கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Saturday, March 16, 2013

    26 ஒன்றியங்களில் மாதிரி பள்ளிகள் துவக்கவும் பணியிடங்கள் உருவாக்கவும் முதல்வர் உத்தரவு

    தமிழகத்தில் 26 ஒன்றியங்களில் புதிய மாதிரிப் பள்ளிகள் துவங்குவதற்கும் அதற்கான பணியிடங்கள் உருவாக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அரசு அறிவிப்பு:.. பள்ளிகள் இல்லாத கிராமமே இருக்கக்கூடாது என்பதன் அடிப்படையில் அனைத்து கிராமங்கள் மற்றும் அதன் அருகில் பள்ளிகள் தொடங்குதல், கட்டணமில்லா கல்வி அளித்தல், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் வழங்குதல், கல்விக்குத் தேவையான அத்தனை உபகரணங்களையும் விலையில்லாமல் வழங்குதல், மிதி வண்டி வழங்குதல், மேல்நிலை கல்வி கற்க ஊக்கத் தொகை வழங்குதல் போன்ற எண்ணிலடங்கா திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.கல்வியில் பின்தங்கியுள்ள ஒன்றியங்களில் வசிக்கும் மாணவ, மாணவிகள், மாநிலத்தின் இதர பகுதிகளில் வசிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு இணையான சீரான கல்வி பெறவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், பின் தங்கிய ஒன்றியங்களில் மாதிரி பள்ளிகள் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்பொழுது அரியலூர் மாவட்டம், அரியலூர் ஒன்றியம், கடலூர் மாவட்டம், மங்களூர் ஒன்றியம், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம்

    மற்றும் பாலக்கோடு ஒன்றியங்கள், ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம், தாளவாடி மற்றும் அந்தியூர் ஒன்றியங்கள், திருப்பூர் மாவட்டத்தில் குண்டடம் ஒன்றியம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளி மற்றும் வேப்பனஹள்ளி ஒன்றியங்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பூர் ஒன்றியம், சேலம் மாவட்டத்தில் நங்கவள்ளி, சங்ககிரி, வீரபாண்டி, பெத்தநாயக்கன் பாளையம், தாரமங்கலம், கொளத்தூர், மகுடஞ்சாவடி, பனமரத்துப்பட்டி, ஏற்காடு ஆகிய ஒன்றியங்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாதுமலை ஒன்றியம், விழுப்புரம் மாவட்டத்தில் திருநாவலூர், திருவெண்ணைநல்லூர், சங்கராபுரம் (கல்வராயன் மலை), உளுந்தூர்பேட்டை ஒன்றியங்கள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் மல்லசமுத்தரம் ஒன்றியம் என 26 ஒன்றியங்களில், ஒன்றியம் ஒன்றுக்கு ஒரு மாதிரி பள்ளி வீதம் 26 மாதிரி பள்ளிகள் துவக்குவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 6 முதல் 12 ஆம் வகுப்புகள் கொண்ட பள்ளிகளாக 2013-14 ஆம் கல்வி ஆண்டு முதல் இந்தப் பள்ளிகள் செயல்படும். இந்தப் பள்ளிகளுக்கான சொந்தக் கட்டடம் கட்டும் வரை, இப் பள்ளிகள் அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும்.26 ஒன்றியங்களில் உருவாக்கப்படவிருக்கும் மாதிரிப் பள்ளிகளில் பணியாற்றுவதற்காக, ஒவ்வொரு பள்ளிக்கும் தலைமையாசிரியர் பணியிடம் 1, முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் 7, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 5, கணினி ஆசிரியர் பணியிடம் 1, உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் 1, இசை ஆசிரியர் பணியிடம் 1, ஓவிய ஆசிரியர் பணியிடம் 1 என 17 ஆசிரியர் பணியிடங்களும், இளநிலை உதவியாளர் பணியிடம் 1, நூலகர் பணியிடம் 1, ஆய்வக உதவியாளர் பணியிடம் 1, அலுவலக உதவியாளர் பணியிடம் 1, கூட்டுபவர்/துப்புரவு பணியாளர் பணியிடம் 1, இரவு காவலாளி பணியிடம் 1, தோட்டக்காரர் பணியிடம் 1 என 7 ஆசிரியர் அல்லாத பணியிடங்களை உருவாக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

    No comments:

    Post a Comment