கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Thursday, March 13, 2014

    தேர்தல் பணி: அரசு அதிகாரிகள் விடுப்பு எடுக்க கடும் கட்டுப்பாடு

    தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளதால், விடுமுறை எடுப்பதில் தமிழக அரசு அதிகாரிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவுறுத்தல் கடிதத்தை அண்மையில் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் அனுப்பியுள்ளார்.


    அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், கூடுதல் ஆட்சியர்கள், சார் ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன் விவரம்:
    இந்தியா முழுவதும் ஒன்பது கட்டங்களாக தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 ஆம் தேதியன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தேர்தல் அலுவலர்களுக்கு பல்வேறு கட்டங்களாக பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
    இந்த நிலையில், தேர்தல் சிறப்பான முறையில் நடைபெற தேர்தல் நடத்தும் அதிகாரிகளும், உதவி அதிகாரிகளும் மாவட்டத் தலைநகரங்களிலேயே இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தேர்தல் நடவடிக்கைகள் நிறைவடையும் வரையில் விடுப்பு ஏதும் எடுக்காமல் தொடர்ந்து பணிகளை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
    தவிர்க்க முடியாத சூழ்நிலை என்றால், விடுப்பு எடுக்கலாம். ஆனால், அது குறித்த தகவலையும், உரிய கடிதத்தையும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    No comments:

    Post a Comment