Pages

Tuesday, April 30, 2013

பணியாளர், நிர்வாக சீர்திருத்தத்துக்கு ரூ.2.67 கோடியில் பல்வேறு திட்டங்கள்

"பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்திற்கு, 2.67 கோடி ரூபாய் செலவில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை(தலைமை செயலகம்)
 

* இரண்டு, லேப் - டாப், சர்வர், 20 கம்ப்யூட்டர், 20 வானவில் தமிழ் மென்பொருள் உள்ளிட்டவை, 20.23 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்படும்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

குடிநீர், கழிப்பறை வசதி செய்யாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து

குடிநீர் மற்றும் கழிப்பறை வசதியை, முறையாக செய்யாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என, தமிழக அரசு, உத்தரவிட்டுள்ளது. "பள்ளிகளில், காற்றோட்டமான வகுப்பறைகள், குடிநீர், கழிவறை வசதி போன்ற கட்டமைப்பு வசதிகளை, ஏற்படுத்த வேண்டும்" என, சுப்ரீம் கோர்ட், ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை கடுமையாக பின்பற்ற, தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்து உள்ளது. 



திறந்த நிலை பல்கலையில் பட்டம் பெற்றவர்களுக்கு, வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு அளிக்க, கோர்ட் தடை விதித்துள்ளது

திறந்த நிலை பல்கலையில் பட்டம் பெற்றவர்களுக்கு, வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு அளிக்க, கோர்ட் தடை விதித்துள்ளது,'' என, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் முனுசாமி கூறினார். இத்துறை மானியக் கோரிக்கை மீது, சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:


அரசு அலுவலகங்களில் அக்னாலெட்ஜ்மெண்ட் வாங்கும் வழி முறைகள்

ஒவ்வொரு அரசு அலுவலகங்களுக்கும் நாம் கடிதம், புகார் கடிதம், போன்ற எந்த வகையான கடிதங்கள் அனுப்பினாலும் அரசு அலுவலர்கள் அக்கடிதங்களை கையாலும் வழிமுறைகளை இந்த மாதம் பார்ப்போம்.

அரசு ஆணை எண்: 114

அரசு அலுவலகங்களுக்கு வரும் கடிதங்களை கையாள வேண்டிய வழிமுறைகளை பற்றி 2.8.2006 தேதியிட்ட பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையினரின் அரசாணை எண்.114, 66, 89, பற்றி தெரிந்து கொள்வோம்.



பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் மோசமாக இருப்பதால், பாக்கெட் உணவுகளை வழங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும்படி மத்திய அரசுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளது.

டெல்லியில் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுகளை, மாநிலங்களவை உறுப்பினர் ஆஸ்கர் பெர்னான்டஸ் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு சமீபத்தில் ஆய்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட தரம், சுத்தம் மதிய உணவில் இல்லை. இதையடுத்து, நிலைக்குழு தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 

ஓராண்டு பட்டப்படிப்பு வழக்கு விசாரணை ஜூன்10-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

ஓராண்டு பட்டப்படிப்பு வழக்கு விசாரணை ஜூன்10-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இவ்வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர் 2013 ஜூன் 10 வரை பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வுகள் எதுவும் வழங்கப்படாது என நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளார். இவ்வழக்கு இந்நிலையில் இருப்பது இடமாறுதல் மற்றும்
பதவி உயர்வுகளை மே மாதத்திற்குள் முடித்திட முடியாத நிலையை உருவாக்கிவிடுமோ என ஆசிரியர்கள் கவலை கொள்கின்றனர்.

பள்ளிகள் திறந்த முதல் வாரத்திலேயே மாணவ, மாணவிகளுக்கு புத்தகப் பை மற்றும் காலணி வழங்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் இலவச புத்தகங்கள், சீருடை, சைக்கிள், புத்தக பை, காலணி போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், வரும் கல்வியாண்டில் அரசின் இலவச பொருட்களை பள்ளி திறந்த ஒரே வாரத்தில் வழங்குமாறு அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களை பள்ளி கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.



Monday, April 29, 2013

"இரட்டை பட்டம்" இடைக்கால தடை எதிர்த்து மேல்முறையீடு, உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்து ஒத்திவைப்பு.

இரட்டைப் பட்டம் செல்லாது" என்று விதிக்கப்பட்ட தீர்ப்பிற்கு சென்னை உயர்நீதிமன்ற பென்ச் அண்மையில் இடைக்காலதடை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து 3 வருடம் படித்த ஆசிரியர்கள் ஒரு மேல்முறையீடு மனு செய்துள்ளனர். அந்த மனுவானது நீதியரசர்கள் எலிப் தர்மா ராவ் மற்றும் எம். வேணுகோபால் ஆகியோரின் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்ததுது.அதில் இடைக்கால தீர்ப்பை இரத்து செய்ய கோரி மனு செய்யப்பட்டிருந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள் நாங்கள் இடைக்கால தடை உத்தரவு கொடுத்துள்ளதால் வேறு நீதிபதியின் விசாரணைக்கு மனு செய்யுமாறு தெரிவித்தனர்

Sunday, April 28, 2013

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துங்கள்: ஆசிரியர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்கள் பாடுபட வேண்டும் என்று வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு குறித்த விழிப்புணர்வுத் தகவல்கள்

* இவ்வாண்டு மாறுதல் / பதவி உயர்வுக்கான கலந்தாய்வு ஆன்லைனிலும் நடக்கலாம் அல்லது வழக்கமான முறையிலும் நடக்கலாம். எப்படியாயினும் மாறுதல் கோரும் விண்ணப்பத்தினை உரிய முறையில் சமர்ப்பிப்பதும் பதவி உயர்விற்கான தேர்ந்தோர் பட்டியலில் தகுதியானவர்களின் பெயர்கள் வரிசை முறைப்படி உள்ளதைச் சரிபார்த்துக் கொள்வதும் ஆசிரியர்களின் கடமையாகும்.


"இரட்டை பட்டம்" இடைக்கால தடை எதிர்த்து மேல்முறையீடு, உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

"இரட்டைப் பட்டம் செல்லாது" என்று விதிக்கப்பட்ட தீர்ப்பிற்கு சென்னை உயர்நீதிமன்ற பென்ச் அண்மையில் இடைக்கால தடை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து 3 வருடம் படித்த ஆசிரியர்கள் ஒரு மேல்முறையீடு மனு செய்துள்ளனர். அந்த மனுவானது நீதியரசர்கள் எலிப் தர்மா ராவ் மற்றும் எம். வேணுகோபால் ஆகியோரின் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது.
அதில் இடைக்கால தீர்ப்பை இரத்து செய்ய கோரி மனு செய்யப்பட்டுள்ளது. வரிசை எண்.31-வது இடத்தில் உள்ளதால் இவ்வழக்கு இன்று மாலைக்குள் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

Saturday, April 27, 2013

வகுப்பு வாரி அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண், ஆசிரியர் தகுதித் தேர்வில் புதிய நடைமுறை தமிழக அரசு பரிசீலனை

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறத் தேவையான மதிப்பெண்களை வகுப்புவாரி அடிப்படையில் நிர்ணயிப்பது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பரிசீலித்து வருவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீது வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்தின் போது இந்தத் தகவலை அவர் தெரிவித்தார். இதுகுறித்து நடந்த விவாதம்:-



1,400 புதிய பணியிடங்கள் ஒளிவுமறைவற்ற கவுன்சலிங் - பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

வரும் கல்வி ஆண்டில் சுமார் 1,400 பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் புதிதாக உருவாகும் நிலையில் ஒளிவுமறைவின்றி கலந்தாய்வு நடத்தி சொந்த மாவட்டத்தில் பணிபுரிய தங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என வெளி மாவட்டங்களில் காத்திருக்கும் ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.நடப்பு கல்வி ஆண்டிற்கான கல்விப்பணிகள் இம்மாத இறுதியுடன் நிறைவு பெறுகின்றன.


