கல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • Tuesday, December 10, 2013

    மூன்றாம் பருவ பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் மற்றும் நான்கு ஜோடி சீருடைகள் - ஜன., 2ல் இலவசமாக வினியோகம்

    வரும், 23ம் தேதி வரை, அரையாண்டு தேர்வுகள் நடக்கின்றன; அதன்பின், தேர்வு விடுமுறை. ஜன., 2ல், மீண்டும் பள்ளிகள் திறக்கும். அப்போது, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு, மூன்றாம் பருவ பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் மற்றும் நான்கு ஜோடி சீருடைகள், இலவசமாக வழங்கப்படும்.


    இதற்கான ஏற்பாடுகள், இப்போதே நடந்து வருகின்றன. இவ்வாறு, அவர் தெரிவித்தார். தமிழ்நாடு பாட நூல் கழக செயலர், அன்பழகன் கூறியதாவது:

    ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்காக, 2.4 கோடி பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன. 70 சதவீத புத்தகங்கள், மாவட்டங்களுக்கு, அனுப்பப்பட்டு விட்டன. 20ம் தேதிக்குள், 30 சதவீத புத்தகங்களும், மாவட்டங்களுக்கு சென்று விடும். எனவே, தேர்வு விடுமுறைக்குப் பின், பள்ளி திறந்த முதல் நாளன்றே, இலவச புத்தகங்களும், நோட்டுகளும் வழங்கப்படும். அடுத்த ஆண்டுக்காக, பிளஸ் 1, பிளஸ் 2 பாட புத்தகங்களை அச்சிடவும், ஏற்பாடு செய்துவிட்டோம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

    No comments:

    Post a Comment