Pages

Thursday, January 31, 2013

தற்போதுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டத்தை மாற்றி, அடுத்தாண்டு முதல் புதிய பாடதிட்டத்தை அறிமுகப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான மாதிரி பாடதிட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வியாளர்களுடன் கருத்துகள் கேட்க கூட்டம் நடத்தப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, கோவை பெரிய கடைவீதி புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் கூட்டம் நடைபெற்றது. இயற்பியல், வேதியியல்,


பள்ளி கல்வித்துறையில் இளநிலை உதவியாளர்கள் நியமனம்: பிப்ரவரி 2 (நாளை )ல் கலந்தாய்வு

பள்ளி கல்வித்துறையில், 554 இளநிலை உதவியாளர்களை, பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, நாளை, அந்தந்த மாவட்ட தலை நகரங்களில் நடக்கின்றன.கடந்த, 2007-08 முதல், 12-13ம் ஆண்டு வரை, குரூப்-4 நிலையில், பள்ளி கல்வித்துறைக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்ட, 554 இளநிலை

தகுதியற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க முடியாது

லட்சக்கணக்கானோர் படித்து விட்டு, வேலையின்றி காத்திருக்கின்றனர். இந்நிலையில், தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய, தகுதித் தேர்வு நடத்த வேண்டியுள்ளது. தகுதியற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க முடியாது" என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.


பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை மே மாதம்தான் நடத்த வேண்டும் -தமிழக அரசு உத்தரவு

பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை மே மா ம்தான் நடத்த வேண்டும் என் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது .சில தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையை முன்னதாகவே முடிவிடுவதால் ஏற்ப்படும் புகாரை தொடர்ந்து இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் - 5 பள்ளிகளை மூட முடிவு: 10 பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி

பத்திற்கும் குறைவான மாணவர்களே உள்ளதால், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியத்தில், ஐந்து ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 10 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை ஆரம்பிக்கவும், கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 


குரூப்-2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில் காலியிடங்கள் நிரப்புவதற்கான தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. இந்த ஆண்டு 27 அரசு துறைகளில் 35 பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களில், 10 ஆயிரத்து, 105 இடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்த உள்ளது. 


Wednesday, January 30, 2013

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதி, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவியரின் முடிவுகள், வியாழக்கிழமை, தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது

தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா வெளியிட்ட அறிவிப்பு:கடந்த ஆண்டு, அக்டோபரில் நடந்த தனித்தேர்வை எழுதி, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த தேர்வர்களின் முடிவுகள், www.dge.tn.nic.in  என்ற இணையதளத்தில், வியாழன் வெளியிடப்படும். மதிப்பெண்களில் மாற்றம் உள்ள தேர்வர்களுக்கு, புதிய மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்குவது குறித்து, விரைவில், தபால் வழியாக தெரிவிக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வரும் கல்வி ஆண்டில் REGULAR பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான பாடத்திட்டத்தை மாற்ற தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் முடிவுசெய்துள்ளது.

தமிழ்நாட்டில் 600–க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் சென்னையில் உள்ளதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படுகின்றன. முன்பு ஒவ்வொரு கல்வியியல் கல்லூரியும் அருகில் உள்ள....


பள்ளி ஆசிரியர்களுக்கு ஜனவரியில் 22 நாள் தொடர் பயிற்சி

அரசு விடுமுறை, பயிற்சி என, ஜனவரி மாதம் 22 நாட்கள், ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை.பள்ளிகளில் பருவமுறை கல்வி திட்டத்தில், பாடம் கற்பிக்கின்றனர். மூன்றாம் பருவ வகுப்புகள், ஜன., 2 ல் துவங்கின. ஜனவரியில்,


Dept. of Treasuries and Accounts - Download Payroll 9.0

Government of TamilNadu

Department Of Treasures and Accounts

PayRoll Software

New Version 9

Click Here & download

Tuesday, January 29, 2013

புதிய கட்டண நிர்ணயம் செய்வதற்காக தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 536 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது

தனியார் பள்ளிகளிடம் பிப்ரவரி 15-ம் தேதிக்குப் பிறகு விசாரணை தொடங்கும் என்று குழு வட்டாரங்கள் தெரிவித்தன. நாளொன்றுக்கு 40 பள்ளிகள் வீதம் நேரில் விசாரணை நடத்தி, கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளதாகவும்  தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு


பிளஸ் 1 தேர்வு தேதி அறிவிப்பு

பிளஸ் 1 தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இத்தேர்வுகள் வரும் மார்ச் 5ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும். மார்ச் 5ம் தேதி மொழித்தாள் ஒன்று, 8ம் தேதி மொழித்தாள் இரண்டு, 12ம் தேதி ஆங்கிலம் முதல் தாள், 13ம் தேதி ஆங்கிலம் 2ம் தாள் ஆகிய தேர்வுகள் நடக்கும். 19ம் தேதி இயற்பியல் மற்றும் பொருளியல் தேர்வுகளும், 20ம் தேதி கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வும், 22ம் தேதி வேதியியல் மற்றும் கணக்கு பதிவியலும், 26ம் தேதி கணிதம் மற்றும் வணிக கணிதமும், 28ம் தேதி உயிரியல் மற்றும் வணிகவியல் ஆகிய தேர்வுகளும் நடக்கும் என தேர்வு துறை இயக்ககம் தெரிவித்துள்ளது. இந்த தேர்வுகள் அனைத்தும் மதியம் 1.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த துறைகளில் எவ்வளவு காலி இடங்கள்? என்ற ஆண்டு தேர்வு பட்டியலை TNPSC நாளை (புதன்கிழமை)வெளியிடுகிறது.

