கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Tuesday, September 4, 2012

    சி.பி.எஸ்.இ. தகுதித்தேர்வு - தமிழக அரசு பள்ளிகளில் வேலை கிடையாது

    சி.பி.எஸ்.இ., நடத்திய, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், மத்திய அரசுப் பள்ளிகளில் மட்டுமே, பணியில் சேர முடியும். தமிழக அரசுப் பள்ளிகளில் நியமனம் செய்ய முடியாது" என, ஆசிரியர் தேர்வு வாரியம், திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது...
     "தேசிய அளவிலான ஆசிரியர் தகுதித் தேர்வை, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது. இத்தேர்வை ஏற்காத மாநிலங்கள், தனியாக ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்திக் கொள்ளலாம்" என, மத்திய அரசு, ஏற்கனவே தெரிவித்துள்ளது. அதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வை (டி.இ.டி.,) நடத்தும் பொறுப்பை, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம், தமிழக அரசு வழங்கியது.

    கடந்த, ஜூலை 12ம் தேதி நடத்தப்பட்ட இத்தேர்வில், எதிர்பார்த்த அளவிற்கு தேர்ச்சி சதவீதம் அமையாததால், கடந்த ஆண்டு, ஜூன் மாதம், சி.பி.எஸ்.இ., நடத்திய, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக தேர்வரை, ஏன் பரிசீலனை செய்யக் கூடாது என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய அரசு பாடத் திட்டம், தரம் வாய்ந்ததாக உள்ளது என்ற காரணமும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்த தகவல்: சி.பி.எஸ்.இ., நடத்தும், டி.இ.டி., தேர்வு, மத்திய அரசு பாடத்திட்டபடி நடக்கிறது. எனவே, அத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர், கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட, மத்திய அரசுப் பள்ளிகளில் மட்டுமே, பணியில் சேர முடியும். அவர்களை, தமிழக அரசுப் பள்ளிகளில் சேர்க்க முடியாது.

    தமிழக அரசு நடத்தும், டி.இ.டி., தேர்வு, மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடக்கிறது. எனவே, தமிழக அரசுப் பள்ளிகளில் பணியில் சேர வேண்டும் எனில், டி.ஆர்.பி., நடத்தும், டி.இ.டி., தேர்வைத்தான் எழுத வேண்டும். இவ்வாறு, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    No comments:

    Post a Comment