கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Monday, March 24, 2014

    44 நிகர்நிலை பல்கலைகள் விவகாரம்: டில்லியில் இன்று கூடுகிறது யு.ஜி.சி

    நாடு முழுவதும், 44 நிகர்நிலை பல்கலைகள் தொடர்ந்து செயல்படுவதற்கு அனுமதிப்பது தொடர்பான கூட்டம், டில்லியில் உள்ள பல்கலை மானிய குழுவின் (யு.ஜி.சி.,) தலைமை அலுவலகத்தில், இன்று முதல், மூன்று நாட்கள் நடக்கிறது.



    கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட, மாணவர்களுக்கான கட்டமைப்பு வசதிகள், சிறந்த பாடத்திட்டம் மற்றும் ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்பது, யு.ஜி.சி.,யின் விதி. இந்த விதிகளை பின்பற்றி, செயல்படும் கல்வி நிறுவனங்களுக்கு, 'நாக்' குழுவின் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவின்படி, நாடு முழுவதும், நிகர்நிலை கல்லூரிகளில் உள்ள கட்டமைப்பு, பாடத்திட்டம் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது. இதில், 44 பல்கலைகளின் தரம், மிகவும் மோசமாக இருப்பது கண்டறியப்பட்டது.இதில், தமிழகத்தின், 16 நிகர்நிலை பல்கலைகளும் அடக்கம். இப்பல்கலைகள், தொடர்ந்து செயல்பட அனுமதிப்பது குறித்து, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி, இம்மாதம், 11,12 ஆகிய தேதிகளில், யு.ஜி.சி., கூட்டம் நடப்பதாக இருந்தது. ஆனால், கூட்டத்தை நடத்தும், யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சிங் சாந்துவின் நியமனம் குறித்த சர்ச்சை எழுந்ததால், '25, 26, 27 தேதிகளில் கூட்டம் நடக்கும்' என, அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, யு.ஜி.சி., செயலர் நியமனத்தை, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அங்கீகரித்ததால், இன்று முதல், மூன்று நாட்களுக்கு, யு.ஜி.சி., கூட்டம் நடப்பது உறுதியாகி உள்ளது. இக்கூட்டத்தில், ஏற்கனவே பல்கலைகளை அங்கீகரித்த குழுவினர் அளித்த அறிக்கைகள், பல்கலைகளிடம் இருந்து, யு.ஜி.சி.,யால் பெறப்பட்ட அறிக்கைகள் ஆகியவை, ஆய்வு செய்யப்பட்டு அதன் பின், முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

    No comments:

    Post a Comment