அரசு துறைகளில் பணியாற்றுபவர்கள் திடீரென பதவியை ராஜினாமா செய்து, அரசியல் கட்சிகளில் சேர்ந்து உடனே தேர்தலில் போட்டியிட விரைவில் தடை வருகிறது

இதற்காக மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
அரசு துறைகளில் பணியாற்றுபவர்கள், ஜாதி சங்கம், அரசியல் கட்சிகளில் உறுப்பினர்களாக இருக்க கூடாது. நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியல் கட்சிகளுடன் தொடர்பு வைத்திருக்க கூடாது. அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது போன்ற பல நிபந்தனைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன.



மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு

எம்.எஸ்.சி., நர்சிங், எம்.பி.டி., ஆகிய, பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் அறிந்து கொள்ள CLICK HERE &GET YOUR RESUL

பிற்பட்டோர், சிறுபான்மையின மாணவர் விடுதிகளுக்கு 178 கோடி ஒதுக்கீடு

பிற்பட்டோர், மிகப் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள், கட்டணமின்றி, விடுதிகளில் தங்கி படிக்க, 178 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. பிற்பட்டோர், மிகப் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ், 1,294 விடுதிகள் இயங்குகின்றன. இவற்றில், பிற்பட்டோர், மிகப்பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள், எவ்வித கட்டணமும் செலுத்தாமல் தங்கி படிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

நெட், செட் தேர்வுகளின் தகுதி மதிப்பெண்கள் - மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

பல்கலை, கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கான "நெட்" தேர்வில், யு.ஜி.சி.,முதலில் அறிவித்தபடி குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றவர்களை தேர்ச்சியடைந்தவர்களாக அறிவித்து, சான்றிதழ்களை வழங்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

மே.9ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே.9 ம் தேதி அன்றும்,பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே.31ம் தேதி அன்றும் வெளியிடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Friday, April 26, 2013

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில திறன் வளர்க்க ‘ரேடியோ இங்கிலீஷ்’ திட்டம் - இது சார்பாக ஜூலை 5ல் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

சென்னை லயோலா கல்லூரியின் ஆங்கிலத் துறை தலைவர் பிரான்சிஸ் தலைமையிலான குழு இப்பயிற்சியை வடிவமைத்துள்ளது. தொடக்கப்பள்ளிக் குழந்தைகளுக்கு ரேடியோ ஆங்கில பயிற்சி அளிக்கும் திட்டத்தின் முதல் கட்டமாக, வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி பெற்ற ஆசிரியர் பயிற்றுனர்கள், ஜூலை 5ல் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கருத்தாய்வு மையங்களில் (சி.ஆர்.சி.) தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். இத்திட்டத்துக்காக அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் ரேடியோ வழங்கப்பட உள்ளது. ரேடியோ வழங்குவதற்கு முன் இப்பயிற்சிக்காக குழந்தைகள் தயார்ப்படுத்தப்பட உள்ளனர்.



அரசு தொடக்கப்பள்ளிக் குழந்தைகளும் ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி திட்டத்தை தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிமுகம்

அரசு தொடக்கப்பள்ளிக் குழந்தைகளும் ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி திட்டத்தை தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது.
ஆங்கில மோகம் அனைவரையும் அடிமையாக்கி வருகிறது. தங்கள் குழந்தைகள் நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்பதற்காக 



கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் செயல்பாட்டிற்கு, 69.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் செயல்பாட்டிற்கு, 69.81 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில், பிரமலை கள்ளர் வகுப்பினர் அதிகளவில் வசிக்கின்றனர். இவர்களின்,..
 

2013-2014 கல்வியாண்டில் ஓய்வு பெற உள்ள உதவி கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு ஓர் வாய்ப்பு.

2013-2014 கல்வியாண்டு முடிய பணி நீட்டிப்பில் பணியாற்ற விரும்பினால் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே மீளவும் நடு நிலைப்பள்ளித் தலைமையாசிரியராக பணி மாறுதல் பெற்றுக்கொள்ள வாய்ப்பு.

click here to download தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்:9032/ஐ2/2013 நாள்:15.04.2013

சத்துணவுக்கான மானியத்தை, தமிழக அரசு 69.50 பைசாவிலிருந்து ரூ.1.30 உயர்த்தியுள்ளது

தமிழகத்தில் துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில்,ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, 54 ஆயிரம் மையங்களில் சத்துணவு வழங்கப்படுகிறது. சத்துணவுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணை, முட்டை ஆகியவற்றை அரசே வழங்குகிறது.


8ம் வகுப்பு வரை தடையற்ற தேர்ச்சி : பரிசீலிக்க நாடாளுமன்ற குழு கோரிக்கை

இந்தியாவில் பள்ளியில் பயிலும் பிள்ளைகள் 8ம் வகுப்பு வரை தடையற்ற தேர்ச்சி பெற வைக்கும் திட்டத்தை மறு பரிசீலனை செய்யுமாறு நாடாளுமன்றக் குழு கோரியுள்ளது.அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், அனைத்து மாணவர்களும் 8ம் வகுப்பு வரை தடையற்ற தேர்ச்சி பெற வைக்கும் திட்டத்தை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை முடிவு செய்துள்ளது.



Thursday, April 25, 2013

அரசு பள்ளி மாணவர்களுக்காக 9.67 லட்சம் கணித உபகரண பெட்டிகள் : கல்வித்துறை, "டெண்டர்' வெளியீடு

வரும், 2013-14ம் கல்வி ஆண்டில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்காக, 9.67 லட்சம், ஜியாமெட்ரி பெட்டிகளை கொள்முதல் செய்ய, பள்ளி கல்வித் துறை, "டெண்டர்' வெளியிட்டுள்ளது.
இலவச கணித உபகரண பெட்டி வழங்கும் திட்டம்,.....



காஞ்சியில் மே, ஜூன் மாதங்களில் வீடுகள், நிறுவனங்களில் பொருளாதார கணக்கெடுப்பு பணி துவக்கம் கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மே, ஜூன் மாதத்தில் வீடுகள், நிறுவனங்களில் பொருளாதார கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளதாக கலெக்டர் சித்திரசேனன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் 6வது பொருளாதார கணக்கெடுப்பு முன்னேற்பாடு குறித்த கூட்டம் நேற்று நடந்தது.கலெக்டர் சித்திரசேனன் தலைமை வகித்து பேசியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6வது பொருளாதார கணக்கெடுப்பு வீடுகள், நிறுவனங்களில் நடத்தப்பட உள்ளது. கணக்கெடுப்பில் கிடைக்கும் புள்ளி விவரம் மக்கள் பயன்பாட்டுக்கு திட்டம் தீட்ட ஏதுவாக இருக்கும். பொருளாதார நிலையறிந்து அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றார்போல் நலத்திட்டத்தை செயல்படுத்த முடியும். கிராம, நகர்புற பகுதிகளில் வேலையற்ற பட்டதாரிகள், அங்கன்வாடி பணியாளர்கள், தொடக்கக்கல்வி பள்ளி ஆசிரியர்களை கொண்டு கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது. 