இதில் ஏறத்தாழ 20 ஆயிரம் காலி இடங்கள்அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டித்தேர்வுகள் தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் எழுத்தர் பணி தொடங்கி துணை கலெக்டர் பதவி வரையிலான பணி இடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலமாக நிரப்பப்படுகின்றன..
 

Monday, January 28, 2013

முதுகலை ஆசிரியர் தேர்வில் வரலாறு, வணிகவியலில் தமிழ்வழி ஒதுக்கீட்டை நிரப்ப TRB நடவடிக்கை

முதுகலை ஆசிரியர் தேர்வில், வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களில், தமிழ் வழி இடஒதுக்கீட்டை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நடவடிக்கை எடுத்துள்ளது. 


தமிழகத்தை சேர்ந்த 22 ஆசிரியர்கள் தேசிய விருதுக்கு தேர்வு

தமிழகத்தைச் சேர்ந்த சிறந்த ஆசிரியர்கள், 22 பேர், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு வரும் செப்., 5ம் தேதி, டில்லியில் நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவர் விருது வழங்கி கவுரவிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஊஞ்சல் மூலம் மின்சாரம் தயாரிக்கும் கருவி: அரசு பள்ளி ஆசிரியர் அசத்தல்

சிறுவர்கள் விளையாடும் ஊஞ்சலில் இருந்து, மின்சாரம் தயாரிக்கும் கருவியை தியாகதுருகம் அருகே உள்ள, தொடக்கப்பள்ளி ஆசிரியர் உருவாக்கியுள்ளார்.விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் ஒன்றியம் பல்லகச்சேரி உயர்நிலைப்பள்ளியில், பட்டதாரி ஆசிரியர் வேலு, 38 


ஒரே நாளில் 10ம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் :அரசு வெளியிட்டுள்ள தேர்வு அட்டவணையில் குளறுபடியா?

ஒரே நாளில் 10ம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் :அரசு வெளியிட்டுள்ள தேர்வு அட்டவணையில் குழப்பம் .27.03.2013 அன்று பனிரெண்டாம் வகுப்பிற்கு Political science ,Nursing,Statistics ஆகிய தேர்வுகள்


Saturday, January 26, 2013

அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட மூவர் குழு அறிக்கையைவெளியிட வலியுறுத்தல்

அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட மூவர் குழு அறிக்கையை வெளியிட, தமிழக அரசு முன்வர வேண்டும்' என, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலர் மீனாட்சிசுந்தரம் வலியுறுத்தி உள்ளார்.


8 ஆண்டுகளாக விடுப்பு இல்லை: அரசு பள்ளி ஆசிரியை சாதனை

கடந்த 8 ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு செல்வதோடு, தன் துறையில் சிறந்த தேர்ச்சி 
விகிதத்தையும் தக்க வைத்து, அசத்தலான சாதனை படைத்து வருகிறார்.


அனைத்துக் கல்லூரிகளிலும், ஒரே பாடத் திட்டத்தை அமல் செய்யும் முறை, வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது

இதற்கான, பணிகளை, பல்கலைக் கழக பாடத் திட்டக் குழுக்கள் துவங்கியுள்ளன. தமிழகத்தில், சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட, 10 பல்கலைக் கழகங்களில், பாடத் திட்ட வளர்ச்சி குழு அமைக்கப்பட உள்ளது.


IGNOU :-Students now can view/download IGNOU Study Material free of cost from the University website



To View/Download IGNOU Study Material first register at http://www.egyankosh.ac.in/register .Select registration type and press <GO Key> and fill in the Registration Form. You will receive a mail containing a special URL. When you visit this URL, you will need to fill in some simple information. After that, you’ll be ready to log into eGyanKosh. Visit http://www.egyankosh.ac.in/password-login to login and access course material available on eGyanKosh.
 The following steps may be used to view/download IGNOU study material.
 a)  At search repository window (Top Left Corner) type Course Code or Course name or relevant Keyword for the content you are searching for and press <enter Key>

பட்டதாரி ஆசிரியர்களுக்கான எம்.பில் / பி.எச்டி கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதியம் அரசாணை எண்.1024 வெளியிட்ட நாள். 09.12.1993 முதல் வழங்கப்படும்

பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் ஊக்க ஊதியம் பெற புதிதாக எம்.பில் / பி.எச்டி போன்ற உயர்க்கல்வித் தகுதிகள் சேர்த்து ஊக்க ஊதியம் வழங்க அரசாணை எண்.18 உயர்க்கல்வித் துறை நாள்.18.01.2013 மூலம் தமிழக அரசு உத்தரவிட்டது.


