கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Monday, September 24, 2012

    மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.

    மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான, அகவிலைப்படியை, 7 சதவீதம் உயர்த்த, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது ( ஜூலை 1ம் தேதி முதல் )...

    மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, தற்போது, 65 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இதை, 7 சதவீதம் உயர்த்தி, 72 சதவீதமாக வழங்க, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், நேற்று கூடிய, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனால், அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக, 7,408 கோடி ரூபாய் செலவாகும். இந்த அகவிலைப்படி உயர்வு, ஜூலை 1ம் தேதி முதல், அமலுக்கு வருவதால், இந்த நிதியாண்டில், மீதமுள்ள காலத்திற்கு மட்டும், 4,939 கோடி ரூபாய் செலவாகும். அகவிலைப்படி உயர்வால், மத்திய அரசு ஊழியர்கள், 50 லட்சம் பேரும், ஓய்வூதியதாரர்கள், 30 லட்சம் பேரும் பலன் அடைவர். மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில், 58 சதவீதத்திலிருந்து, 65 சதவீதமாக உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கான, 2,300 கோடி ரூபாய் மதிப்பிலான, ஓய்வூதிய திட்டத்திற்கும், அமைச்சரவை ஒப்புதல் கொடுத்தது. அத்துடன், மாநில மின் வாரியங்களின், இரண்டு லட்சம் கோடி ரூபாய் கடனை, மாற்றி அமைக்கும் திட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டது

    No comments:

    Post a Comment