Wednesday, April 24, 2013

அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் 1,900 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

அனை வருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் 1,900 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்காக அந்தந்த மாவட்டங்களில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின¢றனர். இவர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ஊதியம் கிடைக்கும்.


அனைவருக்கும் இடை நிலை கல்வி திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) மூலம், பள்ளி விடுதி மாணவிகளுக்கு கவுன்சிலிங் நடத்த, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இத்திட்டம் மூலம் அரசு, உதவி பெறும் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு கல்வித் திறனை வளர்த்தல், இடைநின்றல் தவிர்த்தல், தேர்ச்சி விகிதம் அதிகரித்தல், கூடுதல் வகுப்பறை கட்டுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன....

கல்வி ஆண்டு மத்தியில் ஓய்வுபெறும் ஆசிரியருக்கு பணி நீட்டிப்பு: ஐகோர்ட் உத்தரவு

கல்வி ஆண்டு மத்தியில் ஓய்வு பெறும் ஆசிரியருக்கு, கல்வி ஆண்டு முடிய பதவி நீட்டிப்பு வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரம் அண்ணா அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் தமிழ்செல்வன், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: நான் பட்டதாரி ஆசிரியராக 2007 அக்டோபர் 8ம் தேதி முதல் பணிபுரிந்து வருகி றேன். எனது ஓய்வு நாள் 2013 மார்ச் 31ம் தேதி ஆகும்.,,,



தமிழ், ஆங்கில திறமையை சோதிக்க தேர்வு மாணவன் தேர்ச்சி பெறாவிட்டால் ஆசிரியருக்கு ஊதிய உயர்வு ரத்து- தினகரன் நாளிதழ் செய்தி

மாணவனுக்கு தமிழ், ஆங்கிலப்புலமை இல்லையென்றால் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதில் அதிகபட்ச தண்டனையாக ஆசிரியர்களின் ஊதிய உயர்வு ரத்து செய்யப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தகுதி தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் ஏராளமான ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர். இந்நிலையில்,...


பாடப் புத்தகங்களைப் பார்த்து, பொதுத்தேர்வை எழுதும், புதிய வகை திட்டம், வரும் கல்வி ஆண்டில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், அமல்படுத்தப்பட உள்ளது.

பொதுத் தேர்வுகள், மாணவர்களிடையே மன அழுத்தத்தை தருவதால், தேர்வு நடைமுறைகளில், படிப்படியாக, பல்வேறு சீர்திருத்தங்களை, மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. மதிப்பெண்கள், மாணவர்களிடையே, வேறுபாடுகளை ஏற்படுத்தி, மன அளவில், பாதிப்படைய செய்வதால், "கிரேடு' முறையை, சி.பி.எஸ்.இ., கல்வி முறையில், ஏற்கனவே அமல்படுத்தப்பட்டு உள்ளது.


பள்ளி கல்வித்துறையில், 563 இளநிலை உதவியாளர்களை பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, நாளை (25 -4-2013)நடக்கிறது

பள்ளி கல்வித் துறையில், காலியாக உள்ள, ஆசிரியர் அல்லாத காலி பணியிடங்கள், படிப்படியாக நிரப்பப்பட்டு வருகின்றன. குரூப்-4 தேர்வில் தேர்வு பெற்ற இளநிலை உதவியாளர்கள், 563 பேர், பள்ளி கல்வித்துறையில், பணியமர்த்தப்படுகின்றனர். இவர்களை, பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, நாளை காலை, 10:00 மணிக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடக்கிறது. தேர்வு பெற்றோர், அவரவர் சொந்த மாவட்டத்தில் உள்ள, முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு, நாளை காலை, 9:00 மணிக்கு, நேரில் ஆஜராக வேண்டும் என, பள்ளி கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது. "ஆன்-லைன்' வழியில், கலந்தாய்வு நடக்கிறது.

வரும் கல்வி ஆண்டில் 400 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி பாடப்பிரிவு துவக்கம்

வரும் கல்வி ஆண்டில், 400 அரசு பள்ளிகளில், ஆங்கில வழியில் வகுப்புகள் துவங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மாணவ, மாணவியர் சேர்க்கையை அதிகப்படுத்த, 32 மாவட்டங்களைச் சேர்ந்த கல்வித்துறை அதிகாரிகளிடம், பகுதி வாரியாக தொடக்க கல்வித்துறை, சென்னையில் ஆலோசனை நடத்தி வருகிறது.



Monday, April 22, 2013

மே 9ம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு?

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், மே 10ம் தேதிக்குள் வெளியாகி விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மே, 9ம் தேதி வெளியாக வாய்ப்புகள் இருப்பதாகவும், துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


Sunday, April 21, 2013

IAS - முதன்மைத் தேர்வு மாற்றம் வாபஸ்!

சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வில் அறிவிக்கப்பட்ட மாற்றங்கள் தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கொண்டு வந்த மாற்றங்களுக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து,


நாமக்கல் "மாவட்டத்தில் பகுதி நேர ஆசிரியர் காலிப்பணி விண்ணப்பம் வரவேற்பு: சி.இ.ஓ.,

"மாவட்டத்தில், 31 பகுதி நேர ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு, தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது" என, சி.இ.ஓ., குமார், கூடுதல் சி.இ.ஓ., கோபிதாஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 


மகாவீர் ஜெயந்தி - தமிழகத்தில் விடுமுறை 23.04.2013 அல்லது 24.04.2013 அன்றா? விளக்கம்

click here download to தமிழக அரசின் அதிகாரபூர்வ விடுப்பு - G.O.Ms.No.981, Dated the 19 th November 2012

மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் 23.04.2013 அன்று விடுமுறை என்றும் அதையடுத்து தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணிபுரிபவர்களுக்கு 23.04.2013 அன்று விடுமுறை என்றும் ஒரு சில ஆசிரியர்கள் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் 2013ஆம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியலில் தமிழக அரசு 24.04.2013

ஆசிரியர் தகுதித் தேர்வு இந்த ஆண்டு நடக்குமா? ஏகப்பட்ட வழக்குகளால் டிஆர்பி திணறல் - தினகரன் நாளிதழ் செய்தி

மாணவர்களின் குழப்பங்களை தீர்க்க வேண்டிய ஆசிரியர்களே குழம்பிப் போய் இருக்கிறார்கள். அதற்கு பல காரணங்கள். ஆசிரியர் தேர்வு தொடர்பான அறிவிப்பில் தொடங்கிய குழப்பம், விண்ணப்ப விற்பனை, தேர்வு முறை, ரிசல்ட் வெளியீடு, அதற்குப் பிறகு படிப்பு தகுதி என தீராமல் தொடர்ந்தது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த குளறுபடிகளால் 400க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன.


மாநகராட்சி பள்ளிகளில் புது "சாப்ட்வேர்": கல்வித்தரத்தை பெற்றோர் அறிய வாய்ப்பு

கோவை மாநகராட்சி பள்ளிகளை ஒருங்கிணைக்கவும், மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தவும் பிரத்யேக சாப்ட்வேர் நிறுவப்படுகிறது. இதன்மூலம், மாணவர்களின் கல்வித்தரத்தை வீட்டில் இருக்கும் பெற்றோரும் தெரிந்து கொள்ளலாம். 


Saturday, April 20, 2013

ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்தன உயர்நிலை பள்ளிகளுக்கு இன்று (21ம் தேதி) முதல் ஜூன் 2ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள உயர்நிலை பள்ளிகளில் கடந்த 10 நாட்களாக ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெற்று வந்தன. நேற்று 20ம் தேதியுடன் அனைத்து தேர்வுகளும் முடிவடைந்தன.இதையடுத்து இன்று (21ம் தேதி) முதல் ஜூன் 2ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


டி.இ.டி., தேர்வில் மதிப்பெண் சலுகை : எஸ்.சி., - எஸ்.டி.,க்கு வழங்க கோரிக்கை - தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி

டி.இ.டி., தேர்வில், பி.சி., - எம்.பி.சி., - எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவு தேர்வர்களுக்கு, மதிப்பெண் சலுகை வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தி உள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி, இந்த அமைப்பின் சார்பில், சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்..


Friday, April 19, 2013

தேர்வு/தேர்ச்சி அனுமதி பெற உதவி தொடக்கக்கல்விஅலுவலரிடம் சமர்பிக்க வேண்டியவைகள்

*மதிப்பெண் பதிவேடு
*தேர்ச்சி தரநிலை விபரப்பட்டியல்
*மக்கள் தொகை சுருக்கம்
*5+ குழந்தைகள் பெயர்ப்பட்டியல்
*இடைநின்றவர் பெயர்ப்பட்டியல்/இன்மை அறிக்கை
*பள்ளியில்சேராதவர் பெயர்ப்பட்டியல்/ இன்மை அறிக்கை
*மாற்றுத்திறனாளிகள்பெயர்ப்பட்டியல் /இன்மை அறிக்கை
*குழந்தைதொழிலாளர்பெயர்ப்பட்டியல் /இன்மை அறிக்கை
*EER சுருக்கம்
*பள்ளி வேலை நாட்கள் விபரம்
*கோடைவிடுமுறை அனுமதி

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 80 சதவீதமானது

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, 80 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, அடிப்படை சம்பளத்தில் கணக்கிட்டு வழங்கப்படும் அகவிலைப்படி, தற்போது, 72 சதவீதமாக உள்ளது. ஆறு மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்படும் இந்த அகவிலைப்படி, ஜனவரி, 1ம் தேதி முதல் உயர்த்தப்பட வேண்டும். 


Wednesday, April 17, 2013

அரசு பாலிடெக்னிக்குகளில், 579 ஆசிரியர்கள் பணியிடங்களை உருவாக்கி, அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 30 அரசு பாலிடெக்னிக்குகள் உள்ளன. இக்கல்லூரிகளில், 15 ஆண்டுகளாக ஆசிரியர், அலுவலர் பற்றாக்குறை நீடிப்பதால் தரமான கல்வி கேள்விக்குறியானது. மாணவர்கள் அதிகரிப்புக்கு ஏற்ப ஆசிரியர்களின் எண்ணிக்கை இல்லை. மேலும் கல்லூரிகளில் இடப்பற்றாக்குறையால் "ஷிப்டு' முறை அமலானது. பகுதி நேர ஆசிரியர்களை நியமித்து சமாளித்தனர். ரெகுலர் ஆசிரியர்கள் கற்பித்தலுடன், ஆய்வுக் கூடம், பட்டறைகளை நிர்வகிப்பது போன்ற பணிகளையும் செய்து வந்தனர்.


தமிழகத்தில் புதியதாக 1591 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய, அரசு அனுமதி வழங்கியுள்ளது.

40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சாரப்படி, அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப, கூடுதலாக முதுகலையாசிரியர்களை நியமிக்க, பள்ளிக்கல்வித்துறைக்கு, அரசு அனுமதி வழங்கியுள்ளது.


T.N.P.S.C., பாடத்திட்டங்கள் மீண்டும் மாற்றம்

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில், மீண்டும் மொழிப்பாடங்களுக்கு, முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குரூப்-4 தேர்வில், தமிழ் மொழிக்கான கேள்விகள் எண்ணிக்கை, முன்பு இருந்த படியே, 100 ஆகவும், வி.ஏ.ஓ., தேர்வில், தமிழ் அல்லது ஆங்கிலத்திற்கான கேள்விகள், 30ல் இருந்து, 80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.

புதிய பாடத்திட்ட அறிவிப்பு, அதிகாரப்பூர்வமாக, இன்று வெளியாகிறது.அரசுப் பணியில் சேருபவர்கள், திறமையானவர்களாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், தேர்வாணைய முன்னாள் தலைவர் நடராஜ், குரூப்-2, குரூப்-4, வி.ஏ.ஓ., உள்ளிட்ட தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களில், மாற்றத்தை ஏற்படுத்தினார். இதில், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழி பாடங்களுக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டது.



தமிழ் நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள் மற்றும் அது குறித்த விவரங்கள்

1. அரசு விடுமுறை நாட்கள். (Govt Holidays)
பண்டிகை விடுமுறை நாட்கள், தேசிய விடுமுறை நாட்கள் முதலியன. அரசிதழ் (கெசெட்) வெளியீடு மூலம் ஆண்டு தோறும் அறிவிக்கப்படுகின்றன.

2. மதச்சார்பு விடுப்பு (Religious / Restricted Holidays)
வரையறுக்கப்பட்ட விடுப்பு என்றும் கூறுவர். ஒரு காலண்டர் ஆண்டில் சுமார் 30 மதச்சார்பு பண்டிகைகளில் "ஏதேனும் மூன்று" நாட்களை ஒரு பணியாளர் துய்க்கலாம். அவர் சார்ந்த மதப் பண்டிகையாக இருக்க வேண்டும் என்பதில்லை..

 

தகவல் அறியும் உரிமை சட்டம் தகவல் தராத அதிகாரிக்கு அபராதம்

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உரிய தகவல்களை அளிக்காத நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.பாளை அருகே மணல் கடத்தல் சம்பவத்தில் தொடர்பான வாகன தகவல் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலக பொது தகவல் அலுவலரிடம் ( வட்டார போக்குவரத்து அலுவலர்),,

எஸ்சி, எஸ்டி, மாணவர்கள் உதவித்தொகை பெறுவது எப்படி?

12-5-2013 அன்று சென்னையில் பயிற்சி
எஸ்சி, எஸ்டி, பிரிவினரை சேர்ந்த மாணவர்கள் தேர்வில் முதல் வகுப்பில் (60% க்கு மேல் ) தேர்ச்சி பெற்றிருப்பின், பல்வேறு உதவித்தொகைகளை திராவிட நலத்துறை வழங்கப்பட உள்ளது

BRIGHT STUDENTS AWARD
பத்தாம் வகுப்பில் மாவட்டத்திலியே முதல் மாணவராக வருபவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருதினை ஆதி திராவிட நலத்துறை இயக்குனர் வழங்குவார். 



