தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தின், 6வது பட்டமளிப்பு விழா, சென்னை பல்கலைக் கழக வளாகத்தில் நேற்று நடந்தது. துணைவேந்தர் சந்திர காந்தா, வரவேற்புரையாற்றினார். கவர்னர் ரோசய்யா, தலைமை தாங்கினார். விழாவில், 35,432 பேருக்கு இளங்கலை பட்டமும்; 6,176 பேருக்கு முதுகலை பட்டமும்; 377 பேருக்கு, எம்.பில்., பட்டமும்; 5,937 பேருக்கு... பட்டய சான்றிதழும்; 198 பேருக்கு முதுகலை பட்டய சான்றிதழும் வழங்கப்பட்டன.
உயர் கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது: வெளிநாடுகளில் திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் படிப்பது, பெருமையாக கருதப்படுகிறது. பிரிட்டிஷ் திறந்தநிலை பல்கலைக் கழகம் உலக புகழ் பெற்றது. பட்டமளிப்பு விழாவில், பொதுவாக, ஒரே வயதினரை மட்டுமே பார்க்க முடியும். ஆனால், இங்கு இளைஞர்கள், நடுத்தர மற்றும் முதியவர்கள் என, அனைவரையும் காண முடிகிறது. வாழ்நாள் முழுவதும் ஒருவர் கற்பதற்கான வாய்ப்பை, திறந்தநிலை பல்கலைக் கழகம் வழங்குகிறது. திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் படித்த பலர், யு.பி.எஸ்.சி., - டி.என்.பி.எஸ்.சி., - டி.இ.டி., தேர்வாகி உள்ளனர். இவ்வாறு பழனியப்பன் கூறினார். பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரகாந்தா கூறுகையில், ""மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு பல்நோக்கு பாடப்புத்தகங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. இணையவழி மாணவர் சேர்க்கை மற்றும் குறுஞ்செய்தி முறையில், தகவல் பரிமாற்ற முறையை அறிமுகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது,'' என்றார்.
No comments:
Post a Comment