மாவட்ட கல்வி அலுவலகங்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில், இருக்கை கண்காணிப்பாளர்களாக, பணியாற்றி வருபவர்களில், பணிமூப்பு அடிப்படையில், 100 பேர், கண்காணிப்பாளர்களாக, நேற்று பதவி உயர்வு செய்யப்பட்டனர்.இதற்கான கலந்தாய்வு, "ஆன்-லைன்' முறையில், நடந்தது.
துறை இணை இயக்குனர் கண்ணப்பன் கையெழுத்திட்ட உத்தரவு கடிதங்கள், உடனுக்குடன், ஆன்-லைன் மூலம், சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், பதிவிறக்கம் செய்து வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, உதவியாளர்களாக இருப்பவர்களில், 100 பேர், இருக்கை கண்காணிப்பாளர்களாக, பதவி உயர்வு செய்யப்படுவர் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment