கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Saturday, March 8, 2014

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், வன துறை மூலம் மரக்கன்றுகள் நட உத்தரவு

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், வன துறை மூலம், மொத்தம், 3.76 லட்சம் மரக்கன்றுகள் நட, பள்ளிக்கல்வி துறை இயக்குனர், ராமேஷ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.


    தமிழகம் முழுவதும், பருவமழை பொழிய தவறியதால், சென்னை தவிர, பிற மாவட்டங்கள், வறட்சி மாவட்டங்களாக, தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், தமிழக அரசு, வன துறை மூலம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பசுமைபடுத்தும் நோக்கத்துடன், மரக்கன்றுகள் நட, பள்ளிக்கல்வி துறை இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். இதற்காக, அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்களுக்கும், சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில், வன துறை மூலம், 3.76 லட்சம் மரக்கன்று, என்.ஜி.ஓ.,க்கள் மூலம், 13.94 லட்சம் மரக்கன்று பெற இயலும். அந்தந்த மாவட்ட வனத்துறை மற்றும், என்.ஜி.ஓ.,க்கள் மூலம் மரக்கன்று பெற்று, ஒவ்வொரு பள்ளியிலும் மரக்கன்று நட்டு, அதனை வகுப்பாசிரியர் பராமரிக்க வேண்டும். அதை பள்ளி தலைமை ஆசிரியர் கண்காணிக்க வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது.

    பள்ளித்தலைமை ஆசிரியர் கூறியதாவது: பள்ளி வளாகங்களில், மரக்கன்று நட உத்தரவிடப்பட்டுள்ளது. மரக்கன்றுகளை பராமரிப்பதில் தான், பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல் உள்ளது. தமிழகம் முழுவதும், கடும் வறட்சி நிலவுவதால், தண்ணீர் பிரச்னை உள்ளது. சில பள்ளி, பெற்றோர் - ஆசிரியர் கழகம் மூலம், தேவையான தண்ணீர் வசதி செய்துள்ளனர். சில பள்ளிகளில், இக்கழகத்தினர் ஆர்வமின்றி, தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. பள்ளிக்கே தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலையில், மரக்கன்றுகளை எவ்வாறு
    பராமரிப்பது இவ்வாறு அவர் கூறினார்.

    No comments:

    Post a Comment