தமிழக கூட்டுறவுத்துறையில் காலியாக உள்ள, 3,589 உதவியாளர் பணியிடங்களை, போட்டி தேர்வு மூலம், பட்டதாரிகளை, நேரடியாக நியமிக்க, கூட்டுறவு ஆள்சேர்ப்பு மையம் அறிவிப்பு செய்தது. இதற்கான, இலவச விண்ணப்ப வினியோகம், கடந்த, நவ., 5ல், துவங்கி, 23ம் தேதி வரை நடந்தது. தமிழகம் முழுவதும், 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர், உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்திருந்தனர். இதில், பல்வேறு பிழை மற்றும் தவறுகள் காரணமாக, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டன. தகுதி உடைய, 2 லட்சத்து, 80 ஆயிரத்து, 974 பேர், டிச., 9ல் போட்டித்தேர்வை எழுதினர். தமிழகத்தில், 650க்கும் மேற்பட்ட மையங்களில், இத்தேர்வு நடத்தப்பட்டது. அதே நேரத்தில், உதவியாளர் பணிக்கான ஆளெடுப்பு அறிவிப்புக்கு, கூட்டுறவுத்துறையின் பல்வேறு சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. நேரடி நியமனத்தால், ரேஷன் கடை விற்பனையாளர் மற்றும் விற்பனை உதவியாளருக்கு பதவி உயர்வு கேள்விகுறியாகிவிடும் என, ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதோடு, ஓராண்டு கூட்டுறவு பட்டய பயிற்சி முடித்தவர்களுக்கும், கூட்டுறவு பணி எட்டாக்கனியாகும் நிலை உருவாகி விட்டதாக புகார் எழுந்தது. இதையெல்லாம் பொருட்படுத்தாமல், திட்டமிட்டப்படி, உதவியாளர் பணிக்கான போட்டித்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, கடந்த, 20ம் தேதி முடிவு அறிவிக்கப்பட்டது. அதில், 7,178 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதாவது, காலிப்பணியிடமான, 3,589 இடத்துக்கு, 1:2 என்ற அளவில், தேர்வு செய்து, வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கூட்டுறவுத்துறையின் பல்வேறு சங்கங்கள் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில், "ரிட்' மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "உதவியாளர்களை நேரடியாக நியமனம் செய்வதன் மூலம், சேல்ஸ்மேன் மற்றும் பேக்கர்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு தடைப்படுகிறது. அதைபற்றி பரிசீலனை செய்யாமல், ஆள்சேர்ப்பு மையம் மூலம், நேரடியாக தேர்வு செய்வதால், எங்களுடைய அடிப்படை உரிமை பாதிக்கப்படுகிறது' என குறிப்பிடப்பட்டிருந்தது. சங்கங்கள் சார்பில், வழக்கறிஞர் பிரகாஷ் ஆஜராகி, இம்மனுவை தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன், உதவியாளர் நேரடி நியமனத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், "இது தொடர்பாக, நான்கு வாரத்துக்குள் பதிலளிக்கும்படி கூட்டுறவு துறை செயலர் நிர்மலா, பதிவாளர் அண்ணாமலை ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Saturday, December 29, 2012
கூட்டுறவு உதவியாளர் பணி நியமனத்துக்கு தடை: 4 வாரத்துக்குள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
தமிழக கூட்டுறவு துறையில் உதவியாளர் பணிக்கான நேரடி நியமனத்துக்கு, தடை விதித்தும், இது தொடர்பாக, நான்கு வாரத்துக்குள் பதிலளிக்க அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக கூட்டுறவுத்துறையில் காலியாக உள்ள, 3,589 உதவியாளர் பணியிடங்களை, போட்டி தேர்வு மூலம், பட்டதாரிகளை, நேரடியாக நியமிக்க, கூட்டுறவு ஆள்சேர்ப்பு மையம் அறிவிப்பு செய்தது. இதற்கான, இலவச விண்ணப்ப வினியோகம், கடந்த, நவ., 5ல், துவங்கி, 23ம் தேதி வரை நடந்தது. தமிழகம் முழுவதும், 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர், உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்திருந்தனர். இதில், பல்வேறு பிழை மற்றும் தவறுகள் காரணமாக, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டன. தகுதி உடைய, 2 லட்சத்து, 80 ஆயிரத்து, 974 பேர், டிச., 9ல் போட்டித்தேர்வை எழுதினர். தமிழகத்தில், 650க்கும் மேற்பட்ட மையங்களில், இத்தேர்வு நடத்தப்பட்டது. அதே நேரத்தில், உதவியாளர் பணிக்கான ஆளெடுப்பு அறிவிப்புக்கு, கூட்டுறவுத்துறையின் பல்வேறு சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. நேரடி நியமனத்தால், ரேஷன் கடை விற்பனையாளர் மற்றும் விற்பனை உதவியாளருக்கு பதவி உயர்வு கேள்விகுறியாகிவிடும் என, ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதோடு, ஓராண்டு