இந்த ஆண்டு 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் அரசு இணையதளங்களில் மட்டுமே வெளியாகும்

தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு அரசு இணையதளங்களில் மட்டுமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தரா தேவி அனுப்பியுள்ள கடிதத்தில்,


டி.இ.டி., தேர்வு அறிவிப்பு: மாத இறுதிக்குள் வெளியீடு

"டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு, இம்மாத இறுதிக்குள் வெளியாகும்' என, துறை வட்டாரங்கள், நேற்று தெரிவித்தன. பள்ளி கல்வித்துறையில், 20 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது குறித்தும், இந்த இடங்களை பூர்த்தி செய்ய, இன்னும், டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு வெளி வராதது குறித்தும், "தினமலர்' நாளிதழில், நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து, கல்வித்துறை அதிகாரிகளுடன், டி.ஆர்.பி., அதிகாரிகள், நேற்று ஆலோசனை நடத்தினர். ஆசிரியர் காலி இடங்கள் எண்ணிக்கை மற்றும் எப்போது தேர்வு நடத்தலாம் என்பது உள்ளிட்ட, பல்வேறு அம்சங்கள் குறித்து, கல்வித்துறை அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறுகையில்,"டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு, இன்னும், 10 நாட்களுக்குள் வெளிவரும்' என, தெரிவித்தன. அறிவிப்பு வெளியானதும், ஒன்றரை மாத இடைவெளிக்குப்பின், தேர்வு நடக்கும் என, தெரிகிறது. எனவே, ஜூன் இறுதியில், தேர்வு நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. "அப்ஜக்டிவ்' முறையிலான விடைகள் என்பதால், மதிப்பீடு செய்யும் பணி அனைத்தும், கம்ப்யூட்டர் மூலமாகவே நடக்கின்றன. எனவே, தேர்வு முடிவை, விரைவாக வெளியிட்டு, ஜூலை இறுதிக்குள், புதிய ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும் வகையில், அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என, கூறப்படுகிறது.

Monday, April 15, 2013

பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில், "புளு பிரின்ட்' அடிப்படையில் கேள்விகள் அமையாததால், மாணவர்களுக்கு, 10 சிறப்பு மதிப்பெண் வழங்க, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

ஐந்து மதிப்பெண் பகுதியில், "தொடர்கள் - தொடர்வரிசை' பாடத்தில், இரு கேள்விகள் இடம் பெற வேண்டும்; ஆனால், ஒரு கேள்வி மட்டுமே கேட்கப்பட்டது. "இயற்கணிதம்' பாடத்தில், மூன்று கேள்விகளுக்கு பதில், இரு கேள்வியும்; "அணிகள், முக்கோணவியல்' பாடங்களில், ஒரு கேள்விக்கு பதில், இரண்டு கேள்விகளும் கேட்கப்பட்டன. அதேபோல், "கணங்களும் சார்புகளும்' பாடப் பகுதியில், இரண்டு கேள்விகளும்,


உயர் கல்விக்காக 3,226 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என அமைச்சர் சம்பத் தகவல்

விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா மற்றும் மரக்கன்று நடும் விழா நேற்று தேவனாம்பட்டினம் பெரியார் கலைக் கல்லூரியில் நடந்தது. கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் வரவேற்றார்.

அண்ணாமலை பல்கலைகழகத்தை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பாக மசோதா தாக்கல்

அண்ணாமலை பல்கலைகழகத்தை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பாக மசோதா தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா சட்டமாக நிறைவேறினால் அண்ணாமலை பல்கலைகழகத்திற்கு அளிக்கப்பட்டிருக்கும் சிறப்பு அதிகாரங்கள் ரத்தாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, April 14, 2013

துறைத்தேர்வுகள் மே-2013 விண்ணப்பிக்கக் கால நீட்டிப்பு.

துறைத்தேர்வுகள் மே 2013 விண்ணப்பத்தேதி நீட்டிப்பு
மே மாதம் நடைபெறும் துறைத்தேர்வு எழுதுவதற்கான தேதி 22-4-2013 மாலை 5-45 வரையில் நீட்டிக்கப்படுகிறது.

ஆண்டு ஊக்க ஊதிய உயர்வு 3% கணக்கிடும் விதம் குறித்த தெளிவுரை

click here download to  ஊக்க ஊதிய உயர்வு 3% கணக்கிடும் விதம் குறித்த தெளிவுரை கடிதம் 

பல்வேறு காரணங்களினால் அறிந்தவைகளே சில நேரங்களில் நமக்கு மறந்துவிடுகிறது. எனவே நம் நண்பர்களுக்காக நினைவுபடுத்துவதற்காக இதனை வெளியிடுகிறோம்.



தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலை பாடத்திட்டத்தில் விரைவில் மாற்றம்

ஆசிரியர் கல்வி பாடத்திட்டத்தில், விரைவில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான கருத்தாய்வுக் கூட்டம் ஏப்.,17ல் துவங்குகிறது,'' என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் 
கூறினார்.


தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும் தொழிற்கல்வி "குரூப்' கட்டாயம் - மத்திய அரசு

அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும், வரும் கல்வி ஆண்டு முதல் தொழிற்கல்வி "குரூப்' கட்டயாமாக துவக்க வேண்டும், என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கணக்கு, அறிவியல், கணக்கு பதிவியல் உள்ளிட்ட குரூப் கட்டாயம் இருக்கும்.


Saturday, April 13, 2013

20 ஆயிரம் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் 20 ஆயிரம் : ஆசிரியர் தகுதி தேர்வு நடப்பது எப்போது ?


மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், புதிய ஆசிரியர்களை, மே மாதத்திற்குள் தேர்வு செய்து, பணி நியமனம் செய்ய, தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால், காலியாக உள்ள, 20 ஆயிரம் இடங்களை நிரப்புவதற்காக, அடுத்தகட்ட ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,) நடத்துவது குறித்து, எவ்வித அறிவிப்பையும் வெளியிடாமல், டி.ஆர்.பி., மவுனம் காத்து வருகிறது.



T.N.P.S.C., தேர்வுகளில் மீண்டும் தமிழில் 100 கேள்விகள் : அடுத்த வாரம் அறிவிப்பு

டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், குரூப்-2, குரூப்-4, வி.ஏ.ஓ., ஆகிய தேர்வுகளில், மீண்டும் தமிழ் மொழிக்குரிய பாடத்திட்டங்கள், சேர்க்கப்பட்டுள்ளன. குரூப்-4, வி.ஏ.ஓ., தேர்வுகளில் மீண்டும், தமிழில் இருந்து, 100 கேள்விகள் கேட்கப்பட உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகிறது.


Friday, April 12, 2013

அறிந்து கொள்வோம் ! பள்ளி அளவில் நடை பெறும் போட்டிதேர்வுகளும் விவரங்களும்.

பள்ளி அளவில் பலவித போட்டி தேர்வுகளும் அதற்கு ஸ்காலர்ஷிப்களும் உள்ளன. பல பள்ளிகள் அதற்காக மாணவர்களை தயார் செய்து அனுப்புகின்றன. ஆனால் பல மாணவர்கள் அதை பற்றி தெரியாததால் அதன் மூலம் வெற்றி பெற வாய்ப்பு இருக்கும் மாணவர்கள் கூட எப்படி கலந்து கொளவது என்று அறியாததால் நல்ல வாய்ப்புகளை இழக்கின்றனர். இதில் முடிந்தவரை போட்டி தேர்வுகளின் விவரங்களும் அதன் இணையதள முகவரியும் தொகுத்து இருக்கிறேன்.இந்திய அளவில நடக்கும் NTSE தேர்வு.இதன் மூலம் வருடா வருட படிப்பு முடியும் வரை ஸ்காலர்ஷிப் பணம் கொடுக்க படுகிறது. மிக பெருமை வாய்ந்த தேர்வுகளில் ஒன்று. போன்ற வருடம் வரை எட்டாம் வகுப்புக்கு நடந்து கொண்டு இருந்தது. இனத வருடம் முதல் பத்தாம் வகுப்புக்கு நடைபெறுகிறது. அதன லிங்க்


http://www.ncert.nic.in/programmes/talent_exam/talent3.html



போதிய மாணவர்கள் இல்லை - விற்பனைக்கு வரும் தனியார் கல்லூரிகள்

தமிழகத்தில், குறிப்பாக கோவை பிராந்தியத்தில், பல கல்லூரிகள் விற்பனை செய்யப்படவுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பொறியியல் கல்லூரிகள். மாணவர் பற்றாக்குறையே இதற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