புதிதாக நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிப்ரவரி 1 முதல் பயிற்சி

தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 29 ஆயிரத்து 176 பட்டதாரி ஆசிரியர்கள் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில் முதற்கட்டமாக கடந்த 19 மற்றும் 20ம் தேதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் பொதுவான பயிற்சி நடந்தது. தற்போது 2ம் கட்டமாக பாட வாரியாக அனைத்து மாவட்டங்களிலும்...


மாணவ, மாணவியர் விவரங்களை இணையத்தில் பதிய மேலும் மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிப்பு

மாணவ, மாணவியரின் விவரங்களை, இணையதளத்தில் பதிவு செய்வதற்கான கால அவகாசம், 31ம் தேதியுடன் முடியும் நிலையில், மேலும் இரு வாரங்களுக்கு, அவகாசத்தை நீட்டிப்பு செய்ய, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.


Thursday, January 24, 2013

REGULAR பி.எட் ., மற்றும் எம்.எட்., துணைத்தேர்வு முடிவு வெளியீடு


 தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கட்டுப்பாட்டில் உள்ள, கல்வியியல் கல்லூரிகளுக்கான, பி.எட்., மற்றும் எம்.எட்., துணைத் தேர்வு, கடந்த டிசம்பரில் நடந்தது. இத்தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று, வெளியிடப்படுகிறது. 



SSA -தமிழகம் முழுவதும் 714 தொடக்கப் பள்ளிகள் மற்றும் 44 உண்டு உறைவிடப் பள்ளிகள் புதிதாக தொடங்கவும், 312 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும் இலக்கு நிர்ணயித்துள்ளது.


தொடக்கக் கல்வித்துறையின் சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் 714 தொடக்கப் பள்ளிகள் மற்றும் 44 உண்டு உறைவிடப் பள்ளிகள் புதிதாக தொடங்கவும், 312 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும் எஸ்எஸ்ஏ இலக்கு நிர்ணயித்துள்ளது.


அரசு நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 250 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு பணியிடங்கள் ஆகியவை, விரைவில் நிரப்பப்படும்

அரசு நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 250 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு பணியிடங்கள் ஆகியவை, விரைவில் நிரப்பப்படும்' என, தொடக்க கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


BBE-என்ற பட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் அங்கீகரித்துள்ளது. இதன் மூலம் பணி வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு விரைவில் ஆசிரியர் பணி கிடைக்க உள்ளது.

தமிழகம் முழுவதும் 2012 மே மாதம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்தியது.  இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குஆகஸ்ட் மாதம் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்தது.


காமராஜர் பல்கலைக்கழகம், 2 வருட தொலைநிலைக் கல்வி முறையில், பி.எட்., படிப்பை, 2013-15 கல்வியாண்டில், வழங்குகிறது

காமராஜர் பல்கலைக்கழகம், 2 வருட தொலைநிலைக் கல்வி முறையில், பி.எட்., படிப்பை, 2013-15 கல்வியாண்டில், வழங்குகிறது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்படிப்பானது, NCTE(National Council for Teacher Education) மற்றும் DEC(Distance Education Council) ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டது. இப்படிப்பில் சேர்வதற்கான தகுதிகள் பின்வருமாறு


Wednesday, January 23, 2013

கட்டாயக்கல்வி சட்டத்திற்கு எதிராக R.T.E (ஆர்.டி.இ.,), அரசு உதவிபெறும் பள்ளிகளில், பணியில் சேர்ந்த இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை, "டிஸ்மிஸ்' செய்யும் முடிவை, கல்வித்துறை, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

ஒரே நேரத்தில், 2,000 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்தால், ஒட்டு மொத்த ஆசிரியர்களின் அதிருப்தியை சம்பாதிக்க நேரிடும் என்பதால், இம்முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க, கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்: வரைவு பாடத்திட்டம் பிப்., 13ல் வெளியீடு

அடுத்த கல்வி ஆண்டில், பிளஸ் 1 வகுப்பிற்கு, புதிய பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், தற்காலிக வரைவு பாடத் திட்டங்கள், பிப்., 13ம் தேதி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

Sunday, January 20, 2013

பஞ்சாப் அரசு, கல்வித்துறையில் பணியாற்றிய 206 பணியாளர்களை டிஸ்மிஸ்

பஞ்சாப் அரசு, கல்வித்துறையில் பணியாற்றிய 206 பணியாளர்களை டிஸ்மிஸ் செய்தது. கடந்த சில ஆண்டுகளாக ‌பணிக்கு வராமலிருந்த 206 பேரை டிஸ்மிஸ் செய்து உத்தவிட்டது.பணிக்கு வராமல் ஏமாற்றிய பணியாளர்கள் குறித்து அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சிக்கந்தர் சிங் மலுகா, மாநில பள்ளி கல்வி இயக்குனர் உடன் கலந்து ஆலோசனை செய்து இறுதியில் இந்த முடிவு எடுக்கப்பட்டது

