கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Friday, March 1, 2013

    10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு ஆசிரியர்களுக்கு உழைப்பூதியம் : அரசுத்தேர்வுத்துறை உத்தரவு

    பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு புறத்தேர்வாளர்களாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு உழைப்பூதியம் வழங்க, அரசுத்தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு நடத்தி, 25 மதிப்பெண் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்த நிலையில், செய்முறை தேர்வில் புறத்தேர்வாளர்களாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு,இது வரை உழைப்பூதியம் வழங்கப்படவில்லை. இதனிடையே,இந்தாண்டு பத்தாம் வகுப்பு செய்முறைத்தேர்வு, பிப்., 20 முதல் 28 ம் தேதி வரை நடத்தப்பட்டது. புறத்தேர்வாளர்களுக்கு ஒரு விடைத்தாள் திருத்த 3 ரூபாய் வீதம் உழைப்பூதியம் வழங்க, அரசுத்தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டுக்கான உழைப்பூதியமும் வழங்கவும், ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    No comments:

    Post a Comment