புதிய கல்விக்கடன் திட்டத்தின்படி, அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களுக்கு, வேறுபாடின்றி கடன் வழங்க வேண்டும். : ஐகோர்ட் உத்தரவு

மதுரை புதூரை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவருக்கு, கல்விக்கடன் வழங்க, இந்தியன் வங்கி கிளை மேலாளர் பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்க, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.புதூர் ராமவர்மாநகர் முனியசாமி தாக்கல் செய்த மனு: எனது மகன் பார்த்தசாரதி. இவர், காஞ்சிபுரம் அருகே அறுபடை வீடு பொறியியல் கல்லூரியில், நிர்வாக ஒதுக்கீட்டில் பி.இ., படிக்கிறார். 


"ஆன்-லைன்' பதிவில் 22 லட்சம் மாணவர் விவரம் இல்லை: விடுபட்டு போன மர்மம் என்ன?

தமிழகத்தில், அனைத்து பள்ளி மாணவர்களின் விவரங்களையும், ஆன் -லைனில் பதிவேற்றம் செய்யும் பணி முடிவடைந்துள்ளது. இதில், 22 லட்சம் மாணவர்களின் விவரங்கள் விடுபட்டுள்ளன.

முதுகலை தாவரவியல் ஆசிரியர், தேர்வு பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.

கடந்த டிசம்பரில், 2,000 முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு, அவர்கள், பணி நியமனமும் செய்யப்பட்டு விட்டனர். கோர்ட் வழக்கு காரணமாக, தாவரவியல் ஆசிரியர் பணிக்கான தேர்வு பட்டியலை வெளியிடுவதில் கால தாமதம் ஏற்பட்டது.

பள்ளி கல்வியில் புதிய திட்டங்கள்: அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

தமிழக பட்ஜெட்டில், பள்ளிக்கல்வி துறைக்கு, 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2013 -14ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், அரசின் மற்ற துறைகளை காட்டிலும், பள்ளிக் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது.இந்த நிதியை கொண்டு, புதிய திட்டங்கள் செயலாக்கம், கல்வி தரம் மேம்பாடு, ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதவர் நியமனம் போன்றவை தொடர்பாக, அதிகாரிகளுடன் அமைச்சர் வைகைச்செல்வன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட பள்ளி கல்விக்கான புதிய திட்டங்கள், அத்துறையின் மானிய கோரிக்கை அறிவிப்பில் வெளியாகும் எனத் தெரிகிறது.

Thursday, April 11, 2013

தனியார் நடத்தும் பி.எட். கல்லூரிகளுக்கு கட்டணம் எவ்வளவு என்பது குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் விளக்கம்.

சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, அரூர் தொகுதி எம்.எல்.ஏ. தில்லிபாபு எழுப்பிய துணைக் கேள்விக்கு அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில் - கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பாக, பி.எட். கல்லூரிகளுக்கென கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. இதற்கான கட்டணத்தை நிர்ணயிக்க ஓய்வுபெற்ற நீதிபதி என்.பாலசுப்பிரமணியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி, அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகளில் ரூ.10 ஆயிரமும், தரச்சான்று பெற்ற கல்லூரிகள் ரூ.46 ஆயிரத்து 500-ம், தரச்சான்று இல்லாத கல்லூரிகள் ரூ.41 ஆயிரத்து 500-ம் கட்டணம் வசூலிக்க வேண்டும். 



மதுரை காமராஜ் பல்கலைக்கு விரைவில் 73 ஆசிரியர்கள்

மதுரை காமராஜ் பல்கலையில் 73 ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்,'' என, துணைவேந்தர் கல்யாணி தெரிவித்தார். அவர் கூறியதாவது: இப்பல்கலையில் 107 படிப்புகள் உள்ளன. சினிமா தொழில்நுட்பம், சுற்றுலா மேலாண்மை உட்பட 80 படிப்புகள் கடந்த ஆண்டில் துவக்கப்பட்டன. புதிதாக இளைஞர் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரு இருக்கைகள் உட்பட 18 இருக்கைகளும் (ஸ்கூல்) உள்ளன.


மூவர் குழு அறிக்கையை வெளியிட மே 4 ல் அடுத்த கட்ட போராட்டம்: அரசு ஊழியர்கள் சங்கம் முடிவு

ஊதிய முரண்பாடு தொடர்பான, மூவர் குழு அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தும், அதை வெளியிட தாமதம் செய்வதை கண்டித்து,மே 4 ல் அடுத்த கட்ட போராட்டத்தை தீவிரப்படுத்த, அரசு ஊழியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.


ஓட்டுசாவடி அலுவலர் பணியிட உத்தரவை வாங்க மறுக்கும் ஆசிரியர்கள்

ஓட்டுசாவடி பணி அலுவலர் பணியிட உத்தரவை, இடை நிலை ஆசிரியர்கள் வாங்க மறுத்து வருவதால்,தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்படும் நிலை உள்ளது.ஒவ்வொரு பகுதிக்கும், தேர்தல் ஆணையத்தால், ஓட்டு சாவடி அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். 


கூடுதல் டிகிரியை (ஓராண்டு பட்டப் படிப்பு), மூன்றாண்டு பட்டப் படிப்புக்கு இணையாக கருத முடியாது; பணி நியமனம், பதவி உயர்வுக்கு, இதை அங்கீகரிக்கக் கூடாது' என, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை ஐகோர்ட், "டிவிஷன் பெஞ்ச்' தடை விதித்தது.

மூன்றாண்டு பட்டப் படிப்புகள் தவிர, கூடுதல் டிகிரி என, ஓராண்டு பட்டப் படிப்பை, பல்கலைகழகங்கள் நடத்துகிறது. கூடுதல் டிகிரி படிப்பில் சேர வேண்டும் என்றால், பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். பணி நியமனம், பதவி உயர்வு பெறுவதற்காக, கூடுதல் டிகிரியை படிக்கின்றனர். இதையடுத்து,...


பள்ளிக்கல்வித்துறையில் "இரட்டை பட்டம் செல்லாது" என வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

பள்ளிக் கல்வித் துறையில் இரட்டை பட்டங்களுக்கு பதவி உயர்வு இல்லை என வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்ற பதவி உயர்வு கலந்தாய்வின் போது ஏற்கனவே பயின்ற பட்டத்தின் அடிப்படையில் ஒரு வருட காலத்தில் மற்றொரு பட்டபடிப்பை பயின்று அதற்கு பதவி உயர்வு வழங்குவதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது. 


Tuesday, April 9, 2013

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சட்ட பாடம் அறிமுகப்படுத்த திட்டம்

மத்திய இடைநிலை கல்வி வாரியமான - சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில், விருப்பப் பாடமாக, சட்டப்பாடம் அறிமுகப்படுத்தப்படுகிறது. 


மே மாதம் பள்ளிக்கு வர ஆசிரியர்களுக்கு உத்தரவு: மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முயற்சி

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்துவதற்காக, தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் சுழற்சி அடிப்படையில், மே மாதம் பள்ளிக்கு வரவேண்டும்" என, நாமக்கல் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


17 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தொடக்க கல்வியில் நேரடி நியமனம் மூலம் 350 பட்டதாரி ஆசிரியர்களும், பதவி உயர்வு மூலம் 399 பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர். சிறுபான்மை மொழி பட்டதாரி ஆசிரியர்கள் 21 பேர் நியமிக்கப்படுகிறார்கள். இடை நிலை ஆசிரியர்கள் 3ஆயிரத்து 433 பேர் நியமிக்கப்படுகிறார்கள்.


எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு ஏப்., 15 முதல் 19 ம் தேதி வரை, காலை 10 மணி முதல் 12 மணி வரை, நடக்க உள்ளது.

எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு ஏப்., 15 முதல் 19 ம் தேதி வரை, காலை 10 மணி முதல் 12 மணி வரை, நடக்க உள்ளது. இதற்கான அனுமதிச் சீட்டுகள் தேர்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதில் பெயர், பிறந்ததேதி, மையம், பதிவெண்ணை சரிபார்த்துக் கொள்ளவும்.


Monday, April 8, 2013

செஞ்சி மாணவர்களுக்கு மறுதேர்வு கிடையாது : தேர்வுத்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில், 10ம் வகுப்பு ஆங்கிலம் முதற்தாள் விடைத்தாள் மாயமான விவகாரத்தில், நீண்ட ஆலோசனைக்குப் பின், ""பாதிக்கப்பட்ட, 221 மாணவர்களுக்கு, மறு தேர்வு கிடையாது,'' என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா, அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.


SBI-Pre-Examination Training Call Letter.

Recruitment of Probationary Officer



Pre-Examination Training Call Letter.

Login


Registration No *:

(AND)
Date Of Birth *: (DD-MM-YY)

(OR)
Password *:
Frequently Asked Questions


91549

ஆங்கிலம் இரண்டாம் தாளில் மேட்ச் தி பாலோயிங் என்பதில் அச்சுப்பிழை ஏற்பட்டு இருந்தது. இந்த கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும்.

ஆங்கிலம் இரண்டாம் தாளில் மேட்ச் தி பாலோயிங் என்பதில் அச்சுப்பிழை ஏற்பட்டு இருந்தது. இந்த கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும் தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் பள்ளி தேர்வில் வினாத்தாள் குளறுபடி குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.இதற்கு பதில் அளித்து பள்ளி கல்வித் துறை அமைச்சர் வைகை செல்வன் இவ்வாறு பேசினார்.

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் கணக்கிடுவதில் பாரபட்சம் கூடாது - உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

9.8.1989 அன்று தமிழக அரசு ஓர் அரசாணையை வெளியிட்டது. 1.6.1988 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பணியிலிருந்து ஓய்வுபெறும் அரசு ஊழியர்களின் அகவிலைப் படியில் அதிகபட்சம் 13 % மட்டுமே ஓய்வூதியம் கணக்கிட எடுத்துக் கொள்ளப்படும் என்று அரசாணையில் கூறப்பட்டிருந்தது. எனினும் 1.1.1996ஆம் தேதியிலிருந்து ஓய்வு பெறுவோருக்கு இந்த ஓய்வூதியக் கணக்கீட்டு முறையில் மாற்றம் செய்யப்பட்டது. 


தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 12 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 12 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டப் பேரவையில் விதியெண் 110யின் கீழ், அறிக்கை ஒன்றை வாசித்தபோது, அவர் இதனை தெரிவித்தார். 


Saturday, April 6, 2013

பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், இம்மாதம், 22ம் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளன - அண்ணா பல்கலை

வரும் கல்வி ஆண்டில், பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், இம்மாதம், 22ம் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளன. இதற்காக, 2.5 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. 


200 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை, "நோட்டீஸ்'

போதிய ஆசிரியர் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத, 200 பொறியியல் கல்லூரிகளிடம் விளக்கம் கேட்டு, அண்ணா பல்கலை, "நோட்டீஸ்' அனுப்பி உள்ளது. பொறியியல் கல்லூரிகளில், போதிய மற்றும் தகுதியான ஆசிரியர்கள் உள்ளனரா, நல்ல உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளனவா என்பதை கண்டறிய, அண்ணா பல்கலை, ஒரு குழுவை....


ஆன்லைனில் "அப்ஜெக்டிவ் டைப்' தேர்வு : T.N.P.S.C.செயலர் தகவல்

""அப்ஜெக்டிவ் டைப்' தேர்வுகளை ஆன்லைனில் நடத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக,'' டி.என்.பி. எஸ்.சி., செயலர் விஜயகுமார் கூறினார். உதவி புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு "ஆன்லைன்' மூலம் இன்று நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு மையங்களை ஆய்வு செய்ய, அருப்புக்கோட்டை சவுடாம்பிகா இன்ஜி., கல்லூரி வந்த அவர் கூறியதாவது:


தொடக்க, நடுநிலைப்பள்ளி "செஸ்' விளையாட்டு : தயார் நிலையில் சதுரங்க பலகைகள்

தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில், சதுரங்கம் (செஸ்) பலகைகள் விரைவில் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. தமிழக அரசு மற்றும் உதவி பெறும் துவக்க, நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியரின் அறிவுத்திறன், சிந்தனைத்திறன் தூண்டும் வகையில் மாணவர்களுக்கு "செஸ்' விளையாட்டு கற்றுத்தர முடிவு செய்யப்பட்டு உள்ளது.


தொடக்க கல்வி இணை இயக்குனர் கருப்புசாமியிடம், தேர்வுத்துறை இணை இயக்குனர் பணி, கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது

தேர்வுத்துறை இணை இயக்குனர் ஆரோக்கியசாமி (மேல்நிலை கல்வி), கடந்த மாதம், 31ம் தேதி, ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து, கருப்புசாமியிடம், தேர்வுத்துறை இணை இயக்குனர் பணி, கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர், ஏற்கனவே, தேர்வுத்துறையில் பணி புரிந்தவர் என்பதால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில், 11 புதிய பி.எட்., கல்லூரிகளுக்கு, அனுமதி வழங்க, என்.சி.டி.இ., மறுப்பு

ஆசிரியர் கல்விக்கான தேசிய குழுவின், தென் மண்டல அலுவலக குழு கூட்டம், சமீபத்தில், பெங்களூருவில் நடந்தது. அதில், தமிழகம், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில், புதிய ஆசிரியர் கல்லூரிகள் துவங்குவதற்கு அனுமதி கேட்ட கோப்புகள் குறித்து பரிசீலனை செய்து, முடிவு எடுக்கப்பட்டது. 
 

Friday, April 5, 2013

மாயமான 10ம் வகுப்பு விடைத்தாள்: மறுதேர்வு நடக்குமா?

பள்ளி தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள் போக்குவரத்து முறை நவீனப்படுத்தப்படும்" என, கல்வி அமைச்சர் துறை அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்தார். சட்டசபையில், பள்ளி தேர்வு வினாத்தாள் வெளியானது மற்றும் விடைத்தாள் காணாமல் போனது குறித்து, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது, எம்.எல்.ஏ.,க்கள் பேசியதாவது: 


அரசு கல்லூரி உட்பட தமிழகத்தில் 15 கல்லூரிகளுக்கு ஏ-கிரேடு

தமிழகத்தில் உள்ள, 15 கல்லூரிகளுக்கு, "ஏ" கிரேடு மற்றும், 30 கல்லூரிகளுக்கு, "பி" கிரேடு அந்தஸ்துகளை, தேசிய தர நிர்ணய குழு (நாக்) வழங்கியுள்ளது. இதில் கோவை அரசு கலைக் கல்லூரியும் இடம் பெற்றுள்ளது. 


பத்தாம் வகுப்பு விடைத் தாள்கள் மாயம் மற்றும் சேதமான விவகாரங்களில் பள்ளிக் கல்வித்துறை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறையில் பல முக்கிய இயக்குனர்கள் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பிறகு மாற்றப்படலாம்

பள்ளிக் கல்வித் துறையில், பள்ளிக்கல்வி இயக்குனர், அரசு தேர்வுத்துறை இயக்குனர், தொடக்க கல்வி இயக்குனர் உள்ளிட்ட‌ 8 இயக்குனர் பணியிடங்களும், 20 இணை இயக்குனர் பணியிடங்களும் உள்ளன


Thursday, April 4, 2013

திட்டமிட்டபடி செமஸ்டர் தேர்வு: மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது

கல்லூரிகள் மூடப்பட்டதால், செமஸ்டர் தேர்வுகள் தள்ளிப் போகாது. திட்டமிட்டபடி, தேர்வுகள் நடத்தப்படும்" என, உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கூறினார்


கல்லூரியில் கட்டாய நன்கொடை வசூலித்தால் கடும் நடவடிக்கை

கல்லூரிகளில், கட்டாய நன்கொடையை வசூலைத் தடுக்க, 1992ம் ஆண்டே சட்டம் கொண்டு வந்தோம். இதன்படி, மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. கட்டாய நன்கொடை வசூல் குறித்து, இக்குழுவிடம் புகார் செய்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.



தமிழகத்தில், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில், வரும் கல்வியாண்டு, புதிதாக, 398 பாடப் பிரிவுகள்

தமிழகத்திலுள்ள, 51 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில், 398 பாடப் பிரிவுகள், வரும் கல்வியாண்டில் துவக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பாடப் பிரிவுகளுக்காக, 827 உதவி பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, காலியாக உள்ள, 530 பேராசிரியர் பணியிடங்களை நிரப்பவும், ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


வி.ஏ.ஒ. தேர்வு : 5ம் கட்ட கவுன்சிலிங் தேதி அறிவிப்பு

click here download to call letter

இதுகுறித்த செய்தி குறிப்பு: வி.ஏ.ஒ. தேர்வுக்கு, தேர்வு செய்யப்பட்ட, 1,781 விண்ணப்பதாரர்களுக்கு, நான்கு கட்ட கவுன்சிலிங் மூலம் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 89 காலி பணியிடங்களை, நிரப்புவதற்கான, ஐந்தாம் கட்ட கவுன்சிலிங் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி, வரும், 16ம் தேதி, காலை, 8:30 மணி முதல், டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடக்க உள்ளது. கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டுள்ள, 


பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு: ஏப்., 10ல் துவக்கம்

தமிழகத்தில், இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி, பள்ளி செல்லா இடைநிற்றல் குழந்தைகளை கண்டறிய, வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி, ஏப்., 10ல் துவங்குகிறது.வரும் கல்வியாண்டில், ஆறு வயது முதல், 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளையும், 


தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பி.எட்., படிப்பிற்கான விண்ணப்பங்கள், வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் கீழ், பி.எட்., படிப்பு வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள், இன்று (5ம் தேதி) துவங்கி, ஜூலை, 26ம் தேதி வரை வழங்கப்படுகிறது.விண்ணப்பங்களை, சென்னை அன்னை வேளாங்கண்ணி கலை கல்லூரி, கோவை எஸ்.என்.ஆர்.,


10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15ம் தேதி துவங்கி, 30க்குள் முடிகிறது

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள், 66 மையங்களில், வரும், 15ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரை நடக்கும்' என, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த மாதம், 27ம் தேதி, பத்தாம் வகுப்பு தேர்வுகள் துவங்கின. 3,012 மையங்களில், 10.68 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வு எழுதி வருகின்றனர்.


Wednesday, April 3, 2013

DEPARTMENTAL EXAMINATIONS-Online Registration

 


Current Online Registration for...
(Click to Apply Online)
Notification Current Status


 CLICK HERE ONLINE REGISTRATION Departmental Examinations - May 2013



Tamil  |  English



Online up to
15 Apr 2013

ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள்; ஆசிரியை பணி வழங்க மறுத்தது சரி: உயர் நீதிமன்றம்

ஒரே நேரத்தில், இரண்டு வெவ்வேறு பட்டங்களைப் படித்த பெண்ணுக்கு, முதுகலை ஆசிரியர் பணி வழங்க மறுத்தது சரி தான்" என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. 


குரூப் 4ல் தேர்வானோர் கல்வித்துறை பணியில் சேர ஆர்வம்

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 ல் தேர்வானவர்கள் மற்ற துறைகளைவிட, கல்வித்துறை அலுவலக பணியில் சேர ஆர்வம் காட்டுகின்றனர்.சமீபத்தில் நடந்த குரூப் 4 போட்டி தேர்வில், பி.எட்.,ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் ஏராளமானோர் தேர்வு பெற்றனர். 


தேர்வுத்துறை இணை இயக்குனர் பணியிடம் காலி

தேர்வுத்துறை இணை இயக்குனர் (மேல்நிலைக்கல்வி) பணியிடத்தை நிரப்பாமல், வழக்கம்போல், கூடுதல் பொறுப்பில், பணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.தேர்வுத்துறை இணை இயக்குனர் ஆரோக்கியசாமி, கடந்த, 31ம் தேதி ஓய்வு பெற்றார்.

அரசு ஊழியர்கள் பணிப்பதிவேடுகளை மின்னணு குறிப்புகளாக மாற்ற உத்தரவு


சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கொள்கை விளக்க குறிப்பில் இடம் பெற்றுள்ள விவரம் வருமாறு: பணியாளர்கள் பெற்ற சலுகைகள் மற்றும் பயன்களை கண்காணிக்கும் வகையில் அனைத்து பணியாளர்களின் பணிப்பதிவேடுகளில்...



10ம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் : 221 விடைத்தாள்கள் காணவில்லை - நாளிதழ் செய்தி

விழுப்புரம் அருகே 221 மாணவர்களின் 10ம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் விடைத்தாள்களைக் காணவில்லை.10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், நடந்து முடிந்த ஆங்கிலம் முதல் தாள் தேர்வில், சத்தியமங்கலத்தில் ஒரு பள்ளியில்

அகவிலைப்படி உயர்வு -D.A : மத்திய அரசு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 72 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் 50க்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் பென்சன்தாரர்களும் பயன்பெற உள்ளனர். இந்த அகவிலைப்படி உயர்விற்கு மத்திய அமைச்சகம் இன்று அனுமதி அளித்துள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 2013 ஜனவரி 1ம் தேதியிட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 இயற்பியல் தேர்வு: 62வது வினாவுக்கு முழு மதிபெண்

பிளஸ் 2 இயற்பியல் தேர்வில், மாணவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்திய, வினா எண், 62ற்கு, முழு மதிப்பெண் வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில், பிளஸ் 2 பொது தேர்வில், இயற்பியல் தேர்வு மார்ச், 11ம் தேதி நடந்தது.