Saturday, January 19, 2013

தாழ்த்தப்பட்டோராக இருந்து முஸ்லிமாக மதம் மாறியவர்களை பிற்பட்ட வகுப்பினராக (பி.சி. முஸ்லிம்) கருத வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது

.ராமநாதபுரம் மாவட்டம், கூரியூர் உமர்நகர் முஸ்லிம் ஜமாஅத் செயலர் எம்.கே. முஜிபுர் ரகுமான் தாக்கல் செய்த மனுவை
விசாரித்த நீதிபதிகள் கே.என்.பாஷா, கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்தஉத்தரவைப் பிறப்பித்தது.

2012 - 13ஆம் கல்வியாண்டில் புதிதாக நியமிக்கப்பட்ட தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு நுழைநிலைப் பயிற்சி (Induction Training) 21.1.13 முதல் 23.1.2013 வரை உண்டு உறைவிடப் பயிற்சியாக நடத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவிட்டுள்ளது.

2012 - 13ஆம் கல்வியாண்டில் புதிதாக நியமிக்கப்பட்ட தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு நுழைநிலைப் பயிற்சி (Induction Training) 21.1.13 முதல் 23.1.2013 வரை உண்டு உறைவிடப் பயிற்சியாக நடத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 8000 இடைநிலை ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வளர் இளம்பருவ மாணவர்களுக்கு 34 ஆலோசனை மையங்கள் திறக்க முதல்வர்

வளர் இளம்பருவ மாணவர்கள், பல்வேறு காரணங்களால் மன பாதிப்புக்கு ஆளாவதைத் தடுக்க, மாநிலம் முழுவதும் மொத்தம் 34 ஆலோசனை மையங்களை ஏற்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக 2 கோடியே 51 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Friday, January 18, 2013

ஜனவரி 21 முதல் பள்ளி மாணவர்களுக்கு கலை, இலக்கியப் போட்டிகள்

பள்ளி மாணவ, மாணவியருக்கு இடையே கலை, இலக்கியப் போட்டிகளை ஜனவரி 21 முதல் நடத்த வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளிகள், ஒன்றிய, மாவட்ட அளவிலும் இந்தப் போட்டிகளை அவர்கள் நடத்த வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வு: இந்த மாத இறுதிக்குள் முடிவு வெளியீடு

மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பாரதியார் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியர்


"எழுத்தறிவித்தவன் இறைவன்' என்பதற்கு, எடுத்துக்காட்டாய் திகழ்கிறார், மதுரை ஞானஒளிவுபுரத்தை சேர்ந்த, தலைமை ஆசிரியர் கில்பர்ட், 47. இவர், அய்யப்பன்நாயக்கன்பட்டி, கள்ளர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்.


Thursday, January 17, 2013

மாணவர்களுக்கான அடையாள எண்!

நாட்டில் தற்போது ஆதார் மற்றும் தேசிய அடையாள அட்டை என இருவகையான தனிநபர் அடையாள அட்டை வழங்கும் செயல்படுத்தப்படுகிறது.

ஊதிய குறைதிர்க்கும் பிரிவு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கவில்லை


 அரசு கடித  எண் ;69278/ஊ.கு.தீ.பி./  நாள் ;09.01.2013. 



                          



Wednesday, January 16, 2013

எஸ்.எஸ்.ஏ., கலந்தாய்வு கூட்டத்தில்: 38 ஆயிரம் ஆசிரியர்கள் ஆப்சென்ட்

தமிழகத்தில், பள்ளி வேலை நாளில், தற்செயல் விடுப்பு (சி.எல்.,) எடுத்து போராட்டத்தில் பங்கேற்ற 38 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களின் பெயர் பட்டியலை, தொடக்க கல்வி துறை தயார் செய்துள்ளது.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ரேங்க் பட்டியல் ஓரிரு நாளில் வெளியீடு

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ரேங்க் பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

Monday, January 14, 2013

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் அடுத்து நடைபெற உள்ள நியமனங்களின் விவரம்


இடைநிலை ஆசிரியர்கள் - 2,210

பட்டதாரி ஆசிரியர்கள் - 12,532

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் - 2,600

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
உதவிப் பேராசிரியர்கள் - 1,063

சிறப்பாசிரியர்கள் - 841

அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன்(2013) மாதத்தில் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள்

அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூன் மாதம்தான் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் ஓரிரு வாரங்களில் விநியோகிக்கப்பட உள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் ஓரிரு வாரங்களில் விநியோகிக்கப்பட உள்ளது. இந்தச் சான்றிதழ்கள் இ-பார்கோடு உள்ளிட்ட 10 விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Friday, January 11, 2013

பள்ளிக்கூட பணிகளை கவனிக்காத, தலைமை ஆசிரியர்களுக்கு, ஆறு முக்கிய விதிமுறைகளை விதித்து, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

"பிற பணி' என்ற பெயரில், பள்ளிக்கூட பணிகளை கவனிக்காத, தலைமை ஆசிரியர்களுக்கு, ஆறு முக்கிய விதிமுறைகளை விதித்து, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

1 . பள்ளி வேலை நாட்களில் தலைமை ஆசிரியர்கள், பிற பணிக்காக வெளியூர் செல்ல, சி.இ.ஓ.,வின் முன்அனுமதியை பெற வேண்டும்.


2. பிற பணி விவரங்களை, பள்ளியில் பராமரிக்கப்படும் நடமாடும் பதிவேட்டில் பதிய வேண்டும்
.

3. இதே விவரங்களை, சி.இ.ஓ., அலுவலக நடமாடும் பதிவேட்டிலும் இடம் பெற செய்ய வேண்டும்.

4. சி.இ.ஓ.,க்கள் தங்களது மாவட்டத்தில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களின், பிற பணிகளை அறிந்து, தேவைப்படும் பட்சத்தில், உயரதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

5. தவிர்க்க முடியாத காரணத்திற்காக மட்டுமே, தலைமை ஆசிரியர்களை, சி.இ.ஓ.,க்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் நேரில் வரவழைக்க வேண்டும்.

6. சி.இ.ஓ., - டி.இ.ஓ., அலுவலகங்களில் தபால் கொடுத்தல் போன்ற சாதாரண பணிகளுக்கு, பள்ளி அலுவலக ஊழியர் அல்லது பணி சுமையில்லாத பிற ஆசிரியர்களை பயன்படுத்தலாம்.


இந்த விதிமுறைகள் அடங்கிய உத்தரவு கடிதம், பள்ளிக்கல்வித் துறை மூலம், சி.இ.ஓ., அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ் ஆசிரியர் பதவி உயர்வு - பிற ஆசிரியர்களை போல் 31.12.2012 வரை முன்னுரிமை பட்டியல் தயாரிக்க தழிழக அரசு புது உத்தரவிட்டுள்ளது.

தமிழ் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு பட்டியலை 1998ம் ஆண்டுக்கு முன்பாக அறிவித்து உத்தரவிட்ட நிலையில், 14 ஆண்டுகள் தளர்த்தி 2012 வரை தயாரிக்க அரசு புதிய உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள்,

நேரடி டி.இ.ஓ. (மாவட்ட கல்வி அதிகாரி) தேர்வுமுறையிலும் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர டி.என்.பி.எஸ்.சி. முடிவு

நேரடி டி.இ.ஓ. (மாவட்ட கல்வி அதிகாரி) தேர்வுமுறையிலும் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்துள்ளது.உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை ஆய்வு செய்வது, ஆசிரியர்களின் பணிகளை மேற்பார்வையிடுவது,

Thursday, January 10, 2013

பிப்., 8 க்குள் ஆசிரியர்கள் பதவி உயர்வு விண்ணப்பங்கள் வழங்க உத்தரவு

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு பட்டியல் விண்ணப்பங்களை பெற்று, பிப்ரவரி 8ம் தேதிக்குள் வழங்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களுக்கு சுவை உணவு தர... சத்துணவு அங்கன்வாடிகளில் "அட்சய பாத்திரம்'

பள்ளி மற்றும் அங்கன்வாடிகளில் செயல்படுத்தப்பட உள்ள, புதிய சத்துணவு திட்டத்தில், பயன்பெறுபவர்களும் பங்கு கொள்ளும் வகையில், "அட்சய பாத்திரம்' என்ற சிறப்பு திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது.

இரண்டு பட்டம் பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க தடை - திணமணி

அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒரே ஆண்டில் இரு பட்டம் பெற்றவர்களுக்கு, ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

நிர்ணயிக்கப்படும் A, B, C மற்றும் D பிரிவுகள் சார்ந்த அரசாணை விளக்கம்



  •  A Grade - தரவூதியம் ரூ.6,600 அதற்கு மேல

  • B Grade - தரவூதியம் ரூ.4,400 முதல் ரூ.6599 வரை

  • C Grade - தரவூதியம் ரூ.1,400 முதல் ரூ.4,399 வரை

  • D Grade - தரவூதியம் ரூ.1,399 அதற்கும் கீழ்

குரூப்-1 தேர்வு முடிவு வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி


கடந்த ஜூலை மாதத்தில் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு முடிவினை வெளியிட்டுள்ளது. துணை கலெக்டர் பதவி உட்பட 162 காலி பணியிடத்திற்கான இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிப்ரவரி மாதம் 1 முதல் 5 -ம் தேதி வரை நேர் காணல் நடைபெற உள்ளது. 

CLICK HERE DOWNLOAD & GET YOUR RESULT FOR GROUP -1 DATE OF EXAMINATION -28.7.12 TO 29.7.12

Wednesday, January 9, 2013

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் 500 இடங்களை பெறுபவர்களுக்கு பட்டய, பட்டப்படிப்பு முடிக்கும் வரை வருடம் ரூ 3000 பரிசுத்தொகை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட மாணவ & மாணவிகளுக்கு உயர் கல்வி படிக்க ரூ 3000 பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு

click here download to TN -PRESS RELEASE

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு பொங்கல் போனஸ் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு போனசாக 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு சிறப்பு போனசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு 500 ரூபாய் போனசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

பள்ளிகளில் சிறப்பு பிஎட் ஆசிரியர் தகுதியுள்ள ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடக்கோரிய மனுவுக்கு பதில் அளிக்க உயர் கல்வி செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பு பிஎட் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி, தகுதியுள்ள ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க, உயர் கல்வி செயலாள ருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

நேரடி தேர்வு மூலம் 24 உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் நியமனம் அறிவிப்பு விரைவில் வெளியாகும்

நேரடி தேர்வு மூலமாக விரைவில் 12 உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகளும், 12 மாவட்ட கல்வி அதிகாரிகளும் நியமிக்கப்பட உள்ளனர். நேரடி நியமனம் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலமாக உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளாக (ஏ.இ.இ.ஓ.) பணி அமர்த்தப்படுகிறார்கள்.

2012-2013 |TAMIL NADU SCHOOL EDUCATION DEPARTMENT | LIST OF DEO PROMOTION ( D.E.O & D.E.E.O )



1. மாவட்டக் கல்வி அலுவலர், தக்கலை
சி.பால்ராஜ்
முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்
முதன்மைக் கல்வி அலுவலகம்,
திண்டுக்கல்

2. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்வேலூர்
எஸ்.அருண்மொழி
தலைமை ஆசிரியர்
அரசு மேல்நிலைப் பள்ளி
கன்னிகைபேர்
திருவள்ளூர் மாவட்டம்

3. மெட்ரிக் பள்ளிகள் ஆய்வர்மதுரை
செ.எமரல்சி
தலைமை ஆசிரியர்
அரசு உயர்நிலைப் பள்ளி
பறக்கை
கன்னியாகுமரி மாவட்டம்

4. மாவட்டக் கல்வி அலுவலர் பெரியகுளம்
டி.சி.அனந்தநாயகி
தலைமை ஆசிரியர்
அரசு மேல்நிலைப் பள்ளி
அ.வல்லாளப்பட்டி
மதுரை மாவட்டம்

5. மாவட்டத் தொடக்க கல்வி அலுவலர்,தூத்துக்குடி
சீ.வசந்தா
தலைமை ஆசிரியர்
அரசு உயர்நிலைப் பள்ளி
வடமலைபுரம்
விருதுநகர் மாவட்டம்

6. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்நாகப்பட்டினம்
கா.பழனிவேல்
தலைமை ஆசிரியர்
அரசு (மகளிர்)மேல்நிலைப் பள்ளி
கள்ளக்குறிச்சி
விழுப்புரம் மாவட்டம்

7. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்,திருப்பூர்
கு.மா.காந்திமதி
தலைமை ஆசிரியர்
அரசு உயர்நிலைப் பள்ளி
அய்யம்பாளையம்
ஈரோடு மாவட்டம்   


6ம் வகுப்பு மாணவன் விஞ்ஞானியாக தேர்வு







ஈரோடு மாவட்ட மலைகிராமமான பர்கூர், தாமரைக்கரையில் பள்ளி செல்லா மற்றும் பள்ளி இடைநின்ற மாணவர்கள் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பின் உண்டு உறைவிட பள்ளி உள்ளது.


51 தலைமை ஆசிரியர்கள் டி.இ.ஓ.,க்களாக உயர்வு

பள்ளி கல்வித்துறையில், 51 தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகளாக, பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். காலியாக இருந்த டி.இ.ஓ., பணியிடங்களை நிரப்ப, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களில், தகுதி வாய்ந்தவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டன. இந்த பட்டியலுக்கு, துறையின் ஒப்புதல் கிடைத்ததை அடுத்து, 51 பேரும், டி.இ.ஓ.,க்களாக பதவி உயர்வு செய்து, உத்தரவு வெளியிடப்பட்டன.

ஜனவரி 10ம் தேதி சமூக அறிவியல் தேர்வு

பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, நேற்று நடக்க இருந்த சமூக அறிவியல் அரையாண்டு தேர்வு, மாநிலம் முழுவதும் ரத்து செய்யப்பட்டது. கேள்வித்தாள், முன்கூட்டியே, வெளியானதை தொடர்ந்து, தேர்வு ரத்து முடிவு எடுக்கப்பட்டது. இந்த தேர்வு, வரும் 10ம் தேதி நடக்கும் என பள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி நேரத்தை மாற்றியமைக்க பெற்றோர், ஆசிரியர்கள் எதிர்ப்பு

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், பள்ளிகளின் வேலை நேரத்தை மாற்றும் அரசின் முயற்சிக்கு, ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்ப்பு தெரித்துள்ளனர். ஆசிரியர்களுக்கு சிரமம் ஏற்படுவது ஒரு பக்கம் இருந்தாலும், மாணவ, மாணவியர் உடலாலும், உள்ளத்தாலும் கடுமையாக பாதிக்கப்படுவர் என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Sunday, January 6, 2013

ஓராண்டில் இரட்டை பட்டப்படிப்பு : தகுதியில் சேர ஆசிரியர்களுக்கு தடை என, சி.இ.ஓ.,க்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

தமிழகத்தில், அரசு பள்ளிகளில் நேரடி நியமனம், பதவி உயர்வுக்கு இரட்டை பட்டப்படிப்பு செல்லாது என, சி.இ.ஓ.,க்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு பெறும் ஆசிரியர்கள் ஒரே ஆண்டில் இரட்டை பட்டப்படிப்பு பெற்றிருந்தால், அந்த தகுதி அடிப்படையில், நேரடி நியமனம் செய்ய தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, சி.இ.ஓ.,க்களுக்கு கல்வித்துறை விடுத்துள்ள உத்தரவில், தொடக்க கல்வித்துறையில் பல்வேறு தொகுப்பு வழக்குகள் தொடர்பாக, சென்னை ஐகோர்ட் 2012 ஆக.,14ல் தீர்ப்பு வழங்கியது. அதில், அனைத்து பல்கலை.,களில் ஏற்கனவே பட்டம் பெற்ற ஒருவர், இரட்டை பட்டப் படிப்பு மூலம் ஓராண்டில் (2 டிகிரி) பெறும் பட்டத்தை 3 ஆண்டு பட்ட படிப்பிற்கு இணையாக கருத முடியாது. எனவே, பணி நியமனம், பதவி உயர்வுக்கு, இத்தகுதிகளை ஏற்க கூடாது என, உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான அரசு நலத்திட்டங்களை முன்னிறுத்தி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வீடு வீடாக ஆசிரியர்கள் சென்று ஆய்வு நடத்த வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது

மாணவர்களுக்கான அரசு நலத்திட் டங்களை முன்னிறுத்தி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வீடு வீடாக ஆசிரியர்கள் சென்று ஆய்வு நடத்த வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட் டுள்ளது. இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்ப தாவது:

தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் 100 பள்ளிகள் வீதம் 3,200 ஆங்கில வழி இணைப்பு பள்ளிகள் தொடங்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

தமிழகம் முழுவதும் அடுத்த கல்வி ஆண்டில் 3,200 ஆங்கில வழி இணைப்பு பள்ளிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆங்கில வழிக் கல்வி என்பது ஏழை மாணவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்து வந்தது.

ஜுன் முதல் பள்ளி, கல்லூரி நேரம் மாற்றம்… தமிழக அரசு அறிவிப்பு - தினகரன்

வரும் கல்வியாண்டு தொடக்கமான ஜூன் மாதம் முதல் பள்ளி துவங்கும் நேரம் காலை 7.30 மணிக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Saturday, January 5, 2013

டி.என்.பி.எஸ்.சி., நடப்பு ஆண்டில், 30 ஆயிரம் பேர் வரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளது

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு, 24 ஆயிரம் பேரை தேர்வு செய்து, சாதனை படைத்த, டி.என்.பி.எஸ்.சி., நடப்பு ஆண்டில், 30 ஆயிரம் பேர் வரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளது.

தஞ்சாவூர் தமிழ் பல்கலையில் பி.எட்., சேர்க்கை தேதி நீட்டிப்பு


தஞ்சாவூர் தமிழ் பல்கலையில், நுழைவுத் தேர்வின்றி தமிழ் வழி பி.எட்., படிப்புக்கான சேர்க்கை, ஜன.,19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இளங்கலை, முதுகலை படிப்பு முடித்தவர்கள், சேரலாம். அங்கீகாரம் பெற்ற நர்சரி, பிரைமரி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை, மெட்ரிக் பள்ளிகளில் குறைந்த பட்சம் இரண்டாண்டுகள் பணியும், தற்போது பணியில் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். முகவரி: தமிழ்ப் பல்கலை கல்வி மையம், 10, கல்பாலம் ரோடு, கோரிப்பாளையம், மதுரை - 2, 36, மேல வடம் போக்கித் தெரு, மதுரை-625 001. போன்: 90433 43743.

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் தொடங்கும் நேரத்தை காலை 7.30 மணிக்கு மாற்ற அரசு ஆலோசனை.

பேருந்துகளில் ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் அதனால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்கும் வகையில் கல்வி நிலையங்களைத் தொடங்கும் நேரத்தை மாற்றுவது குறித்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில்

கூட்டுறவு சங்க உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வுக்கு அழைப்புக் கடிதம் பெற்றவர்கள் தங்களது விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், பல்வேறு கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள 3,607 உதவியாளர் நிலையிலான பணியிடங்களை நிரப்புவதற்காக கூட்டுறவுச் சங்கங்களின் மாநில ஆள்சேர்ப்பு நிலையம் 09.12.2012 அன்று எழுத்துத் தேர்வினை நடத்தி,...

Friday, January 4, 2013

சென்னையில் பள்ளி நேரத்தை மாற்ற போக்குவரத்து துறை செயலாளர் அறிக்கை

சென்னையில் பள்ளி நேரத்தை மாற்ற சென்னை போக்குவரத்து துறை செயலாளர் சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். சென்னை கந்தன்சாவடியில் பஸ் மீது பின்னால் வந்த லாரி மோதியதில், படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் பலியானார்கள்.

16 பேர் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள் முதுகலை ஆசிரியர்களாக தேர்சி பெற்று பணி நியமன ஆணை பெற்றனர்.


ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2010-11ஆம் ஆண்டில் நேரடி போட்டித்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 34 உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள் தற்போது பல்வேறு மாவட்டங்களில் பயிற்சி உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.இந்நிலையில் இவர்களில் 16 பேர் முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்விலும்...

Thursday, January 3, 2013

பட்ஜெட்டில் கல்விக்கான நிதி 7 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு

இந்திய பொருளாதாரம் சரிவடைந்து வருவதால் அரசின் செலவை கட்டுப்படுத்த மத்திய பட்ஜெட்டில் கல்விக்கான நிதியில் 7 சதவீதத்தை குறைக்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

அமைச்சகம் தகவல் :

கல்வித் துறை நடவடிக்கை : கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாதுகாப்பு

டில்லி மாணவி பாலியல்பலாத்கார சம்பவம் எதிரொலியாக, கல்லூரிகளில் துறைவாரியாக மாணவிகளின் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து, கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கை: கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில்,


விரைவில் முடிவுகள்: டிஎன்பிஎஸ்சி

குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வு முடிவுகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் குரூப் 1 தேர்வுகளையும், நவம்பரில் குரூப் 2 தேர்வுகளையும் டி.என்.பி.எஸ்.சி., நடத்தியது. தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக தேர்வு முடிவுகள் நிறுத்த வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க திட்டம் : விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுரை

"வரும் கல்வியாண்டில், மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வித்துறை, ஆரம்பப் பள்ளி மாணவர் சேர்க்கையில், 100 சதவீதத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற முனைப்புடன், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Wednesday, January 2, 2013

மாவட்டந்தோறும் மகளிர் விரைவு நீதிமன்றம் அரசு அலுவலகங்களில் சிசிடிவி கண்காணிப்பு : ஜெயலலிதா அறிவிப்பு

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் குறைவாகவே இருந்தாலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குறிப்பாக, பாலியல் பலாத்காரம் இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும் என்பதற்காக கீழ்க்காணும் உத்தரவுகளை முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்துள்ளார்.

10ம் வகுப்பு செய்முறை தேர்வு 40 மாணவர்கள் இருந்தால்தான் தேர்வு மையத்துக்கு அனுமதி : அரசு தேர்வுகள் துறை உத்தரவு

பத்தாம் வகுப்புக்கான அரசு பொது தேர்வு மார்ச் 27ம் தேதி தொடங்க உள்ளது. அறிவியல் பாடங்களுக்கான செய்முறைத்தேர்வு பிப்ரவரி மாதத்தில் நடக்க உள்ளது. தேர்வு மையம் அமைப்பது குறித்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் துறை அனுப்பியுள்ள உத்தரவு:

விளக்கம் கேட்கிறது கல்வித்துறை அங்கீகாரம் பெறாத பள்ளிகள் மீது நடவடிக்கைகள்

அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீதான நடவடிக்கை குறித்து தொடக்கக் கல்வித்துறை விளக்கம் கேட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வி இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

Tuesday, January 1, 2013

2012 - 13ஆம் நிதியாண்டில் நீங்கள் செலுத்த வேண்டிய வருமான வரி?


ஆண்டு வருமானத்தை பொறுத்து தனிப்பட்ட நபருக்கான வரி விதிப்பு 4 பிரிவுகளில் விதிக்கப்படுகிறது.
முதல் பிரிவு (பொது-)வருமானம் ரூ.2 லட்சத்திற்குள் - வரி இல்லை.
வருமானம் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை - ரூ.2 லட்சம் வரை வரி இல்லை. அதற்கு மேல் ஈட்டும் தொகையில் 10 சதவீதம் வரி.

குரூப் 1 தேர்வு: ஜனவரி 7ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு


CLICK HERE -TNPSC - செய்திக் குறிப்பு - எண் -336 

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வுக்கு ஆன் லைனில் விண்ணப்பிப்பதற்கான தேதி ஜனவரி 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 9ம் தேதி வரை பணம் செலுத்தலாம். தேர்வு தேதியும் டிசம்பர் 31லிருந்து ஜனவரி 27க்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.