்களுக்குகீழ் பணியாற்றும் வகையில், அறைக் கண்காணிப்பாளர் பணிகளை, முதுகலை ஆசிரியர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தான் தேர்வுப் பணிகளை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.

    மாநில தலைவர் மணிவாசகம் கூறுகையில், "டி.ஆர்.பி., முடிவு படி தான் ஆசிரியர்களுக்கான தேர்வு பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு கீழ் தான், முதுகலை ஆசிரியர்கள் பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து, அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு பணிகளை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

    No comments:

    Post a Comment