கூட்டுறவு பட்டய பயிற்சி முடித்தவர்களுக்கும், கூட்டுறவு பணி எட்டாக்கனியாகும் நிலை உருவாகி விட்டதாக புகார் எழுந்தது. இதையெல்லாம் பொருட்படுத்தாமல், திட்டமிட்டப்படி, உதவியாளர் பணிக்கான போட்டித்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, கடந்த, 20ம் தேதி முடிவு அறிவிக்கப்பட்டது. அதில், 7,178 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதாவது, காலிப்பணியிடமான, 3,589 இடத்துக்கு, 1:2 என்ற அளவில், தேர்வு செய்து, வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கூட்டுறவுத்துறையின் பல்வேறு சங்கங்கள் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில், "ரிட்' மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "உதவியாளர்களை நேரடியாக நியமனம் செய்வதன் மூலம், சேல்ஸ்மேன் மற்றும் பேக்கர்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு தடைப்படுகிறது. அதைபற்றி பரிசீலனை செய்யாமல், ஆள்சேர்ப்பு மையம் மூலம், நேரடியாக தேர்வு செய்வதால், எங்களுடைய அடிப்படை உரிமை பாதிக்கப்படுகிறது' என குறிப்பிடப்பட்டிருந்தது. சங்கங்கள் சார்பில், வழக்கறிஞர் பிரகாஷ் ஆஜராகி, இம்மனுவை தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன், உதவியாளர் நேரடி நியமனத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், "இது தொடர்பாக, நான்கு வாரத்துக்குள் பதிலளிக்கும்படி கூட்டுறவு துறை செயலர் நிர்மலா, பதிவாளர் அண்ணாமலை ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
தமிழக கூட்டுறவுத்துறையில் காலியாக உள்ள, 3,589 உதவியாளர் பணியிடங்களை, போட்டி தேர்வு மூலம், பட்டதாரிகளை, நேரடியாக நியமிக்க, கூட்டுறவு ஆள்சேர்ப்பு மையம் அறிவிப்பு செய்தது. இதற்கான, இலவச விண்ணப்ப வினியோகம், கடந்த, நவ., 5ல், துவங்கி, 23ம் தேதி வரை நடந்தது. தமிழகம் முழுவதும், 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர், உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்திருந்தனர். இதில், பல்வேறு பிழை மற்றும் தவறுகள் காரணமாக, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டன. தகுதி உடைய, 2 லட்சத்து, 80 ஆயிரத்து, 974 பேர், டிச., 9ல் போட்டித்தேர்வை எழுதினர். தமிழகத்தில், 650க்கும் மேற்பட்ட மையங்களில், இத்தேர்வு நடத்தப்பட்டது. அதே நேரத்தில், உதவியாளர் பணிக்கான ஆளெடுப்பு அறிவிப்புக்கு, கூட்டுறவுத்துறையின் பல்வேறு சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. நேரடி நியமனத்தால், ரேஷன் கடை விற்பனையாளர் மற்றும் விற்பனை உதவியாளருக்கு பதவி உயர்வு கேள்விகுறியாகிவிடும் என, ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதோடு, ஓராண்டு கூட்டுறவு பட்டய பயிற்சி முடித்தவர்களுக்கும், கூட்டுறவு பணி எட்டாக்கனியாகும் நிலை உருவாகி விட்டதாக புகார் எழுந்தது. இதையெல்லாம் பொருட்படுத்தாமல், திட்டமிட்டப்படி, உதவியாளர் பணிக்கான போட்டித்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, கடந்த, 20ம் தேதி முடிவு அறிவிக்கப்பட்டது. அதில், 7,178 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதாவது, காலிப்பணியிடமான, 3,589 இடத்துக்கு, 1:2 என்ற அளவில், தேர்வு செய்து, வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கூட்டுறவுத்துறையின் பல்வேறு சங்கங்கள் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில், "ரிட்' மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "உதவியாளர்களை நேரடியாக நியமனம் செய்வதன் மூலம், சேல்ஸ்மேன் மற்றும் பேக்கர்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு தடைப்படுகிறது. அதைபற்றி பரிசீலனை செய்யாமல், ஆள்சேர்ப்பு மையம் மூலம், நேரடியாக தேர்வு செய்வதால், எங்களுடைய அடிப்படை உரிமை பாதிக்கப்படுகிறது' என குறிப்பிடப்பட்டிருந்தது. சங்கங்கள் சார்பில், வழக்கறிஞர் பிரகாஷ் ஆஜராகி, இம்மனுவை தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன், உதவியாளர் நேரடி நியமனத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், "இது தொடர்பாக, நான்கு வாரத்துக்குள் பதிலளிக்கும்படி கூட்டுறவு துறை செயலர் நிர்மலா, பதிவாளர் அண்ணாமலை ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment